Thursday, 26 September 2013

ஏகாந்தம்!

மனசுக்குள்
மகிழம்பூ வாசம்!
கோட்டை வாசலில்
கொந்தளிப்பின் உச்சம்!

இரத்த வாடையில்
இனம் புரியாத
இறுமாப்பு!


கோடை மணலை
துழாவிய...
அசுரக்காற்று,
கண்களில்
நீர்த் துளிகள்!

கனவுகள்...
போர்க் கொடியாய்!
ஏகாந்தம்...
எப்போது வீசும்?

ஏக்கத்தின்
உச்சம்...
அவளின்
வருகைக்காக!

Wednesday, 25 September 2013

வறுமை!

வந்த போது
வாட்டும்!
பசி தீர்ந்த
பின்னே
மறையும்
வான் நிலா!

உழவுக்கு
உற்றதாய்
ஏர் பிடிப்பவன்,
எதிர் காலத்துக்கு
ஏங்கும் ஏகாந்தம்!


மனிதனின்
எதிர் பார்ப்பில்
பற்றி எரியும்
காட்டுத் தீ!

மொத்தத்தில்
மனிதனை
கொஞ்சம்
கொஞ்சமாய்
கொல்லும்
கொடிய நஞ்சு!

ஆனந்தக் கண்ணீர்!

புதிர் போடும்
புதிய நிலா
அவள்!

எதிர்ப்பு பேசும்
ஏகாந்தக்காரி
அவள்!

நான்...
ரோசவினும்
மென்மையானவன்
என்றேன்!
அவள்...
உங்களுக்குள்
முற்களை
பார்க்கிறேன்
என்றாள்!


நிலவாய் நான்...
குளிர் தருவேன்
என்றேன்!
பகல் பொழுது
வராதா?
என்றாள்!

உயிருக்கு
மூச்சாய் நான்...
இருப்பேன்
என்றேன்!
காற்றில் கூட
நஞ்சு உண்டு
என்றாள்!

ஒரு சில நிமிட
கண்ணீர் துளிகள்...
அதையும்
ஆனந்த கண்ணீரா?
என்றாள்!

மீன் வாழட்டும்!

கண்ணுக்கு
இமையாய்...
இருப்பதை விட,
மீனுக்கு
துடுப்பாய்
இருக்க
விரும்பினேன்!


நான்...
மீனின் வாழ்வில்
முக்கியத்துவம்
பெற்ற போதெல்லாம்,
என்னை ஏளனமாய்
பார்த்து...
மீன் சிரிக்கும்!

நான்(துடுப்பு)...
இப்போது
தடுமாறுகிறேன்!
மீன் வாழட்டும்!

Tuesday, 24 September 2013

அவள் உயிராய்...

அவள்...
நெருஞ்சி முள்ளாய்
என் காலில்
தைத்தவள்!


அவசரமாய்
தூக்கி எறிய
நினைத்தேன்!
சில மணித்துளிகள்
சிந்தித்தபின்...
என் தோட்டத்தில்
எறிந்தேன்!


அவள்...
என் வாழ்வில்
உயிராய்!
புதிதாய்
தோன்றிய
கொடியாய்!

Monday, 23 September 2013

பூந்தளிர்!

அவள்...
செல்லரித்த
இதயத்தில்
சிந்தனை
சுவடுகள்!

அவள்...
வறண்ட
வானில்
திடீர் தூவானம்!


அவள்...
பாலை நிலத்தில்
பட்டென்று பூத்த
ரோசா மலர்!

அவள்...
நினைவிழந்த பின்
நெஞ்சத்தில்
நீந்திய புத்தொளி!

அவள்...
இறந்துவிட்ட
செடியில்
புதிதாய்
தோன்றிய
பூந்தளிர்!

Sunday, 22 September 2013

மங்கிய இருள்!

உனக்குள்
வீசிடும்
தென்றலில்
சிரிக்கிறேன்!

உனக்குள்
வீசிடும் புயலில்
தவிக்கிறேன்!

நீ சிந்தும்
கண்ணீரில்
மிதக்கிறேன்!

கோபத்தில்
நீ அடிப்பதை
மிதமாய்
தாங்குகிறேன்!

என்னை
எட்டி உதைக்கும்
போது...
நிமிராமல்
தலைகுனிகிறேன்!


