Wednesday, 31 July 2013

மழை!

கடும் மழை
பெய்தது!
கதிரவன்
சிரித்தான்!
மழை விட்டு
தூவானமாய்
மாறியது!

இப்போது
கதிரவனின்
கதிர்வீச்சு!
எள்ளி நகையாட
மேகக் கூட்டம்
இல்லை!


இப்போது
வெய்யில்...
நெஞ்சக்
கொதிப்பு!

மீண்டும்
மேக மூட்டம்
கதிரவனை
மறைத்தது!
குளிர் தரும்
மழையுடன்
இருள்!
இயற்கையின்
மாற்றம்!

Tuesday, 30 July 2013

குற்றவாளி!

அடிபட்ட புலிக்கு
மருந்து போட்டவன்,
புலிக்கு இரையாகி
போனான்!

தடுமாறும் விளக்கை
தூண்டிவிட்டவன்
கை சுட்டுக்கொண்டான்!

ஊர்க்கிணறு
தோண்ட புறப்பட்டு
போனவன்
புதைந்து போய்
செத்தான்!


சகமனிதனுக்கு
பரிந்து பேசியவன்
பலியாகி போனான்!

பாசப்பிணைப்புக்கு
பயந்து நின்றவன்
பழிச்சொல்லுக்கு
ஆளானான்!

நேர்மைக்கு
துணை போக
நினைத்தால்...
மனிதனே!
நீ! நிச்சயம்
குற்றவாளி ஆவாய்!

Monday, 29 July 2013

கயிறு...

என்னை விட்டு
விலகி ஓடியவள்,
ஆரவாரத்துடன்
சிரித்தாள்!
 
ஓடிய பின்னும்
ஒன்றுமறியா
நிற்பவளை,
என் மனம்
ஏளனம்
செய்கிறது!


வாடிய அவளை
வந்தணைக்க
முடியாமல்
தவிக்கும்
நான்...

அவள் இனி
தேவையில்லை
என்றாலும்,
அவளின்
பாசக்கயிறு
என் கழுத்தை
இறுக்குகிறது!

Sunday, 28 July 2013

புயல் சீற்றம்!

மரத்தடியில்
தூளி கட்டி
செல்லமாய்
குழந்தையை
தூங்கவிட்டேன்!

இதயத்தை
வருடும்
இனிய தாலாட்டு
தென்றலாய் வீசியது!


அயர்ந்து தூங்கிய
மழலையின்
இனிமை
அடித்த காற்றில்
மறைந்து போனது!

ஆம்... தென்றல்
புயலாய் மாறியது!
குழந்தை விழித்து
அழுதது!
நான்...
கலங்கி நின்றேன்!
காலத்தின் மாற்றம்!

Saturday, 27 July 2013

ஓய்வெடுக்க...

மலையேற
முயற்சித்து,
உச்சிக்கு
ஊர்ந்து சென்றேன்!

இடையூறு
எதுவுமில்லை,
பனியும்
சறுக்கவில்லை!

ஏறிக்கொண்டே
இருக்கிறேன்!
இலக்கை அடைய
முடியவில்லை!


தடங்கல்கள்...
எங்கே
இருக்கின்றன?

தறிகெட்டு
போனதால்...
வழி தவறி
போகிறேன்!

இலக்கை அடைய...
முதலில் என் மனம்
ஓய்வெடுக்கட்டும்!
அதன் பின்
பயணம் தொடரும்!

Friday, 26 July 2013

அவன்...நடுவீதியில்...

தெருக்கூத்து
பார்க்க போனவன்,
கூனி குறுகி
திரும்ப வந்தான்!

இடை மறித்து
நின்றவளை,
வழி தவறி
அழைத்து
செண்றான்!


உள்ளத்தில்
இனிமை கானா
அவளை...
உணர்ச்சி
வெள்ளத்தில்
நீந்த வைத்தான்!

அவனுக்குள்
புதிய சோகம்...
வாழ்க்கை
பயணத்திற்கு
துணையாய்
வருவாயா?
என்றான்!

அவள்...
தேவையில்லை
என்றாள்!
அவன்...
இப்போது
நடுவீதியில்
நடைபிணமாய்!

Thursday, 25 July 2013

தடம் மாறி...

என் சிந்தனையை
வெறுக்கிறேன்!
அந்த செம்பவழ
மேனியை
நினைக்கிறேன்!


அவள்...
தடுமாறுகிறாள்!
நான்...
தடம் மாறுகிறேன்!



