Thursday, 25 December 2014

கூடு கட்டி... (ஓவியம்: அசோக்)

பச்சை பாவாடை,
சட்டைக்குள்...
பூத்திட்ட பருவம்!


எண்ணக் குவியலில்...
எக்கு தப்பாய் நீ!

மணிகள் அணிந்த ...
கழுத்துக்கும் தான்,
உன் மாலையின்...
பாரம் தாங்க ஏக்கம்!

கூடு கட்டி... (ஓவியம்: அசோக்)
===========
பச்சை பாவாடை,
சட்டைக்குள்...
பூத்திட்ட பருவம்!
எண்ணக் குவியலில்...
எக்கு தப்பாய் நீ!

மணிகள் அணிந்த ...
கழுத்துக்கும் தான்,
உன் மாலையின்...
பாரம் தாங்க ஏக்கம்!

நான் சேலை உடுத்தி
சிங்கார ரவிக்கை... 
சில்லென்று போட்டு,
மாலை வெய்யிலில்
மஞ்சளாய் போவதெப்போ?

கூனி குருகி அமர்கிறேன்,
கூட வர மாட்டாயோ?
கூட்டி சென்று என்னையும்
கூடு கட்டி வைப்பாயோ?

நான் சேலை உடுத்தி
சிங்கார ரவிக்கை...
சில்லென்று போட்டு,
மாலை வெய்யிலில்
மஞ்சளாய்
போவதெப்போ?

கூனி குருகி
அமர்கிறேன்,
கூட வர
மாட்டாயோ?

கூட்டி சென்று
என்னையும்
கூடு கட்டி
வைப்பாயோ?

கருப்பூ....

கருப்பூ....
=========
மார்கழி பூவே!
மனம் மாறினாயோ?
காதலர் கண்ணீர்
பனித்துளியாய்...
உனை நனைக்க,
சோகமே உருவாய்,
நிறம் மாறா இதழ்...
விரித்தாயோ?
கருப்பு நிறம் தந்து,
கண் மூடினாயோ?
காதலுக்கு!


மார்கழி பூவே!
மனம் மாறினாயோ?
காதலர் கண்ணீர்
பனித்துளியாய்...
உனை நனைக்க,
சோகமே உருவாய்,
நிறம் மாறா இதழ்...
விரித்தாயோ?
கருப்பு நிறம் தந்து,
கண் மூடினாயோ?
காதலுக்கு!

மன்னிப்பாயா? (ஓவியம்: அசோக்)

நான் திகைத்தபோது...
நீ தந்த ரோசாப் பூ?
நான் அழும்போது
என் மூளைக்குள்
வந்து சென்ற நீ!


காதல் தோல்வியில்
எனக்காக இறந்து,
காதல் பாடையில்
ஊர்வலம் சென்ற...
கருப்பு நிழல்! நீ?

மன்னிப்பாயா? (ஓவியம்: அசோக்)
=============
நான் திகைத்தபோது...
நீ தந்த ரோசாப் பூ?
நான் அழும்போது
என் மூளைக்குள்
வந்து சென்ற நீ!

காதல் தோல்வியில்
எனக்காக இறந்து,
காதல் பாடையில்
ஊர்வலம் சென்ற...
கருப்பு நிழல்! நீ?

நான் தலையில்
சூடும் பூக்களும்,
வண்ணம் பூசிய
என் முகமும்...
பொய் வாழ்வில்
புன்னகைக்கிறோம்!

இல்வாழ்வில்...
நல்லவள் நான்!
கணவனுக்கோ?
கட்டுப்பட்டவள்!
மனதை மட்டும்...
ஏமாற்றியவள்!


நான் தலையில்
சூடும் பூக்களும்,
வண்ணம் பூசிய
என் முகமும்...
பொய் வாழ்வில்
புன்னகைக்கிறோம்!

இல்வாழ்வில்...
நல்லவள் நான்!
கணவனுக்கோ?
கட்டுப்பட்டவள்!
மனதை மட்டும்...
ஏமாற்றியவள்!

வா என்னருகில்... (ஓவியம்: அசோக்)

முகத்துக்குள்..
முகம் பார்த்து,
அகத்துக்குள்
காதல் விதைத்து,
அன்பு நீர் பாய்ச்சி...
காதல் மரத்தின்
கிளைகளானோம்!


வா என்னருகில்... (ஓவியம்: அசோக்)
================
முகத்துக்குள்..
முகம் பார்த்து,
அகத்துக்குள்
காதல் விதைத்து,
அன்பு நீர் பாய்ச்சி...
காதல் மரத்தின்
கிளைகளானோம்!

