Friday, 31 May 2013

ஊர் வழக்கு!

மனதின்
மகிழ்ச்சிக்கு
மாறுபட்ட
கருத்து!

தாறுமாறான
உலகில்
தவறி
செய்யும்
பிழைகள்!


சிந்தனைக்கு
முன்...
சிறியதாய்
ஒரு தடை!

நினைவுகளுக்கு
இட்ட வலை!
மனிதனின்
இரவல்
செயல்கள்!


சுயமரியாதைக்கு
இடைக்கால
தள்ளுபடி!
ஊர் வழக்கு!

Thursday, 30 May 2013

கலக்கங்கள்!

காமலீலைக்கு
கடைசி முழுக்கு!
கரடு முரடான
பார்வைக்கு விடை!

கனவுகளின்
காட்சிக்கு
விதிக்கப்பட்ட
கட்டுப்பாடுகள்!

கவிதையின்
கனிவுக்கு ஏற்பட்ட
கணக்கில்லா
கணக்குகள்!


கன்னக்குமிழில்
கன நேரம்
கண்ணீர்த் துளிகள்!

கஞ்சத்தனமாய்
கட்டிவைத்த
கபடங்கள்!

கண் கெட்ட
காதலுக்கு
கண்டிக்கத்தக்க
கடைசி கடிதம்!
கலக்கங்கள்!


உருதவறிய கரு...

கொடிப் பிடித்த
நெஞ்சத்திற்கு,
கொஞ்சும்
சலங்கை!

நொடிப்பொழுது
சிந்தித்த...
சிரிப்பின் விளைவு
உடல் சீற்றம்!

அவளின்
தவிப்பிற்கு,
அவசரமாய்
கொடுத்த விடை
காதல்!


அச்சத்திற்கு
ஆரவாரம்
செய்த இருட்டு...
காமம்!

உச்சத்தில்
உருதவறிய
சிறுசிறு
குழந்தைகளின்
கருக்கள்...
உயிரின் சேதம்!

Wednesday, 29 May 2013

உயிரின் வேகம்!

சந்திப்புக்கு பின்
சாம்பலின் வேதம்
முடிவின் வேகம்!

ஊடலுக்கு பின்
உணர்ச்சி ததும்பல்
காதலின் வேகம்!


காதலுக்கு பின்
கருமேகம்
தடையின் வேகம்!

உனக்கு பின்
நான்...
உயிரின் வேகம்!

Tuesday, 28 May 2013

புதுத்தாலி!

குனிந்த தலை
நிமிராத...
குலமகளின்
பெருமை!
குவிந்த கைகள்
கும்மாளமிட்ட
மண மேடை
ஊர்வலம்!

சிறு துளிகள்
கண்ணீர்...
சிரிப்பு வராத
பழைய
காதலனுக்கு!


ஒன்றுமறியா
அடிமாடு,
அறிவற்ற
புது கணவன்,
சிரித்துக் கொண்டே
கைக் கோர்த்தான்!

மன நெருடல்கள்...
மணித்துளியில்
கைகள் பிரிந்தன!
காதலுக்காக நஞ்சு
அவள் இறந்தாள்,
புதுத்தாலியுடன்!

வீரத்தமிழ் மகள்!

தொடை நடுங்கி
சிக்கலாய்
சில காலம்
தவித்த தன்மானம்!

வீறுகொண்டு
விரைவாய் எழுந்து
சாத்திவைத்த
அரிவாளை
சட்டென்று எடுத்தாள்!


நேற்று பிறந்த
பெண் மகவை
கள்ளிப்பால் கொடுக்க,
பிடுங்க வந்த
கணவணை
வெட்டி சாய்த்தாள்!

சிரித்துக்கொண்டே
சிறை வாசம்!
சின்ன குழந்தைக்கு
சிறப்பாய் ஒரு...
முத்தம்!

இனியாவது
பெண்ணினம்
தழைக்கட்டும்!

