Thursday, 20 March 2014

குருடு!

முகம் தெரியா ஓவியம்
மின்னலாய் மறைந்தது!

மூன்றாம் பிறை போல்
அவசரமாய் ஒளியிழந்தது!

அதோ! அந்த சிந்திக்க தவறிய
சின்ன ஓவியம் காட்சியாய்!



மனம் மகிழ்ந்த நான்
கற்பனையில் மிதந்தபோது...

உயிர் பெற்ற ஓவியம்
குருடாக்கியது என் கண்ணை!

இனி எனக்கு கண்கள் உண்டு
காட்சி இல்லை...காதல் தோல்வி!

Wednesday, 19 March 2014

யாருக்காக?

நெஞ்சத்தின்
வலியாய் அவள்!

இன்பத்தின்
இடையூறாய் அவள்!

 
துன்பத்தின்
ஓலங்களாய் அவள்!

என்னை சுரம்மீட்ட
துடித்தவள் அவள்!

நான்...யாருக்காக?

Tuesday, 18 March 2014

அழாதே தம்பி அழாதே!

அப்பாவும் அடிக்கவில்லை,
அம்மாவும் அடிக்கவில்லை,
மாமாவும் திட்டவில்லை,
மாமியும் கரிச்சி கொட்டவில்லை!

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

அண்ணனும் எதிர்க்கவில்லை,
அண்ணியும் ஒதுங்கவில்லை,
அக்காவும், தங்கையும்,
மச்சானும் தவிர்க்கவில்லை!

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

 
உன் நெஞ்சத்தில் விளையாடி,
உன் கற்பனையை கனவாக்கி,
உன்னை ஏமாற்றி மறைந்தாளே...
அவளை நினைத்தா அழுகிறாய்?

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

காதல் இருள் படிந்த உலகில்
உல்லாசம் தரும் வெளிச்சம்...
இல்லை என்றா அழுகிறாய்?

ஏனழுதாய் சொல்லி அழு?
ஏனழுதாய் சொல்லி அழு?

உன் மனதின் சுமை குறைக்க...
உலகின் ஒரு மூலையில்
அரவணைக்க நானிருக்கேன்!
அழாதே தம்பி அழாதே!
 

Monday, 10 March 2014

அப்பா!


அன்புள்ள அப்பா!
எனக்கு...

முன்மாதிரியாய் 
திகழ்ந்து,
என் இளம் வயதில் 

ஒரு தாயாய்,
தகப்பனாய், 

தமக்கையாய்,
சகோதரனாய்,
நல்ல நண்பனாய், 

சிறந்ததோர் 
ஆசிரியனாய்
பகுத்தறிவை 

அள்ளி தந்துவிட்டு,
 


என்னை...
தவிக்க விட்டு 
பிரிந்த தங்களின்...
நினைவுகளை 

அசை போடுகிறேன்!
அப்பா! தங்களின் 

நினைவுகள்...
இப்போதும் 

என் சுவாசமாய், 
என் உயிராய்!

Sunday, 9 March 2014

கருப்பு நிலா!

வெண்ணிலவே!
உன் அழகை காண
காதலராய்...
ஓடோடி வந்தோம்!



என்னவளின் 
அழகு கண்டு
வெட்கத்தால்...
முகம் மறைத்தாயோ?

உனக்கும் தான்
எவ்வளவு பொறாமை
என் காதலியின் அழகில்?
சிய்ய்! இப்போது...

நீ கருப்பு நிலா!

தமிழ்...காதல்...


தமிழும், தமிழ்மொழியும்
எனது தாகம்!
தமிழனும், தமிழினமும்
எனது மோகம்!
தமிழனின் ஒற்றுமையை
நோக்கி எனது வேகம்!
 


தமிழன் சிறிய நாட்டில்
குடிபுகுந்த வந்தேறி அல்ல!
புறநானூற்றில் வீரம் கற்ற
தமிழன் கோழையும் அல்ல!
ஆலமரமாய் தமிழகம்...
விழுதுகளாய் உலகத்தமிழர்!
வீரமும் நமதே! வெற்றியும் நமதே!
நாளையும் நமதே!

உன்னை விட...

உன் பளிச்சிடும் 
முகத்தைவிட
அந்த...

கறை படிந்த 
வட்ட நிலா 
அழகில்லை!
 

உன் எழில் கொஞ்சும் 
மேனியை விட
பசுமை கொஞ்சும் 

மலைகள் அழகில்லை!
 