ஆழ்ந்த இதயத்தின்
ஆனி வேராய்...
பூத்து குலுங்கிடும்,
புதுமை காதலில்...
கண்ணுக்குள்...
கவிதை எழுதி,
காதலர்க்கோர்
வரலாறு படைத்து,
இணையாய்...
வாழ்ந்திடுவோம்
என்னவளே?

வா என்னருகில்...
இதழ் கோர்ப்போம்!

ஆழ்ந்த இதயத்தின்
ஆனி வேராய்...
பூத்து குலுங்கிடும்,
புதுமை காதலில்...
கண்ணுக்குள்...
கவிதை எழுதி,
காதலர்க்கோர்
வரலாறு படைத்து,
இணையாய்...
வாழ்ந்திடுவோம்
என்னவளே?

வா என்னருகில்...
இதழ் கோர்ப்போம்!

என் கண்கள் மூடி... (ஓவியம்: அசோக்)

கடுங்குளிர்...
கானம் பாடும்,
தேகமெல்லாம்
நடமாடும் வேளையில்
எங்கேயடா போனாய்?
என்னவனே?


இடை மெலிந்து
உடை நழுவியதோ...
என இறுக்கமாய்,
கைக் கட்டினேன்?



துள்ளும் இளமை
துவண்டுவிடாமல்...
எத்தனை நாள்
தனித்திருப்பேன்?

நீ எதிரே வந்தால்?
என் கண்கள்...
உன்னை எரித்து
பொசுக்கிவிடும்!

அவசரமாய்...
அள்ளிக்கொள்...
என் கண்கள் மூடி
பின்புரமாய்...
கட்டியணைத்திடு!
மன்னவனே!

கதவை திறக்க... (ஓவியம்: அசோக்)

சரிந்த மார்பின்...
சரித்திரம் சொல்லும்,
என் நெஞ்சத்துள்
உறைந்திருக்கும்
உள்ளுறை சோகத்தை!


ஊமைவிழிகள் அல்ல
உன் வரவு பார்த்து,
பார்வை மறைந்த
குருட்டு விழிகள்!

கதவை திறக்க... (ஓவியம்: அசோக்)
===============
சரிந்த மார்பின்...
சரித்திரம் சொல்லும், 
என் நெஞ்சத்துள் 
உறைந்திருக்கும் 
உள்ளுறை சோகத்தை! 

ஊமைவிழிகள் அல்ல 
உன் வரவு பார்த்து, 
பார்வை மறைந்த 
குருட்டு விழிகள்! 

வச்ச குறி.. தவறாத 
குடும்ப பெண் நான்! 
அதனால்... 
காமத்தை விழுங்கிய, 
கரை சேரா... 
முதிர் கன்னி!

என் வெப்பம் தணிக்க, 
இளைஞனாய்... 
மட்டும் வராதே? 

அடைத்து வைத்த, 
கதவை திறக்க...
அசத்தும் வீரனாய் 
வா என்னவனே!


வச்ச குறி.. தவறாத
குடும்ப பெண் நான்!
அதனால்...
காமத்தை விழுங்கிய,
கரை சேரா...
முதிர் கன்னி!

என் வெப்பம் தணிக்க,
இளைஞனாய்...
மட்டும் வராதே?
அடைத்து வைத்த,
கதவை திறக்க...
அசத்தும் வீரனாய்
வா என்னவனே!

இதம் தேடிய... (ஓவியம்: அசோக்)

காதல் வானில்
சிறகடித்து...
பறக்கிறேன்!
வானமும்...
வசப்படவில்லை,
காதலும்...
கரைசேரவில்லை?

கண்னை மூடி...
காதலை மறுத்தாள்!
கற்பனை யாவும்
கண்டபடி அழித்தாள்!


என் காதலை...
அலங்கரிக்கும்,
ரோசா அல்ல, அவள்?
என் இதயம் கீறிய...
நஞ்சுள்ள முள்!


இரும்பு இதயத்தில்...
இதம் தேடிய மூடன்?
இன்னமும் வானத்தில்...
சுற்றி திரிகிறேன்!

இருள் வேதனை? (ஓவியம்: அசோக்)

இன்ப தேசத்தின்,
இனிமை துள்ளல்கள்,
இயந்திர வேகத்தில்
இளமை பரிமாற்றம்!


இனிப்பாய் ஊதிய,
இனிய மகுடிக்கு,
பாம்பாய் படமெடுத்து
அசைந்தாடினேன்!
இசையின் மோகத்தில்,
பம்பரமாய் சுழன்றேன்!



மின்னலடா.......!
நீ தந்த முத்தம்,
இடியாய் இறங்கியது
என் இதயத்தில்!


குளிரில் மிதக்கிறேன்,
புது வெள்ளை மழை!
மீண்டும் மீண்டும்...
சுக போதனையின்
இருள் வேதனை?