உடன் மன்னிப்பு!

ஒரு நிமிட
தவறுக்கு
மனிதனின்
வருத்தங்கள்
வாழ்நாள் வரை!

தவறுதல்கள்
நியாயங்கள் தான்,
தறிகெட்டு போதல்
அவமானங்கள்!


அன்பும் பகையும்
அடகு வைக்க
படும்போது,
அரவனைப்பில்
தவறுகள்!

உடன் மன்னிப்புகள்
தவறுகளின்
பிறத் தோற்றத்திற்கு
முட்டுக்கட்டை!

Monday, 27 May 2013

சாலைகள்!

உணர்வுகளின்
உருவாக்கம்,
கண்ணீர்
திவளைகள்!

உண்மையின்
உருப்பெருக்கம்,
மனிதனின்
கவலைகள்!


கனவுகளின்
கலக்கங்கள்
அவளின்
லீலைகள்!

கடைசியில்
மனிதனின்
காதல்கள்...
வாழ்விற்கு
நல்ல
சாலைகள்!

சிறைக்கு பின்னும்!

தமிழே!
ஊழ்வினையின்
ஓரத்தில்,
நெஞ்சில் உரமற்று
நிற்கும் அவன்...

உற்சாகத்தின்
கெடுபிடியில்
உன்னை
பல வகையில்
போற்றிப் பாடும்
இளம் கவிஞன்!


நெஞ்சில் மட்டும்
நேர்மை நிறுத்தி,
உலகின் வஞ்சத்தில்
சிக்கி தவிக்கும்
தடைமிகுந்த
மனிதன்!

இருப்பினும்...
சிறைக்கு பின்னும்
சிந்தனை செய்து,
உன்னை செல்லமாய்
கட்டியணைக்க
துடிக்கும்
காதலன்!

Sunday, 26 May 2013

ஏட்டிக்கு போட்டி!

பேருந்தில்
பெண்கள்
பகுதியில்
ஆண்கள்!


இங்கு
வாகனங்களை
நிறுத்தாதே!
பகுதியில்
எண்ணற்ற
வாகனங்கள்!


இது...
ஒரு வழி பாதை
என்று தெரிந்த
பின்னும்
வாகனங்களின்
எதிர் நீச்சல்!


காதல்
தேவையில்லை
என்ற பின்னும்
காதலர்கள்!


ஏட்டிக்கு
போட்டி!
மனிதனின்
பிடிவாதம்!

Saturday, 25 May 2013

இருளுக்கு பின் வெளிச்சம்!

குறிப்பறிந்த பின்...
குப்பையில் கிடந்த
குன்றுமணிக்கு
குவிந்தது வெளிச்சம்!


குரோத வழிக்கு பின்...
குணமற்ற மனிதனுக்கு
குறுகியது நெஞ்சம்!

குணத்திற்கு பின்...
குன்றி போனது
குலமகளின் பெருமை!

குருட்டு காதலுக்கு பின்...
குமட்டியது
குமரியிடம் காதல்!


குடி போதைக்கு பின்...
குனிந்து போனது
குன்றிய தத்துவங்கள்!

குலப்பெருமைக்கு பின்
குன்றின் பெருமை?
குட்டு பெற்ற
கும்மிருட்டுக்கள்!
குற்றங்களின்
குவியல்கள்!

குவியும் வெளிச்சம்
குருடனை மாற்றுமா?


Friday, 24 May 2013

சோகத்தின் பரிசு!

அவசரமாய்
எழுந்தேன்!
அவளின்
கனவுகளுக்கு
விடை கொடுத்தேன்!

தேங்கிய
தெளி நீரில்
குளித்து முடித்தேன்!
மனதில் குளிர்ச்சி!

கண்ணாடி முன்
மதிமயங்கி
ஒப்பனை செய்தேன்!
அவள் அழகின்
ஈடுபாடுகள்!


