Friday, 23 August 2013

அவமானங்கள்!

சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்
வாழ்க்கை என்னும்
வைபோகத்தில்
உரசினேன்!


இலகுவாய்
உயிரின் பிணைப்பை
காற்றிடைப்பட்ட
தூசியாய்...
அலைக்கழிக்க
செய்த இந்த
அற்ப மனதுக்குள்,
அன்பெனும்
அலைகளை
நான் எங்ஙனம்
பாய்ச்சுவேன்?

நான் என்றென்றும்
உயிர் வாழ
இனியுமா...
அவமானங்கள்?

No comments:

Post a Comment