Saturday, 25 May 2013

இருளுக்கு பின் வெளிச்சம்!

குறிப்பறிந்த பின்...
குப்பையில் கிடந்த
குன்றுமணிக்கு
குவிந்தது வெளிச்சம்!


குரோத வழிக்கு பின்...
குணமற்ற மனிதனுக்கு
குறுகியது நெஞ்சம்!

குணத்திற்கு பின்...
குன்றி போனது
குலமகளின் பெருமை!

குருட்டு காதலுக்கு பின்...
குமட்டியது
குமரியிடம் காதல்!


குடி போதைக்கு பின்...
குனிந்து போனது
குன்றிய தத்துவங்கள்!

குலப்பெருமைக்கு பின்
குன்றின் பெருமை?
குட்டு பெற்ற
கும்மிருட்டுக்கள்!
குற்றங்களின்
குவியல்கள்!

குவியும் வெளிச்சம்
குருடனை மாற்றுமா?


No comments:

Post a Comment