Wednesday, 28 August 2013
Tuesday, 27 August 2013
Sunday, 25 August 2013
சுயநலம்!
பிறந்தேன்...
பிறந்த பெருமை
தேடிக் கொள்ள
முயன்றதில்லை!
வளர்ந்தேன்...
வளர்ச்சியின்
முழு உருவை
காட்டிக் கொள்ள
விரும்பியது
இல்லை!
படித்தேன்...
படித்த பெருமை
என்னவென்று
யாருக்கும்
காட்டியதில்லை!
காதல் செய்தேன்...
அன்பை கூட
எனதாக்கிக்கொள்ள
முயன்றதில்லை!
வாழ்கிறேன்...
எதற்காக வாழ்கிறேன்
என்று சிந்தித்ததில்லை!
நான்...
ஒரு பகடைக்காய்!
உருட்டுபவர்களின்
இன்பத்துக்காகவே
வாழ்கிறேன்!
சுயநலம்...
எனது சாவுக்கு
பின்னாவது
வரட்டும்!
பிறந்த பெருமை
தேடிக் கொள்ள
முயன்றதில்லை!
வளர்ந்தேன்...
வளர்ச்சியின்
முழு உருவை
காட்டிக் கொள்ள
விரும்பியது
இல்லை!
படித்தேன்...
படித்த பெருமை
என்னவென்று
யாருக்கும்
காட்டியதில்லை!
காதல் செய்தேன்...
அன்பை கூட
எனதாக்கிக்கொள்ள
முயன்றதில்லை!
வாழ்கிறேன்...
எதற்காக வாழ்கிறேன்
என்று சிந்தித்ததில்லை!
நான்...
ஒரு பகடைக்காய்!
உருட்டுபவர்களின்
இன்பத்துக்காகவே
வாழ்கிறேன்!
சுயநலம்...
எனது சாவுக்கு
பின்னாவது
வரட்டும்!
Saturday, 24 August 2013
Friday, 23 August 2013
அவமானங்கள்!
சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்
வாழ்க்கை என்னும்
வைபோகத்தில்
உரசினேன்!
இலகுவாய்
உயிரின் பிணைப்பை
காற்றிடைப்பட்ட
தூசியாய்...
அலைக்கழிக்க
செய்த இந்த
அற்ப மனதுக்குள்,
அன்பெனும்
அலைகளை
நான் எங்ஙனம்
பாய்ச்சுவேன்?
நான் என்றென்றும்
உயிர் வாழ
இனியுமா...
அவமானங்கள்?
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்
வாழ்க்கை என்னும்
வைபோகத்தில்
உரசினேன்!
இலகுவாய்
உயிரின் பிணைப்பை
காற்றிடைப்பட்ட
தூசியாய்...
அலைக்கழிக்க
செய்த இந்த
அற்ப மனதுக்குள்,
அன்பெனும்
அலைகளை
நான் எங்ஙனம்
பாய்ச்சுவேன்?
நான் என்றென்றும்
உயிர் வாழ
இனியுமா...
அவமானங்கள்?
Thursday, 22 August 2013
Tuesday, 20 August 2013
எழுப்புவாயா?
நீண்ட
தினங்களுக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான் கண்
விழித்திருக்கிறேன்!
எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில்...
நான் காம்பீரம்
கொண்டேன்!
என் கோபக்கனலில்
பல பெண்களை
தொலைத்தும்
விட்டேன்!
அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்!
மலையாய் இருந்த
நான் நிழலாய்!
இனி சோர்ந்துவிட்ட
சிங்கத்துக்கு காதலை
நிலாச் சோறாய் ஊட்டி,
புத்துணர்ச்சி தந்து
எழுப்புவாயா?
தினங்களுக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான் கண்
விழித்திருக்கிறேன்!
எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில்...
நான் காம்பீரம்
கொண்டேன்!
என் கோபக்கனலில்
பல பெண்களை
தொலைத்தும்
விட்டேன்!
அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்!
மலையாய் இருந்த
நான் நிழலாய்!
இனி சோர்ந்துவிட்ட
சிங்கத்துக்கு காதலை
நிலாச் சோறாய் ஊட்டி,
புத்துணர்ச்சி தந்து
எழுப்புவாயா?
