Saturday, 16 March 2013

அவசர மோகத்தின் கருகல்!

மலர்ந்த பூக்கள்
உதிர துடிக்கின்றன!

அருகினிலே
ஓடிவரும்
ஆற்று வெள்ளம்!

பூக்களின்
வாசம் பெற
காத்து நிற்கும்
தனிமனிதன்!

கள்ளமாய்
மலர்களை
அடித்து செல்ல
துடிக்கும்
அசுரக்காற்று!

பூக்களுக்கு
காத்திருக்கும்
ஆற்று வெள்ளம்,
தனி மனிதன்,
அசுரக்காற்று!
யாருக்கு பூக்கள்?

அவசரமாய்
கதிரவனின்
காம பார்வை,
பூக்கள்
கருகிவிட்டன
மோகத்தால்!




No comments:

Post a Comment