ஓய்வில்லா
என் சோகம்
என்னை...
எளனம் செய்கிறது!

தூங்கிய
பின்னும்
கனவின்
தொல்லைகள்!

வெறுப்புடன்...
நான்
சாவை
அழைக்கிறேன்!

Wednesday, 24 July 2013

அந்தப் பக்கம்!

அவளை பார்க்க
அணு அணுவாய்
துடித்தேன்!

அவசரமாய்
சின்னத்திரை
விலக்கி...
வெடித்து சிதறி...
ஓடிவந்து...
அவளை
பார்த்தால்?


அவள் ...
அந்தப் பக்கம்
பார்த்தாள்!

நானும்
அந்தப் பக்கம்
பார்த்தேன்...
அவளையல்ல?

அவளின்
இதயத்திற்கு...
அந்த பக்கம்!

Tuesday, 23 July 2013

புல் உண்ணும் புலிகள்!

மேதினியின்
மேன்மக்கள்,
களங்கரை
விளக்கத்தின்
சுழல் ஒளிகள்!

உதவிகள்
எதிர்பாராத
மனிதர்கள்,
இந்நாட்டின்
மன்னர்கள்!


உதவி வரைத்தன்று
உதவியென்று,
எதிர்பார்ப்புகள்
இல்லாத
உதவியை
செய்வோர்,
இந்நாட்டின்
மேன்மக்கள்!

அவசரமாய்
புல் உண்ணும்
புலிகள்...
பிறர் பற்றி
கவலையில்லாத
மனிதர்கள்!


Monday, 22 July 2013

மேகத்துக்கு தடை!

மணல்
என்று தெரிந்தும்
அழகாய் வீடு
கட்டினேன்!
மேகத்துக்கு
தடை விதிக்க
முயற்சிக்கிறேன்!

இருள்
என்று தெரிந்தும்
பயணத்தை
துவங்கினேன்!
தட்டு தடுமாறி
இலக்கை அடைய
முயற்சிக்கிறேன்!


கடல்
என்று தெரிந்தும்
குதித்துவிட்டேன்!
நீந்தி கரைசேர
முயற்சிக்கிறேன்!

சிங்கக் குகை
என்று தெரிந்தும்
உட்புகுந்தேன்!
உயிர் பிழைக்க
முயற்சிக்கிறேன்!

காதலை...
கரை சேர்க்க
முடியாதவளை
காதல் கொண்டேன்!
காதலின் வெற்றிக்கு
முயற்சிக்கிறேன்!

Sunday, 21 July 2013

தெரியாத... காட்சிகள்!

மஞ்சள்
வெய்யில்
மயக்கத்தில்
மெளனச் சிரிப்பு!

மன்மத
கனவுகளுக்கு
மதி மயக்கம்!

உரு தெரியா
உணர்ச்சிகளில்
சிறு உறக்கம்!

சிந்தனை
தெளியுமுன்னே
கலக்கம்!


அவளின்
நினைவுகளில்
இடைமறித்த
நிழல்கள்!

என் விழித்திருந்த
கண்களில்
பாய்ந்த அம்புகள்!

அதோ அவளின்...
சிரித்த முகத்தின்
சின்னக் காட்சி!

இப்போதோ...
எனக்கு
காட்சி தெரியாத
கண்கள்!

Saturday, 20 July 2013

கருவிலேயே...

கருவறைக்குள்
நுழைந்து
காதலை...
நிர்ணயிக்கும்
மரபனுக்களை,
கருவிலேயே
அழிக்க வேண்டும்!


இந்த
இன்னல் தரும்
காதல்...
புதிய மன்னர்களுக்கு
தேவையில்லை!

சிந்து...

உன் அழகு முகம்
கவிதையாய்!

காலை கதிரவனை
வெட்கப்பட
வைத்ததால்,
இன்று மழை!

என் மனதுக்குள்
சில்லென்று
வீசிய...
குளிர்!
இது ஆண்மையின்
பிரவாகம்!

வட்ட நிலா
வானுக்கு
வர மறுத்ததால்,
உன் முகம்
நிலவாய்!

உன் சின்ன
இதழ்களுக்கு
வெப்பமாய்...
அன்பு முத்தம்!

சிதைந்த இதயத்தை...

சிதறிப்போன
இதழ்களை
சீர்படுத்தி
பூவாக்கினேன்,
உனக்கு
சூடுவதற்காக!

உடைந்த
புல்லாங்குழலை
ஒட்டவைத்து
உருவாக்கினேன்...
நீலாம்பரி
இசைப்பதற்காக!