நீ சிரிக்கும்
போது...
அழுகிறேன்!
வேதனையில்!

நீ வானத்தில்
வட்டமிடும்
போது...
பூமியை
ஏளனம் செய்கிறாய்!

நீ பூமியை
உலா வரும்போது...
வானத்தை
கேவலம் செய்கிறாய்!

நீ ஓங்குகிற
கைகள்...
அடிப்பதற்கா?
அணைப்பதற்கா?
சிந்திக்கிறேன்!

குழப்பத்தில்
என் வாழ்வு
மங்கிய இருளில்!

Friday, 20 September 2013

அவளோடு...

தூங்கிய
நெஞ்சத்தை
தொட்டெழுப்பி,
துவண்ட
உடலுக்குள்
மணம் பரப்பி,
தொட்டு சுவைத்த
சுவையெல்லாம்...

அவளின்
அதிரடி பரிசாய்...
இதயக் கீறல்கள்!
விளைவுகளாய்
ஏமாற்றங்கள்!


ஈர உதடு
காய்வதுவும்,
சிரித்த முகம்
சிந்திப்பதும்,
இளகிய நெஞ்சம்
பாரம் சுமப்பதும்
மாற்றங்கள்!

நான்...
அவள் உருட்டி
விளையாடும்
விளையாட்டு
பந்தாய்!

நினைவெல்லாம்
அவள் செயல்
வலித்தாலும்,
அவளின்
கை பட்ட...
இடமெல்லாம்
இனிமையாய்
உருமாறி....
இறுதியில்
என் நினைவுகள்
மட்டும் அவளோடு!

Thursday, 19 September 2013

பிழை...

அவள்...
புதுயுகத்தின்
பூந்தளிர் நெஞ்சம்!

அவள்...
கலியுகத்தின்
கருகிய வரிகள்!

அவள்...
கண்ணுக்குள்
கை வரைந்த
ஓவியம்!

அவள்...
ஓரக்கண்ணில்
ஒட்டிக்கொண்ட
சிறு மணல்!


அவள்...
நாணமும்,
அச்சமும்
ஒன்றாய் கலந்த 
மறை பொருள்!

அவள்...
நிலவுக்குள்
இயற்கை
தந்த கறை!

அவள்...
உலகில்
எவரும் காணாத
பேரின்பம்!

அவள்...
எனது சிந்தனைக்கு
கிடைத்த முதல் பரிசு!

அவள்...
எனது எழுதுகோலின்
நுனியில் தோன்றிய
பிழை...
சொற்கள்!

Wednesday, 18 September 2013

தொடர்கதை!

ஏறுகிற கொடிக்கு
எட்டாத கிளைகள்!
ஊறி வரும் நீருக்குள்
எண்ணற்ற கிருமிகள்!

இயற்கையின்
சீற்றத்தில்
சிரித்தபடி அவள்!


வாவென்று
அழைத்தேன்...
போனாள்!
போவென்று
சொன்னேன்
வந்தாள்!

இதய உஞ்சலில்
அவள்...
முன்னுக்கு பின்
முரணாய்!

அவள்...
தொடர்வாள்!
நான்...
தொடர்வேன்!
காலம்...
தொடரும்!

Tuesday, 17 September 2013

அலையில்லா பயணம்!

குழம்பிய
கண்களில்,
தெளிவான
பிம்பம்!

மீட்டாத
வீணையில்,
இன்பமாய்
வெளிவந்த
புதிய ராகங்கள்!


ஏறி அமர்ந்த பின்
இலக்கை...
தேடுகிறேன்!
வாழ்க்கை
படகுக்கு...

அலையில்லா
நீரோட்டம்
எங்கே கிடைக்கும்?

Monday, 16 September 2013

அடி...பாவி!

அஞ்சுகின்ற
சுகமெல்லாம்,
அன்பாய்
கிடைக்குமா!

நான்...
கொஞ்சுகின்ற
வார்தைக்கெல்லாம்,
விடை கிடைக்குமா?


ஏக்கத்தின்
இறுமாப்பு
எட்டி எட்டி
பார்த்தாலும்,
செக்கச் சிவந்த
விழிகள் மூடி
மெளனம் ஏன்?

பாவி எனது
அன்புக்கு
அடிபனியாத
அடிபாவி  நீ!

Sunday, 15 September 2013

இடறிய பின்...