அமைதியாய்
நடந்தேன்!
அவளின்
நினைவுகளுக்கு
நான் கொடுத்த
இன்ப வேளை!

ஆழ்ந்த சிந்தனையில்
முகம் தடவினேன்!
அவளுக்கு நான்
தந்த காதல் பரிசு
கருந் தாடி!

அவசரத்தில்
சோகம் மறந்தேன்!
மீண்டும் ஏக்கம்
இரவு அழைத்தது
அவளின்
கனவுகளுக்காக!

Thursday, 23 May 2013

உளறல்கள்!

இன்னல்களின்
பரிமாணங்கள்!
இடர்பட்ட
நெஞ்சத்தில்
இடைஞ்சல்கள்!

உடமைக்காக
ஏற்பட்ட
உளறல்கள்!
அவளுக்காக
எனது தவிப்புகள்!


எண்ணி எண்ணி
ஏமாந்த நெஞ்சத்தில்
திடீர் காட்டுத் தீ!

தேவையில்லை
என்ற பின்னும்
ஏற்பட்ட சலனங்கள்!

இதமாய் இருந்த
இன்ப சிந்தனையில்
உடன் மாற்றம்!
அவள் உருவத்தின்
தோற்றம்!
கண்களுக்கு
தண்டனை!

இல்லாத உறவுகள்!

தூண்டாத
நெருப்புக்கு
தூக்கணாங்
குருவியின்
பாட்டு!
உணர்வுக்கு
வைத்த உலை...
வேகாத
செம்பொன்!

பெண்ணுக்காக
பிதற்றல்...
இறுமாப்பில்
இறப்புகள்!


வேண்டும்!
அவள் வேண்டும்!
என்ற சொல்லுக்கு
முள் வேலி!

மலர்...
அவளைப் பறிக்க
தூவானம்
மெருகு கட்டியது!

இல்லாத உறவுக்கு
எழுத்துக்கள்...
தள்ளாத உறவுதான்
காதல்!
தடைகளின்
முனகல்கள்!

இடைச் சொருகல்!

கைத்தறி
ஆடைக்குள்ளே
நூலாய்
நுழைந்துவிட்டவள்!

அவள் கண்களின்
காந்தத்திற்கு,
என்னிடம்...
திடீர் மின்சாரம்
பெற்று அதிர்ந்தவள்!


விரித்துவிட்ட
கூந்தலில்
என்னை
தலையணியாய்
இடைச் சொருகியவள்!

நான் வடித்த
கண்ணீருக்கு
உள்ளங்கை
ஏந்தியவள்!

நான் சிரித்துவிட்ட
ஓசையில்
வெட்கம்
கொண்டவள்...?
என் காதலி!

Wednesday, 22 May 2013

அவளின் சந்திப்புகள்!

கருங்கல்லில்
வடித்தெடுத்த
சுனை நீர்!

மன்மத களிப்பின்
பகல் நேர
நாட்டியங்கள்!

ஒட்டிய உறவுக்கு
கிடைத்த
வேதனைகள்!


மனித நேயத்தின்
உச்சி வெயில்
ஓலங்கள்!

உருவத்திற்கு
கிடைத்த
இடைக்கால
அருவருப்புகள்!

தேனுக்கு கிடைத்த
சிறிய தெவிட்டல்கள்!
அவளின்...
சந்திப்புகள்!

மகப்பேறு!

மோகத்தீயின்
இறுதி சடங்கு!

இன்பகளிப்பின்
இலக்கிய நயம்!

இடர்பட்ட
வேதனையின்
முழு விடுதலை!

இருட்டுக்கு
ஏற்பட்ட
முழுமையான
விடிவு காலம்!


உறவுக்கு
கிடைத்த
அழகான
அன்பளிப்பு!

உயிருக்கு
ஏற்பட்ட
உரசல்!

மனித மூச்சுக்கு
ஏற்பட்ட
முக்கிய சிக்கல்!