ஓடிய மேகங்களை
கூப்பிட்டு பேசி
மழை வேண்டினேன்...
உன் மனதை
குளிர்விப்பதற்காக!

ஆனால்...
சிதைந்த
என் இதயத்தை
எங்ஙனம்
ஒன்று சேர்ப்பேன்?

Friday, 19 July 2013

உன்னையும்...

கண் சிமிட்டி
மின்னி மறையும்
நட்சத்திரம்!


சில நிமிடங்கள்
மட்டும்...
சிரித்துவிட்டு
மறையும்
மூன்றாம் பிறை!


அவசரமாய்
தோன்றி,
வண்ண வண்ண
கனவுகளை
வீசிவிட்டு
உடன் மறையும்
வானவில்!


திடிரென்று
சுழன்று
சுற்றி மறையும்
சூறாவளி!


அந்த வரிசையில்
கன நேரம்
காதல் செய்து,


மறு நேரம்
விலகத்துடிக்கும்
நீ...
உன்னையும்
ரசிக்கிறேன்!


Thursday, 18 July 2013

தனி மலர்!

உவமைக்கு
ஒரு மலர்
தேடினேன்!

உனக்கு
இணையாய்
ஒரு மலரும்
இல்லை!


இளமைக்கு
இனிமை
சேர்க்கும்
புது மலரே...

நீ என்னருகில்
இருக்குங்கால்,
வேறேது
உலகில்
தனி மலர்?


Wednesday, 17 July 2013

பரிமாற்றம்!

உயிர் மேல்
உறவு செய்ய,
உன்னதமாய்
ஊர்வலம்
விட்டேன்!

அவளோ...
உடல் மேல்
உரசிவிட்டு
உறங்கிப்
போனாள்!


இதோ... நான்
விழித்திருக்கிறேன்,
அவளை
காவல்
செய்வதற்கு!

அவள்...
விழித்தபின்,
நான்...
உறங்குவேன்!

Saturday, 13 July 2013

அழியப் போவதில்லை!

எனது
தன்மான
உணர்ச்சிக்கு,
உன்னையே
பரிசாய்
தந்தவளே!

என்னிடம்
தஞ்சம் பெற்ற
உன் நெஞ்சம்,
நிச்சயமாய்
மீளப் போவதில்லை!


உரசிய உடல்கள்
ஒன்று சேர
மறுத்தாலும்...
அன்பில்
ஊறிய இதயங்கள்
உலரப் போவதில்லை!

ஆம்...
நம் காதல்
என்றென்றும்
அழியப்போவதில்லை!


Friday, 12 July 2013

அவசரமாய்...

மழைத்துளி
அவள் முகம்
நனைத்தது!

தேன் துளி
எனக்கு
சுவை தந்தது!

என் மனம்
பதை பதைத்தது!


அவளை
முத்தமிட...
என் நெஞ்சம்
துடி துடித்தது!

அவசரமாய்
விரல் வைத்தேன்!
அவள் உதடுகளின்
ஈரத்தை...
துடைத்தேன்!

மழைத்துளி மேல்
எனக்கு கோபம்!

Thursday, 11 July 2013

உணர்ந்தால்...

கொதி நீரின்
சூடு...
தொட்டால்தானே
தெரியும்!

நெருப்பின்
தன்மை
சுட்டால்தானே
தெரியும்!


சொல்லின்
அருமை
பட்டால்தானே
தெரியும்!

வாய்ச்
சொல்லுக்கு
பயம்
தேவையில்லை!

உள்ளதை
உள்ளபடி
உணர்ந்தால்
உண்மை
உறுதியாய்
தெரியும்!

Wednesday, 10 July 2013

பிரிந்த பின்!

மோக முள்
நெஞ்சில்
தைத்தது!



மோகன ராகம்
சோகம்
தந்தது!


அரும்பிய
மொட்டு
மலர
மறுத்தது!


தேனருவி
திகைத்து
நின்றது!


மணி மகுடம்
தலைகீழாய்
கவிழ்ந்தது!


விடியல் கூட
வெட்கப்பட்டு
வர மறுத்தது!


இவையாவும்
அவளை...
பிரிந்த பின்!

Tuesday, 9 July 2013

பரிசு!

என்னைப் பற்றிய
ஏளனங்களை
எடுத்து சொல்லி
விட்டேன்!

என் மனத்தின்
ஓலங்களையும்
பறை சாற்றி
விட்டேன்!


அருவருப்பான
என் உருவத்தை
மாசற்று
வருணித்தும்
விட்டேன்!