என் இதயம் வருடும் 
உன் செவ்விதழுக்கு முன்
அந்த செவ்வானம் 

அழகில்லை!
 

ஆனாலும்... 
என் காதலை விட...
நீ அழகில்லை!

அம்மா...


உன் உறவை
தொலைத்துவிட்டு
உன்னை தேடுகிறேன் 

காப்பகத்தில்!
 

என்னை 
பத்து மாதம் 
சுமந்ததால்...
 


உன்னை 
மாதந்தோறும் 
பார்க்கிறேன்
முதியோர் 

இல்லத்தில்!
 

அம்மா! 
கருப்பையின் 
இருளில்
என்னை 

சுமந்ததால்...
 

உன் வாழ்வையும் 
இருளாக்கிவிட்டேன்!
என்னை மன்னித்துவிடு!

இதயத்தை குளிர்வித்தாய்...

கண்ணே!
மேக கூட்டமாய்
கருமையாய் 

இருந்த நீ...
 


வெண்மழையாய்
என் தேகம் தொட்டு
என் இதயத்தை
குளிர்வித்தாய்!
 

காதலின் வெட்கத்தால்
சிவந்த குருதியாய்
இப்போது என் தேகம்
பரவுகிறாய்!

உலகமே...

நான் பார்த்தேன்,
அவளும் பார்த்தாள்!

அவள் பார்த்தாள்,
நானும் பார்த்தேன்!

இமையசையாமல்
நாங்களும் பார்த்தோம்!
 


அதிர்ச்சியாய் 
நீங்களும் பார்த்தீர்கள்!
 

அதிசயமாய்...
இந்த உலகமே  பார்த்தது!
 

இனி யார் 
பார்க்க வேண்டும் நம்மை?
 

கண்ணே! 
இனியாவது நாம்...
கண்ணசைத்து 

காதல் செய்வோமா?

உணர்வுக்கு...

உறவுக்கு
இதமாய்...
அவள் தந்த
நேசக்கரங்கள்!

மனதுக்குள்
மழையாய்...
அவள் தந்த 

காதல்!
 


உணர்வுக்கு 
எதிராய்...
அவள் தந்த 

காதல் பரிசு?
 

என் காதலை 
நசுக்கிய
விரிசல்களாய்...!

ஏன் புரியவில்லை? ( ”அ” முதல் “ஃ” வரை)

அழகு கூட்டி,
ஆர்வமும் காட்டி,
இளமை ததும்ப,
ஈகை மனதுடன்,
உறவுகொள்ள
ஊன்றுகோளாய்
என் காதல்... உனக்கு
ஏன் புரியவில்லை?



ஐம்பொன் சிலையே!
ஒன்றிவிட்ட காதலை,
ஓங்கி வளர்க்கும்
ஒளடதமாய் நான்...
எஃகு மனத்துடன்!

(ஒளடதமாய்=மருந்தாய், எஃகுமனத்துடன்=இரும்பு மனத்துடன்)

வெட்கம்!

புகழின்
உச்சத்தில்
அவன்!

இகழ்வின்
அச்சத்தில்
அவள்!


காதல்
மயக்கத்தில்
இருவர்!
 

காதலின் 
மகிழ்வில் 
ஒன்றாய்!

Saturday, 8 March 2014

தூரத்தில்...

 
நீ சிந்திய கண்ணீரை
துடைத்த என் கரங்கள்...
நீ வாய் விட்டு சிரிக்கும்போது
கை குலுக்கி வாழ்த்து சொல்ல...
நான் அருகில் இல்லை!
 
வாழ்த்துகள்!
------------------
நீ சிந்திய கண்ணீரை
துடைத்த என் கரங்கள்...
நீ வாய் விட்டு சிரிக்கும்போது
கை குலுக்கி வாழ்த்து சொல்ல...
நான் அருகில் இல்லை!

என்றும் அன்புடன்
கோவி.சண்முகசுந்தரம்
 
நீ தூரத்தில் இருப்பதால்,
என் இதயம் பாரத்தில் 
தடுமாறுகிறது...
என் காதல் மட்டும்?



மோகம்...

 
பூக்களின் தாகம்!
புதுப் புனலின் வேகம்!
இவைகள் நடுவே
சிக்கிக்கொண்ட காதல்...
தடுமாறியது மோகத்தில்!
அவள் தாகத்தில்...
நான் சோகத்தில்!

 
 

திகைக்கிறேன்!


அவள் என்னை விட்டு
பிரிந்த பின்னே...
என் கவிதை ஊற்று 
கரை புரண்டு ஓடியது!