பஞ்சும் வலிக்கிற
பிஞ்சு கால்கள்
எனக்கு!

என் வாழ்வின்
உச்சத்தில்,
எதிகாலத்தை
நோக்கி
செல்கிறேன்!
வழிகள்
கரடு முரடாய்...


நெஞ்சு பயத்தின்
உறுதி கொண்டு,
நிலை தடுமாறி
நடக்கிறேன்!
கால்களில் வலி!

இடறிய பின்...
இதயத்தை
கல்லாக்கி,
இருளை
நோக்கி...
மீண்டும் பயணம்!

Saturday, 14 September 2013

வாழ்க்கை!

கையுக்குள்
அகப்படாத
புவிக்கோளம்!

திக்கற்றவனுக்கு
எட்டாத கனி!


ஓடிக்கொண்டே
இருந்தாலும்
தொடமுடியாத
எல்லைக்கோடு!

வீறு கொண்டு
எழுந்தாலும்
சறுக்கிவிடும்
சதுப்பு நிலம்!

ஏற்றத் தாழ்வுகளை
மாறி மாறி பரிசாய்
தரும் கணினி!

Friday, 13 September 2013

நான் மட்டும்...

கோணல்
புத்தியின்
குவிந்த
வழிகள்
எல்லாம்,
அவளிடம்
தடுமாறிய
நினைவுகள்!


தடுமாறிய
பின்னும்,
தவறாமல்
அவளை
சிந்தித்த படி...
நான் மட்டும்!


Thursday, 12 September 2013

கரை சேர...

உடன் தரும்
சுகங்கள்
தொலை தூரத்தில்!

இடர்படும்
நெஞ்சம்
படு வேகத்தில்!


சுடர் தரும்
வெளிச்சம்
என்னருகில்!

ஆனால்...
எல்லையில்லா
இருள்
இந்த புவிமீதினில்!

கரை சேர...
தவிப்புகள்!

Wednesday, 11 September 2013

அவளையாவது...

உடல் நடுவே
சிக்கித் துடிக்கும்
சின்ன இதயத்தில்,
காதலின்...
சிந்தனைகள்
கரடு முரடாய்!


முன்னுக்கு பின்
தடுமாறும்
நெஞ்சத்தில்
என்று வரும்
நிம்மதி?

அவளையாவது
கேட்போம்!

Tuesday, 10 September 2013

விடையில்லை!

உடல் குருதியின்
வொவ்வொரு
சொட்டுக்கும்
இல்லாத உறுதி...

அவ்வப்போது
வந்து போகும்
அவள் கண்ணீரிலா
கிடைக்கும்?


மனக்குமுறலில்
வெளி வராத காதல்
அவளின்...
மெளனத்திலா
கிடைக்கும்?

புன்னகை
பூக்காத புதுமலரே!
எத்தனை நாள்
என் ஏக்கத்தில்
விளாயடுவாய்?

Monday, 9 September 2013

தஞ்சம்!

இனிமையின்
துடிப்பால்
தத்தி தாவி
ஓடோடி
தேன் பருக
வந்த தேனி..
.

அந்தப் பூ
இதழ் விரிக்க
மறுத்ததால்
வெறுப்புடன்
திரும்பியது!

இதோ...
அடுத்த மலரின்
அட்டகாச
ஆரவாரம் 
ஏங்கி தவிக்கும்
தேனிக்கு தஞ்சம்!

Sunday, 8 September 2013

பயம்...மகிழ்ச்சியாய்!

மனக்குமுறல்!
சிந்தனைக்கு
தடை!

மோக...
ததும்பலின்
முழுவீச்சு!
சிங்கார
தென்றலில்
சீற்றம்!


இணையில்லா
உருவத்தில்
மாற்றம்!

இணைய...
துடிக்கும்
உதறல்!
பயமற்ற
மகிழ்ச்சி!
இயற்கை
தந்த...
கொந்தளிப்பு!

Saturday, 7 September 2013

பந்தயக் குதிரை!

என்னை
பிணையாய்
வைத்து
பந்தயத்தில்
வெற்றி கண்டாள்!

இல்லை இல்லை!
அவள் என்னை
பழி தீர்த்து
வஞ்சனையால்,
பொய்க் காதல்
செய்தாள்!


என்னை
காதல் செய்தததால்
அவளுக்கு...
அவசர திருமணம்!