என் தவறுகள்
முழுவதையும்
பளிச்சென்று
காட்டி விட்டேன்!

இருப்பினும்
என் கெட்டுவிட்ட
இதயத்தை
பரிசாய்...
கேட்கிறாள்!
ஆம்...
அவள் என்னை
காதலிக்கிறாள்!

ஆழம்!

வார்த்தைகளின்
ஆழத்தை
உணராதவளா,
என் நெஞ்சத்தின்
ஆழத்தை
அளக்கப் போகிறாள்?

நான்
ஆழ்கடல் சிப்பி!
எனக்குள்
ஒரு இனிய
இதயம்,
முத்தாய்...
புதைந்திருக்கிறது!

என்னை
சாகடித்துவிடு!
பின் என் இதயத்தில்
காதல் செய்!

Monday, 8 July 2013

நிமிர்ந்தால் தெரியும்!

கேடுகெட்ட
உணர்ச்சிக்கு
அவள் தந்த
பரிசு...
திடீர் கோபம்!

நான்
மேலிருந்து
கீழாய் பார்க்கிறேன்!
அவள்...
இன்னமும்
குனிந்தபடிதான்!


நிமிர்ந்தால் தானே
எனது விழிகள்
மோதும்!

கோபத்தில்
அவளை
சாடுகிறேன்!
அவள்...
இனியாவது
கண்கள் மோதி
காதல்
செய்யட்டும்!

நெஞ்ச சிலிர்ப்புகள்!

தவிப்புகள்
சில நேரம்
உச்சம் பெற்றால்...
உடல் சிலிர்ப்புகள்
சிறிது நேரம்
உறங்குகிறது!


மனத்தடுமாறல்கள்
அவளை எண்ணி!
ஆனால்...
அவளின்
விழித்திரைகள்
எனக்காக
நகர மறுக்கிறது!

அவள் விழி நீரில்
இதயத்தை
நனைக்கிறேன்!
அப்போது
அவள்...
சிரிக்கட்டும்!


எனக்கு கோபம்!

அவளுடன்
நானிருக்க
எனக்கு
கிடைத்த
நேரமோ
மணித்துளிகளாய்!

அந்நேரம்
அவளும் நானும்
அருகருகாய்
பார்த்த வண்ணம்
பகடை உருட்டி
என்ன பயன்?


நெஞ்ச
பரிமாற்றத்தின்
நினைவு சூழல்,
இப்போது
வெறும் கனவு!

பகல் கனவு
பலிக்குமா?
எனக்கு கோபம்!

Sunday, 7 July 2013

முழுமையாய் தருகிறேன்!

அன்புக் கடல்!
அது மிகப் பெரிது
அதில் இனி...
நீந்தி தவிக்க
என்னால்
இயலாது!

ஓடிவா!
அவளுக்கு முன்
நீ ஓடிவா!

ஆயிரம் பேர்கள்
என்னை கொஞ்சி
குலாவுகிறார்கள்!
அன்பு முத்தமும்
தருகிறார்கள்!


ஆனால் நீ!
எனக்கு மட்டும்
மணி மகுடம்!
உன் உயர்வுக்கு
கீழ் அவர்களை
பட்டியலிடுகிறேன்!

அன்பை
பங்கிடுகிறேன்!
அது நிச்சயம்
குறைய
போவதில்லை!

இதோ!
உனக்கு மட்டும்
என்னை
முழுமையாய்
தருகிறேன்
பெற்றுக்கொள்!

அனைவரின்
அன்பும்
எனக்கு சொந்தம்!
நான் மட்டும்
உனக்கு சொந்தம்!
கலங்காதே!

நான் அடிமையாகிறேன்!

தவழ்ந்து வரும்
உணர்ச்சிக்கு
அதோ...
அந்த இளையவள்
இனிமையாய்
சிரிக்கிறாள்!

நீ! ஏன்...
ஊமையாய்,
உணர்ச்சிக்கு
தடை போட
வேண்டும்?

நான் உனக்காக
இருக்கிறேன்,
அவள் எனக்காக
தவிக்கிறாள்!

அவளுக்கும்
எனக்கும்
உறவு பாலம்
போட்டதற்கு
அடித்தூண்
நீயா? நானா?


காதல் கனவுகள்
அனைவருக்கும்
உரிமை!
ஆனால்...
நானோ
ஒருத்திக்கு
மட்டுமே
அடிமை!

அன்பின்
பரிமாற்றங்கள்
அடிக்கடி
மாறுவது
தவறில்லை!