Monday, 19 August 2013
Saturday, 17 August 2013
Friday, 16 August 2013
Thursday, 15 August 2013
Wednesday, 14 August 2013
Tuesday, 13 August 2013
மூச்சுக் காற்று!
இளமுகில்
கதிரவனையும்
தழுவும்,
சந்திரனையும்
தழுவும்!
இளந்தென்றல்
மலையின்
உச்சியையும்
தழுவும்
கடலின்
குளிர்ச்சியையும்
தழுவும்!
மாலைவெய்யில்
வானையும்
தழுவும்,
மண்ணையும்
தழுவும்!
கண்ணே!
நம் மூச்சுக்காற்று...
உன்னையும்
என்னையும்
மட்டும்தான்
தழுவும்!
அது காதல்
வெப்பத்தில்
நம்மை...
இணைக்கும்!
கதிரவனையும்
தழுவும்,
சந்திரனையும்
தழுவும்!
இளந்தென்றல்
மலையின்
உச்சியையும்
தழுவும்
கடலின்
குளிர்ச்சியையும்
தழுவும்!
மாலைவெய்யில்
வானையும்
தழுவும்,
மண்ணையும்
தழுவும்!
கண்ணே!
நம் மூச்சுக்காற்று...
உன்னையும்
என்னையும்
மட்டும்தான்
தழுவும்!
அது காதல்
வெப்பத்தில்
நம்மை...
இணைக்கும்!
Monday, 12 August 2013
Sunday, 11 August 2013
Saturday, 10 August 2013
சாகத் துடிக்கிறேன்!
அன்பு வழி
உணர்ச்சிக்கு
நான் அடிமை!
பகிர்மானங்கள்
ஊடல்களாய்
மாறினாலும்
கவலையில்லை!
அது
அன்பின் வழியா?
அதனை
சிந்திக்கிறேன்!
நான் என்னையே
நேசிக்கிறேன்!
நான்
என்னுடனேயே
வாழ்கிறேன்!
எனக்காக யாரும்
அன்பு...
செய்யவில்லை!
உயர்வுகளும்
தாழ்வுகளும்
என்னை...
உருப்பெறாமலா
செய்துவிடும்!
உறுதியாய்
எதிர் நீச்சல்
நீந்துவேன்!
அன்புக்காக
சாகவும்...
துடிக்கிறேன்!
உணர்ச்சிக்கு
நான் அடிமை!
பகிர்மானங்கள்
ஊடல்களாய்
மாறினாலும்
கவலையில்லை!
அது
அன்பின் வழியா?
அதனை
சிந்திக்கிறேன்!
நான் என்னையே
நேசிக்கிறேன்!
நான்
என்னுடனேயே
வாழ்கிறேன்!
எனக்காக யாரும்
அன்பு...
செய்யவில்லை!
உயர்வுகளும்
தாழ்வுகளும்
என்னை...
உருப்பெறாமலா
செய்துவிடும்!
உறுதியாய்
எதிர் நீச்சல்
நீந்துவேன்!
அன்புக்காக
சாகவும்...
துடிக்கிறேன்!
Friday, 9 August 2013
Thursday, 8 August 2013
Wednesday, 7 August 2013
Tuesday, 6 August 2013
Monday, 5 August 2013
குமட்டுகிறது...
குமட்டிய பாலை
கைகளில் வாங்கி,
அவசரமாய் செய்த
அசிங்கங்களை
அழகாய் சுத்தம்
செய்து....
முகத்தை
வெண்மையாக்கி,
பொட்டுவைத்து
தலை வாரி,
பூவும் சூடி,
தன் மகளின்
அழகை ரசித்து
அன்பு முத்தம்
தந்த தாய்...
முதியோர்
இல்லத்தில்
மகளை பார்த்து
கை நீட்டி...
கூப்பிட்டாள்!
மகளோ...
பார்த்தால் குமட்டுகிறது
வாருங்கள் வீட்டிற்கு
செல்வோம் என்று,
கணவனின் கைப்பிடித்து
இழுத்தாள்!
கைகளில் வாங்கி,
அவசரமாய் செய்த
அசிங்கங்களை
அழகாய் சுத்தம்
செய்து....
