Sunday, 17 March 2013

வருத்தம்!

பிரிவுகள்
புள்ளி
வைக்கும்போது,
உறவுகள்
கோலம்
போடுகிறது!

மனிதன்
நசுங்கும்போது
உலகம்
சிரிக்கிறது!

குற்றுச்செடி
தவிக்கும்போது
ஆலமரம்
ஆரவாரம்
செய்கிறது!

இறந்த  பின்னே
உடல்கள்
கழுகுக்கு
இறையாகிறது!

மாற்றங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு பகுதிக்கு
மகிழ்ச்சிதான்
தருகிறது!

ஆனால்
உனை பிரிந்து
நானும்,
எனை பிரிந்து
நீயும்,
வருத்தமாய்
இருக்கிறோம்!

நாமிருவர்க்கு
மகிழ்ச்சி
எப்போது?

No comments:

Post a Comment