அன்பு எப்போதும்
ஆழமாய் இருக்கும்
இடத்தில் தான்
தராசு முள்ளை
சாய்த்து வைக்கும்!

அவள் என்னிடம்
வரத்துடித்தாலும்,
நான் உன்னிடம்
வரவே துடிக்கிறேன்!

Saturday, 6 July 2013

சிறகொடிந்த பின்...

உதிர்ந்த பூக்கள்
உல்லாசத்தை
நினைத்தது!

உருவமற்ற
மனதிற்குள்...
தெளிவான
சிந்தனை!

தேம்பி
அழுதாலும்
தெவிட்டாத
இனிமை!

அவளின்
உறவுகள்...
எனது சிறகுகள்
ஒடிந்த பின்னே
மருந்துகள்!


காலைக்
கதிரவனால்,
எனது குருட்டு
கண்களுக்கு
வெளிச்சம்!

அவளின்
சிரிப்பு சிதறல்கள்...
என் கல்லறைக்கு
வந்து விழும்
சிறு மலர்கள்!

இயற்கை
எனைப்பார்த்து,
சற்று நேரம்
சிரிக்கட்டும்!
நான் அழுகிறேன்!

Friday, 5 July 2013

வெகு தூரம்!

உலக
சுகமனைத்தும்
அந்த சின்ன
இடத்திலா?

தொட்டேன்...
மிருதுவாய்
இருந்தது!

தடவினேன்
இதமாயும்
இருந்தது!

சின்ன விரல்
நுழைத்து
இரண்டாய்
விலக்கினேன்...
வெப்பமாய்
இருந்தது!


கற்கண்டு
இதழ் கொண்டு
கடிக்க பார்த்தேன்!
பட்டென்று
எழுந்து
ஓடிவிட்டாள்!

ஓடாதே! நில்!
உன் சின்ன
உதடுகளை
கடித்தே தீருவேன்!

அந்த...
சின்னக்குழந்தை
சிரித்துக்கொண்டே
ஓடியது...
வெகு தூரம்!

Thursday, 4 July 2013

தலைப்பு கிடைக்கவில்லை!

தறிகெட்ட
மனதுக்கு
தலைப்பு
கிடைக்கவில்லை!

தன்னம்பிக்கையின்
விளிம்பில்
ஏற்பட்ட...
சறுக்கல்கள்!


உன்னத
உவமைக்கு
சற்று நேர
சிந்தனை!

காவல் பூனைகள்!
கடைக்கண்
மூடினால்...
உலகம் இருண்டா
போகும்?

கவிதை வரும்
தலைப்பை தரும்!
அது...
என்றென்றும்
இனிமை தரும்!

Wednesday, 3 July 2013

வஞ்சகர்கள்!

முடிவற்ற
நிகழ்வுக்கு
முற்றுப்புள்ளி!

உதவாக்கரைக்கு
ஏற்படும்
தடுமாற்றம்!

ஏமாற்றுபவனுக்கு
அடிபணியும்
புதிய உலகம்!


உள்ளொன்று
வைத்து
வெளியொன்று
பேசும் வீணர்
கூட்டத்தில்
வீசும் ஏகாந்தம்!

தவறை மட்டுமே
செய்பவன்,
தவறை பற்றி பேசும்
அவல நிலை!

அவசரத் தவறுக்கு
சற்று நேர அமைதி!
இது உலகின்
நியதி!

உண்மை
ஒளிந்து கொண்டது!
மனிதனே!
புதியக்கண்ணாடியில்
உற்றுப் பார்!
நயவஞ்சகர்கள்
நன்றாய்
தெரிவார்கள்!

Tuesday, 2 July 2013

இறுதி நேர வார்த்தைகள்!

அதோ...
தெரிகிறது
அவளின் தவிப்பு!
அக்கம் பக்கம்
பார்க்காமல்
சிரிக்கிற சிரிப்பு!

பாதியிலே
விட்டுச்சென்று
பார்க்காமல்
இருந்துவிட்ட
பரிதவிப்பு!

புத்தம் புதிதாய்
எனக்கு
அவள் தந்த
இனிப்பு!


இளமையின்
சூழலில்
நான் செய்த
கனிப்பு!

அவள்...
இங்குமங்கும்!
நான்...
அங்குமிங்கும்!

பரிமாற்றத்தின்
கடைசி நேர
உச்சரிப்பு!

காதலுக்கு
அவள்...
கற்று தந்த
பாடத்தின்
படிப்பு!