Sunday, 10 March 2013

இறப்பு!

துன்பப்படுகிறவனை
அமைதிக்கு
கொண்டு செல்லும்
அன்பு தாலாட்டு!

நல்லவனுக்கு
அவசரமாய்
விடை கொடுக்கும்
நயவஞ்சகன்!

நோயாளியின்
நோய் கொடுமையை
நொடிப்பொழுதில்
சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்!

தளர்ந்து போன
முதியவர்க்கு
உடனே கிடைக்கும்
கையூட்டு!

வாழத் துடிப்பவனை
வளைத்து போட்டு
வசைபாடி,
போக துடிப்பவனை
இருக்க வைத்து
விளையாடி,
இன்பம் காணும்
இனிய பொருள்!

தானாய்
செய்துகொள்ளும்
தற்கொலையை
தனக்குள்ளே
அடக்கி கொள்ளும்
கொடிய பொருள்!

மனிதனின் வாழ்வை
அடிக்கடி பயமுறுத்தி
அவன் முன்னேற்றத்திற்கு
தடையாய் அமைந்த
பெருஞ்சுவர்!

இறந்த பின்னால்
தீயவனையும்
நல்லவனாயாக்கும்
உயர்ந்த ஆசிரியன்!

இறப்பே வா!
மக்களை அமைதியில்
தாலாட்டு!

No comments:

Post a Comment