உணர்வுகளின்
உச்சக்கட்ட
வேதனை,
இந்த ஏற்றமிகு
மகப்பேறு!

Tuesday, 21 May 2013

ஏழ்மை!

வற்றிய கன்னம்,
வாசனைத்தூள்,
கருப்பு முகத்தின்
கண்களில்
பளிச்சிடும் ஒளி!

ஒட்டிய உடல்,
உலர்ந்த மேனி,
இல்லாத மார்புக்கு
குறுக்கு மாராப்பு!

அழுக்குத் தலை,
மூன்று நாளாய்
வைத்து வைத்து
எடுத்த...
வாடாமல்லிப் பூ!


அம்மாவின்
அதட்டல்...
அவசரமாய் சீவி,
பழைய பூவை
தலையில் சூடி,
வயலுக்கு
சென்றாள்!
நாற்று நடுதல்
வேலைக்கு!

இரவில் மட்டும்
ஒரு வேளை
உணவுக்காக,
அவளின்
காந்த கண்கள்
பகலில் மட்டும்
வற்றிவிடும்
பசியால்!

Monday, 20 May 2013

கரிசல்காட்டு பசுமைகள்!

உயர்வின்
வெளிச்சத்திற்கு
பின்னும்
தெரியும் இருள்!

உண்மையின்
ஆர்ப்பாட்டத்திற்கு
பின்னும்
தெரியும் அடக்கம்!

உறவின்
இறுக்கத்திற்கு
பின்னும்
தெரியும் உரசல்!


கரிசல் காட்டின்
இருளுக்கு
பின்னும்
தெரியும் பசுமை!

மனதின்
ஆழ்ந்த சிந்தனைக்கு
பின்னும்
தெரியும் அவசரம்!

மனித மனத்தின்
நிகழ் கால
தடுமாற்றங்கள்!

காதல் மாற்றம்!

கோரமான
உருவத்திற்கும்,
கயமை
குணத்திற்கும்,
மூர்க்கமான
முரட்டுத்தன
பழக்கத்திற்கும்,
ஆர்ப்பரிக்கும்
இதயத்திற்கும்,
அடங்காத
உணர்ச்சிக்கும்,
ஒரே மாற்றம்
காதல்!


காதல் மாற்றம்
இவ்வுலகின்
அடித்தளத்தையும்
மாற்றும்,
கவிஞனாய்
என்னையும்
மாற்றும்!

செய்திகள்!

உயிர்
போகும் முன்...
ஒரு சிறப்பு
செய்தி அறிக்கை!


நம் காதல்
இன்னும்
சாகவில்லை!

அடிவானம்...

மயிலின் நடனம்...
வான் கோழியின்
தோகை விரிப்புக்கு
அடிவானம்!

அற்பத்தனம்...
மனிதனின்
பெருமைக்கு
அடிவானம்!

அருவியின்
சலசலப்பு...
மூடுபனியின்
குளிர்ச்சிக்கு
அடிவானம்!


தற்பெருமை...
மனிதனின்
தன்மானத்திற்கு
அடிவானம்!

பகலின் கொடுமை...
நெஞ்சத்தீயின்
கொதிப்புக்கு
அடிவானம்!

அமைதி...
மனிதனின்
உயர்வுக்கு
அடிவானம்!

Sunday, 19 May 2013

எரிமலையாய்...

குரங்குத்தனத்தின்
கும்மாளம்,
உறக்கத்தின் ஓரம்
தசைப்பிடிப்பின்
வீரம்...

விளையாட
கவரிமான்...
வலைக்கு
பின்னும்
காவல்!


ஓர விழியின்
அம்பு முனை...
அணைத்த பின்னும்
ஒளியில்லை!

தாகத்திற்கு
ஒரு துளி
நஞ்சு...
உன் இனிய
மொழிகள்!

உன் உரசலின்
வெப்பம்
எரிமலையாய்!
நான்...
கருகிவிட்டேன்!