திகைக்கிறேன்!
--------------------
அவள் என்னை விட்டு
பிரிந்த பின்னே...
என் கவிதை ஊற்று
கரை புரண்டு ஓடியது!

அவளின் அழகை
வருணிக்க மட்டும்
என் கவிதைக்கு
வார்த்தைகளே...
கிடைக்கவில்லை!
திகைக்கிறேன்!

அவளின் அழகை
வருணிக்க மட்டும்
என் கவிதைக்கு
வார்த்தைகளே...
கிடைக்கவில்லை!
திகைக்கிறேன்!

இதய வாசல்!

காதல் கடலில்
கால் பதித்து,
குளிர்ச்சியாய்
துள்ளிக் குதித்த
அவள்...
 


இப்போது தடுமாறி
தத்தளிக்கிறாள்
என் இதய வாசலில்!

எனக்கு மட்டும்?

பூத்துக்குலுங்கும்
இயற்கையின் அழகும்,
புன்னகை அரும்பிடும்
செவ்விதழின் வனப்பும்,
 


என்னை...
கொள்ளை கொண்ட
உன் கருவிழி துண்டலும்,
எல்லையில்லா காதலில்
நீந்திடும் இன்பமும்...
எனக்கு மட்டும்தானா?

Friday, 7 March 2014

யார் அவள்?

தவித்திடும் தாகம்,
துடித்திடும் காதல்
என்னை...
மடித்திடும் மோகம்,
எனக்குள்...
வெடித்திடும் வேகம்.
இவைகளை...
முடித்திடும் அவள்?



கண்கள்...
ஈர்த்திடும் உருவம்,
என்னை வதைத்திடும்
புருவம்,
பாடாய் படுத்திடும்
பருவம்,
நான் மயங்கிடும்
சுகம் தரும் இவள்?

Thursday, 6 March 2014

கவிதையின் தோழி!

உன் இதய வீணையில்
தமிழின் தாகமும்,
காதலின் சோகமும்,
இனிய ராகங்களாய்...
கண்டேன்!
 


தமிழால், தமிழ் அன்பால், 
எனது சோகத்துக்குள்ளும்
சுக ராகம் மீட்ட...
நட்பு நாடினாய், 

கவிதை தாகத்தால்!
இனி நாம் துயர
நெஞ்சங்களுக்கு...
இதமான கவிதை
படைப்போம்! வா தோழி!

Wednesday, 5 March 2014

அமைதியாய்!

அன்பில் ஊறிய
அற்புத மழை,
அதிசயமாய் தோன்றிய
அழகுமிகு வானவில்,
அனிச்ச மலராய்
அவளின் வருகை...
 


அள்ளி முகர்ந்தேன்!
அத்துடன் முடிந்தது,
அவசரக் காதல்!
அதோ! புதிய வாழ்வு...
அடியெடுத்து வைக்கிறேன்,
அமைதியாய் இல்லறத்தில்!

Tuesday, 4 March 2014

யார் நீ!

நான் பார்த்திருந்த நேரத்தில்
நீ காட்சியாய் இல்லை!
நான் பூத்திருந்த நேரத்தில்,
நீ காதலாய் இல்லை!
நான் காத்திருந்த நேரத்தில்
நீ காவலாய் இல்லை!
நான் சோர்ந்திருந்த நேரத்தில்
நீ துணையாய் இல்லை!
 


நான் உறங்கியிருந்த நேரத்தில்
நீ கனவாய் இல்லை!
நான் தனித்திருந்த நேரத்தில்
நீ உறவாய் இல்லை!
நான் என்னை மறந்திருந்த நேரத்தில்...
நீ எனக்குள் முழுவதுமாய் பரவுகிறாய்!
யார் நீ? என் காத்லிதானே?

Monday, 3 March 2014

கனவு!

மனக் குடிலில்
மதி மயங்கி,
நீ! அவசரமாய்...
உள்ளே புகுந்த
அந்த நேரம்?


இடியும்,
மின்னலும்,
மழையும்...
இயற்கையின்
சீற்றம்!
என் கனவு...
கலைந்தது!

Sunday, 2 March 2014

காலக் கேடு!

சோலை
வனத்துக்குள்...
சுகம் தேடச் சென்ற
வண்டுகள்!


தாகப் பூக்களின்
தரம் தெரியாமல்,
மோகம் கொண்டதால்...

வேகம் குறைந்து,
சோகத்தை மட்டுமே...
பரிசாய் பெற்ற,
காலத்தின்
தண்டனைகள்!