முகத்தை
வெண்மையாக்கி,
பொட்டுவைத்து
தலை வாரி,
பூவும் சூடி,
தன் மகளின்
அழகை ரசித்து
அன்பு முத்தம்
தந்த தாய்...
முதியோர்
இல்லத்தில்
மகளை பார்த்து
கை நீட்டி...
கூப்பிட்டாள்!
மகளோ...
பார்த்தால் குமட்டுகிறது
வாருங்கள் வீட்டிற்கு
செல்வோம் என்று,
கணவனின் கைப்பிடித்து
இழுத்தாள்!
Sunday, 4 August 2013
Saturday, 3 August 2013
Friday, 2 August 2013
காத்திருப்பேன்.... (கிராமத்து வாசம்)
மருவாத வேண்டி
என் செல்ல ராசா
நீங்க பேருதவி
செஞ்சீக!
மஞ்ச தன்ணியெடுத்து
மச்சானோட விளையாட
ஓடோடி வந்துபுட்டேன்!
பட்டினத்து கப்பலாட்டம்
தத்தளிச்சு நிக்கிறேனே,
பழசையெல்லாம்
மனசில் வச்சி,
பாழும் தூணோட
முட்டி மோதி
அழுகிறேனே!
என் பொழப்பையெல்லாம்
மறந்துபுட்டு
போற வழி பாத்து நின்னேன்!
எக்கு தப்பாய் மனசு வச்சி
ஏங்கி போயி நிக்கிறேனே!
குதிரைக்கு சாட்டை வாங்க
கொடிகாட்டு சந்தைக்கு
போன மச்சான்,
உங்க செல்ல கிறுக்கிக்கு
மஞ்சக் கயறும், மாலயும்
மறக்காம வாங்கி வாங்க!
மந்தவெளி வாக மரம்
என்ன வரச்சொல்லி
கூப்பிடுதைய்யா!
சித்தங்கலங்கி, கயறு எடுத்து,
தூக்குபோட்டு, செத்து போக
போறேன் மச்சான்!
மன்னவன் உங்க கைபட்ட மேனி,
மண்ணு திங்க போகுதைய்யா!
நான் தமிழச்சி அதனால
தரங்கெட்டு போக மாட்டேன்,
காத்திருப்பேன் ஆச மச்சான்
உனக்காக...
கடைசியில் பைத்தியமாய்
இறந்திருப்பேன் எனக்காக...!
என் செல்ல ராசா
நீங்க பேருதவி
செஞ்சீக!
மஞ்ச தன்ணியெடுத்து
மச்சானோட விளையாட
ஓடோடி வந்துபுட்டேன்!
பட்டினத்து கப்பலாட்டம்
தத்தளிச்சு நிக்கிறேனே,
பழசையெல்லாம்
மனசில் வச்சி,
பாழும் தூணோட
முட்டி மோதி
அழுகிறேனே!
என் பொழப்பையெல்லாம்
மறந்துபுட்டு
போற வழி பாத்து நின்னேன்!
எக்கு தப்பாய் மனசு வச்சி
ஏங்கி போயி நிக்கிறேனே!
குதிரைக்கு சாட்டை வாங்க
கொடிகாட்டு சந்தைக்கு
போன மச்சான்,
உங்க செல்ல கிறுக்கிக்கு
மஞ்சக் கயறும், மாலயும்
மறக்காம வாங்கி வாங்க!
மந்தவெளி வாக மரம்
என்ன வரச்சொல்லி
கூப்பிடுதைய்யா!
சித்தங்கலங்கி, கயறு எடுத்து,
தூக்குபோட்டு, செத்து போக
போறேன் மச்சான்!
மன்னவன் உங்க கைபட்ட மேனி,
மண்ணு திங்க போகுதைய்யா!
நான் தமிழச்சி அதனால
தரங்கெட்டு போக மாட்டேன்,
காத்திருப்பேன் ஆச மச்சான்
உனக்காக...
கடைசியில் பைத்தியமாய்
இறந்திருப்பேன் எனக்காக...!
Thursday, 1 August 2013
Subscribe to:
Posts (Atom)