தனிமையில் ஏகாந்தம்!

உதிரத்தின்
கடைசி துளியில்
குளிர்ச்சியின்
போர்முனை!

இனிமையின்
பரிதவிப்பில்
இன்பத்தின்
ஏக்கம்...
இணைந்த பின்
சிகரமாய்!


உனக்காக
ஒரு ஓலம்...
தனிமையில்
ஏகாந்தம்!

கூடி மகிழ்ந்தும்
தனிமை...
உரிமைக்காக
ஒரு பிதற்றல்!

உன்னுடைய
காதல்...
நீ!  எங்கே?

Saturday, 18 May 2013

உருவமில்லா உறவுகள்!

மூச்சுக்காற்றின்
முடிவிலும்...
உருவம் பெறாத
உறவுகள்!

இறுதி சொட்டு
இரத்தத்திலும்...
கூடவே
ஒரு முனகல்!


எத்தனையோ
பேரிரைச்சல்...
அமைதியாய்
அடிவானத்தின்
ஒளி பிம்பம்!

கதறித்துடிக்கும்
நெஞ்சத்தில்...
மீண்டும்
ஒரு கசங்கிய
மலர்!

உதறித் தெளித்த
பின்னும்...
உருவத்திற்கு
ஓலமிடும்
தெளிந்த நீர்!
கறை படிந்த
காதல்!

Friday, 17 May 2013

தலைக்குனிவு!

கொற்றி
கூறு போடப்பட்ட
இரத்தம் தோய்ந்த
தசை பிண்டங்கள்,
கொலை வெறி!
மனிதன் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!

அடைபட்டு கிடந்த
கொழுப்ப்பின்
சிதறல்...
அவசர மோகம்
வன்புனர்ச்சி!
அன்பு என்ற
வார்த்தைக்கு
தலைக்குனிவு!

உல்லாசக் காற்றில்
ஊர் சுற்றிய பின்பும்,
ஓரமாய் தவிக்கும்
காதலின் இதயம்!
தன்மானம் தடுக்கிறது
கரையேறவில்லை
காதல்...
காதல் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!

சண்டை!

கரித்துண்டுகளின்
கிறுக்கல்கள்,
உணர்ச்சிகளின்
ஓங்கல்கள்,
கருவின் இருளில்
அவசரமாய்...
முளைத்த ஓவியம்,
மனித உடலுக்குள்
சிறியதாய்
ஒரு சண்டை!

தன்னிறைவு
எட்டிப்பார்க்கிறது,
கரடு முரடாய்
முயற்சி!
சிதறுகிறது சிற்பம்...
உடல் உறுப்புகளின்
தூண்டல்கள்,
உள்ளுக்குள்ளே
பெரும்புயல்,
வெளியே வந்தது
பனியில் நனைந்த
ரோசாப்பூ!
இப்போதும்...
உடலுக்குள்
பெரிய சண்டை!
.

Saturday, 11 May 2013

தாழ்மையின் முனகல்கள்!

வைரம்
மின்னுவதை
எண்ணி,
கரித்துண்டுகள்
கலங்கினால்...

செந்தாமரையின்
புனிதம் எண்ணி
சேற்று மண்
பெருமூச்சு
விட்டால்...

தேனின்
உயர்வு எண்ணி
தேனிக்கள்
கொந்தளித்தால்...

ஊற்று நீரின்
உயர்வு எண்ணி
ஊற்றுக்கண்
வருத்தம்
கொண்டால்...

கனியின்
சுவையை எண்ணி
பழ மரங்கள்
ஏங்கினால்...

உயர்வுகளின்
பெருமை எண்ணி
அடித்தலங்கள்
பொறாமை
கொண்டால்...

அழிவின் காலம்
ஆரவாரம் செய்யும்!
உயர்வுகளை
அடித்தோன்றல்கள்
அசைக்க நினைத்தால்
அற்பத்தனம்!

