Sunday, 25 August 2013

சுயநலம்!

பிறந்தேன்...
பிறந்த பெருமை
தேடிக் கொள்ள
முயன்றதில்லை!

வளர்ந்தேன்...
வளர்ச்சியின்
முழு உருவை
காட்டிக் கொள்ள
விரும்பியது
இல்லை!

படித்தேன்...
படித்த பெருமை
என்னவென்று
யாருக்கும்
காட்டியதில்லை!


காதல் செய்தேன்...
அன்பை கூட
எனதாக்கிக்கொள்ள
முயன்றதில்லை!

வாழ்கிறேன்...
எதற்காக வாழ்கிறேன்
என்று சிந்தித்ததில்லை!

நான்...
ஒரு பகடைக்காய்!
உருட்டுபவர்களின்
இன்பத்துக்காகவே
வாழ்கிறேன்!

சுயநலம்...
எனது சாவுக்கு
பின்னாவது
வரட்டும்!

No comments:

Post a Comment