உடல் உருகி... (ஓவியம்: அசோக்)

வலி தந்த...
வாழ்க்கை,
பொலிவிழந்த...
புன்னகை,
நிலை தவறிய
காதல்?


வழித்தடம்...
இல்லா வறட்சி,
நெஞ்சம் குதறினாய்,
வஞ்சனை செய்தாய்,
காதல் மறந்தாய்,
கனவை...
கருப்பாக்கினாய்!



ஓலமிட்ட காதல்,
ஒழிந்ததடி உன்னால்
ஓவியமாய்...
வரையக்கூட,
பசுமை இல்லை?

என் உடல் உருகி,
ஊண் உருகி,
மடிந்த காதல்!
என்னை...
உரு தெரியாமல்...
மடித்த காதல்!

காத்திருந்த
கொக்கும்...
கருகி போனதடி,
வளம் செழிந்த வாழ்வு,
வறண்டு போனதடி!

தேடி வா! என்னை,
எஞ்சியுள்ள...
எலும்புகளை,
அள்ளிப் போ?
காதல் வீதியில்...
கடை விரிக்கலாம்!

கண் திறந்ததும்... (ஓவியம்: அசோக்)

கனவு தேசத்தின்,
கலை மகள் நான்!
நினைவு சதுக்கத்தின்
நீந்த முடியாத...
நிலை மகள் நான்!


காலை பொழுதிலும்
கண்மூடிய சிந்தனை,
நீ! தீண்டிய தேகம்...
தீப்பற்றி எரியுதடா?


பார்க்க முடியா...
இருள் நிறைந்த,
வாழ்வா எனக்கு?
ஒளியற்ற கண்களில்...
கோலம் முழுவதும்
பொலிவற்ற காதல்!

காதலையும்...
காமத்தையும் தந்த?
என்னுயிரே....
கண் திறந்ததும்,
நான் உன்னை...
பார்க்க வருவாயா?

தேன் எடுத்த... (ஓவியம்: அசோக்)

காற்றும்...
வெட்கி போகும்,
கிடுக்கி பிடி,
இள நாற்றும்
துவண்டு போகும்,
இளமையின் பிடி!


தாகத்தில்
வந்த மானை...
மோகத்திலா
வளைப்பது?


நதியோரத்தில்...
உடைத்துகொண்ட
ஓடையாய்,
சில்லென்று...
மேனி சிலிர்க்குதடா,
உன் உடல் கசிந்த நீர்!

இன்ப சுகம் தந்து,
துன்பம் போக்கிய
மன்னவனே!
காவியமும்,
காப்பியமுமாய்...
நம் காதல்!

தேன் எடுத்த உனக்கு,,,
உன் புரக்கையில்
இனிப்பு சுவைத்துகொள்!

என்னில் மூடிவிடு...(ஓவியம்:அசோக்)

துயில் கொள்ள
முடியவில்லை,
துவளுகிறேன்!
செல்லக்கூந்தலும்
சிணுங்கியதே?
உன்னை பாராமல்!

உளி கொண்டு
செதுக்கிய சிற்பம்
அல்ல நான்...
தூரிகை உடலில்
பட்டாலும்,
துடித்திடும்
உணர்ச்சி பிரவாகம்!



நீயில்லா...
பஞ்சு மெத்தை,
என் உடல் வெப்பம்
இரவல் கேட்கிறதே?

மன்னவன்
உன் கை படாமல்
இடை மடிப்பும்,
போக மறுக்கின்றதே !

என்னவனே வந்து விடு,
உன் சிந்தனையை
என்னில் மூடிவிடு!

Wednesday, 17 December 2014

முரண் வாழ்வு! ( படம்: அசோக்)





பாலைவனத்தில்
வறண்டு விட்ட...
என் மூளைச்சாவு!
எல்லையில்லா
வேதனையில்
தொல்லை தரும்
காதல் நினைவுகள்!
தோல்வியில்
துவண்டாலும்
என் சுவாச...
உயிர்மூச்சாய்
இன்பம் தரும்
மலரும் நினவுகள்!
துன்பமே இன்பமாய்...,
எனது முரண் வாழ்வு!

Tuesday, 16 December 2014

விழி நீரில்.... (ஓவியம்: அசோக்)



உன் விழி நீரில்,
நீந்துகிறேன்!
கரை சேரா...
காதல் கரை சேர
விழைகின்றேன்!


அழுவதை கொஞ்சம்
நிறுத்திடு...அன்பே!
உன் நெஞ்சம் தொட,
வெகு தூரமில்லை!

உன் கனவுகளின்...
திரையை கிழித்தெரி!
நான் உண்மையாய்
உன்னைத் தொட
வரும் நாள்....
வெகு தூரமில்லை!