பிறந்த பெருமை
ஒரு போதும்
மறைவதில்லை!
மனிதனே!
மாற்றானின்
உயர்வுக்கு
பொறாமை
கொள்ளாதே!

உனது முயற்சிக்கு
அடித்தளம் கட்டு!
நீ உயர்வாய்!

Friday, 10 May 2013

பஞ்சனை!

தூய்மை
கேலி செய்கிறது!
பஞ்சனையில்
விரிசல்!

மனிதனின்
சிரிப்புகள்!
தவறிப்போகும்
எதிர்காலம்!

ஏக்கத்தின்
பரிதவிப்பு!
உறவுகளில்
ஏமாற்றம்!

பரிமாற்றம்
காத்திருக்கிறது!
மனிதனின்
சவ ஊர்வலம்!

உறக்கத்தில்
கனவுகளின்
களியாட்டம்!
உணர்வுகள்
ஊஞ்சலாடுகிறது!
மீண்டும்...
பஞ்சனையில்
அழுக்குகள்!

Thursday, 9 May 2013

உடலின் பாடம்!

நாசிக்குள்
நுழைந்து
வேதனை
செய்ய வரும்
நச்சுக்களே,
உடனே
விலகுங்கள்
தும்மலின்
கட்டளை!

வயிற்றுக்குள்
புகுந்து
நஞ்சாய் மாறும்
தேவையற்ற
வீணர்களே,
வெளியேறு!
குமட்டலின்
உறுமல்!

உடல் குருதிக்குள்
நுழைந்து
நோய் செய்ய வரும்
கெட்ட மிருகங்களே,
என்னுடன்
போர் செய்ய
வாருங்கள்!
வெள்ளை
அணுக்களின்
ஆரவாரம்!

இதய நெருடலுக்கு
இனிமை செய்ய
வேண்டி...
சோகமே!
உடனே வெளியேறு!
கண்ணீரின்
வேண்டுகோள்!

உடலுக்குள்
எதிரிகளின்
இலக்கு
வெகு நேரம்
நிலைப்பதில்லை!

மனிதனே!
எதிரிகளை
சிந்தித்து தாக்க
உரிமையில்லை
உனக்கு!

தேவையற்றவன்
உலகின்
முதல் எதிரி!
தூக்கி எறி
அவனை!

துன்பம் உனக்கு
தேவையில்லை!
உன் உடலிடம்
பாடம்
கற்றுக்கொள்!

உலகின் பிடியில்...

ஆர்ப்பாட்ட
வாழ்விற்கு
ஆசைப்பட்டேன்!
அடக்கப்பட்டேன்
அன்று!

அமைதியாய் வாழ
ஆசைப்பட்டேன்!
ஆனால்...
கலவர வாழ்விற்கு
கைக்கோர்த்து,
நசுக்கப்பட்டேன்
இன்று!

நான்...
இப்போது
உலகின் பிடியில்
ஊஞ்சலாடும்
அவல உயிர்!

Wednesday, 8 May 2013

கண்ணீராய்...

செடிக்குள்ளே
புகுந்து
இளந்தளிராய்,
பூவாய்,
கனியாய்,
மாறி...

திடிரென்று
ஆவியாய்
மறைந்து,
மழையாய்,
தெள்ளமுதாய்,
தெளிநீராய்
மாறி...

எனக்குள்ளே
புகுந்து
செங்குருதியாய்,
சிறுநீராய்,
வியர்வையாய்
மாறி...

மனித
உணர்வுக்குள்
சிக்கி,
சீரழிந்து,
கண்ணீராய்
மாறும் நீ...
வெறும்
தண்ணீர்!


Tuesday, 7 May 2013

சலனங்கள்!

இதயத்தில் கீறல்!
அய்ந்து நிமிடம்
அமைதி...
கண்ணீர் துளிகள்!
கைகள் கட்டப்பட்டன!