அவள் வாழ்வில்
வெற்றி காண,
பந்தயக் குதிரையாய்
நான்.....?

Friday, 6 September 2013

அவர்கள்...

இலக்கிய
நயத்தின்
இதய...
வருடிகள்!

இதயம் தந்த
இன்னிசையின்
ரசிகர் கூட்டங்கள்!


இதமாய்
இருந்தபோது
உரசியும்,
ஓலமிட்டபோது
ஓடியும்
சென்றவர்கள்!

இப்போது
என் இதயம்
செயலிழந்த
செய்தி...
நிச்சயமாய்
மகிழ்விக்கும்
அவர்களை!

Thursday, 5 September 2013

நிச்சயமா மாட்டேன் (கிராமிய நடை)

எலே!
கேடுகெட்ட மாமனே!
தேடிவந்து திருட்டு தாலி
கட்டினாலும்,
உனக்கு வாக்கப்பட
நான் மாட்டேன்!

வடக்கு தெரு
வாசகியோட
கெட்ட சவுகாசம்,
நீ வெச்சிருந்த கத
இந்த உலகத்துக்கே
தெரிஞ்சிடுச்சே!


கண்ண மூடி
கழுத்த நீட்ட
நான்...
ஒன்னும்தெரியாத
அடிமாடு இல்ல!

காதல் வச்சேன்
உன் மேல!
நீ கைய வெச்ச
அவ மேல!
கண்ட கண்ட
வியாதியெல்லாம்,
நான் ஒட்டிகிட்டு
சாவறதுக்கு,
நிச்சயமா கண்ணாலம்
கட்டிக்கவே மாட்டேன்!

அறுத்த சிறுக்கியா
நான் குடித்தனம்
நடத்தறதோட,
கை படாத ரோசாவா
காலமெல்லாம்
தாய் மாமன்
உன்ன நெனச்சி
வாழ்ந்திடுவேன்!

Wednesday, 4 September 2013

முயற்சி!

கற்ற வரிகள்
கானல் வரிகளாய்...
போன பின்,
முத்தமிழின்
முகவரி
தேடினேன்!


கவி நயம்
எங்கே என்னை
கட்டியணைக்க
போகிறது?

தமிழே!
என் காதலே!
என் முயற்சிக்கு
பலனாய்
மீண்டும்...
கவிதை தா!

Tuesday, 3 September 2013

நினைவுகள்!

அவளை
தொடர்பு கொண்ட
அந்த நிமிடங்கள்...
உணர்ச்சி கொந்தளிப்பின்
உச்சக்கட்ட பரிதவிப்பு!

எல்லையற்ற இலக்குக்கு
புதிதாய் ஒரு வழி!
இன்ப தேசத்தின்
இணையற்ற
வெள்ளி விழா!

காற்றாய், குரலாய்,
இனிமையாய்,
அவள்... முழுமையாய்,
ஒரே நொடியில்
என் உடலுக்குள்!


உல்லாசப் பயணத்தில்
சிறு தடங்கல்...
இப்போது அவளில்லை!
மீண்டும் அவளின்
நினைவுகள்...
ஓலங்கலாய்!

Monday, 2 September 2013

வாழ்க்கை!

நாகரிக
சொல்லுக்கு
பின்னே...
நயவஞ்சகம்!

பொறுமையின்
தோன்றலுக்கு
முன்னே...
கோபம்!


இனிமையின்
உச்சியில்
சிறு கசப்பு!

உயர்வின்
படியில்
ஏற்பட்ட...
சருக்கல்!

முடிவின்
விடையாய்...
வாழ்க்கை!

Sunday, 1 September 2013

தேவையில்லை!

புணர்ச்சியில்
பேதளிக்கும்
பித்தன் அல்ல!

ஊணர்ச்சியில்
மட்டும் இன்பம்
காணும்
சுயநலக்காரன்
அல்ல!


உடல் வழி
உணர்ச்சியை
ஊறுகாயாய்
எண்ணும்
எனக்குள்...
உள்ள வழி
காதல் மறந்தா
போய்விட்டது?

கனவுகள்
உண்மையாய்
மாறிய பின்
அமுதும் கசக்குமா?

அடி பெண்ணே!
நீ என் காதலை
உதறிய பின்னாவது...
என் உடலுக்குள்
உணர்ச்சி
அற்று போகட்டும்!