மனிதனின் முயற்சி!
புண்ணுக்கு மருந்து...
ஓய்வு தேம்புகிறது!

வீண் பொழுதின்
கிளர்ச்சிகள்...
சல்லாபம் சிரிக்கிறது!

வானுக்கு வில்!
உயர்வுகளின்
ஓலங்கள் மறைகிறது...
விண்ணில் வெளிச்சம்!

மனிதனின் சலனங்கள்
கூறு போட...
சில நிமிடங்கள்
இயற்கை
தூங்க வேண்டும்!

Monday, 6 May 2013

நீருக்கு வேதனை!

தூய நீரில்
சந்தனம்
கலந்தாலும்.
சாக்கடை
கலந்தாலும்
நாற்றம்தான்!

ஒன்று ரசிக்க!
மற்றொன்று
வெறுக்க!

நீருக்கு வேதனை!
ரசிப்பவர்கள்
அள்ளிப் பூசுவார்கள்!
வெறுப்பவர்கள்
அள்ளி வீசுவார்கள்!

சேர்ந்து மகிழ்ந்ததால்
நீருக்கு துன்பம்!

மனிதனின்
நட்புக்கு கண்ணாடி!
நல்ல சேர்க்கை
மணக்கும்!

Friday, 3 May 2013

இரண்டாம் சோகம்!

படபடக்கும்
நெஞ்சத்தில்
பஞ்சனை
விரித்தேன்!

நான்...
இரவு நேரத்தின்
இனிமை எண்ணி
ஆழ்ந்து உறங்கினேன்!

ஓ!
காவலுக்கு நின்ற
சோக நினைவுகள்
எங்கே?

என் புதியக் காதலின்
புதுமைத் தென்றலால்
ஓரமாய்...
விலகிச் சென்றதோ?

இல்லை இல்லை
சோக நினைவுகளே!
காத்திருங்கள்!

என் புதியக்காதலின்
இறுதியில்
இரு மடங்காய்
சோகம் பரிமாறலாம்!

Thursday, 2 May 2013

யார் தமிழன்?

யார் தமிழன்?
என்று ஆராய்ந்து,
எந்த தலைவன்
தமிழன் என்று
கேலி பேசி,
மண்ணுக்கு
சொந்த
தமிழனை
சோம்பலாக்கி,
காலங்காலமாய்
வாழ்ந்து வந்த
ஈழத் தமிழர்
எண்ணற்றோரை
இழந்துவிட்டோம்!

மந்த புத்தியால்
மயங்கி கிடக்கும்
தமிழனே!
உனது புலி போன்ற
போர் குணம்
எங்கே?
காளையை அடக்கி
இல்வாழ்வு ஏற்ற
உன் வீரம் எங்கே?
நெஞ்சில் விழுப்புண்
ஏற்கும் துணிவு
எங்கே?
இவை யாவும்
புற நானூற்றுக்கு
மட்டும்...
சொந்தமாக்கிவிட்டு
தூங்கிவிட்டாயா?
தமிழனே!

தொப்புள் கொடி
உறவுகள்...
என்பதால் தான்,
தாய் மண்ணின்
உறவை,
துண்டித்து
மறந்தாயா?

உலகத் தமிழர்கள்
உயிருக்கும் மேலான
சொந்தங்கள் என்று
இனியாவது சொல்!

தமிழனே!
நமது உறவுகளை,
தலைவர்கள்
மட்டும்தான்
காப்பாற்ற
வேண்டுமா?
தமிழர்கள்
அனைவரும்
புயலெனப் புறப்படு
ஈழம் நோக்கி!

நமக்கு ஆயுதம்
தேவையில்லை!
முடிந்தால் ஈழத்தை
மீட்போம்!
இல்லையேல்
நாமும்...
உயிர்கொடுப்போம்!

தமிழனே!
நீ கிளர்ந்து எழு!
தலைவர்கள்
உன்னை தேடி
வருவார்கள்!