Thursday, 25 December 2014

என்னில் மூடிவிடு...(ஓவியம்:அசோக்)

துயில் கொள்ள
முடியவில்லை,
துவளுகிறேன்!
செல்லக்கூந்தலும்
சிணுங்கியதே?
உன்னை பாராமல்!

உளி கொண்டு
செதுக்கிய சிற்பம்
அல்ல நான்...
தூரிகை உடலில்
பட்டாலும்,
துடித்திடும்
உணர்ச்சி பிரவாகம்!



நீயில்லா...
பஞ்சு மெத்தை,
என் உடல் வெப்பம்
இரவல் கேட்கிறதே?

மன்னவன்
உன் கை படாமல்
இடை மடிப்பும்,
போக மறுக்கின்றதே !

என்னவனே வந்து விடு,
உன் சிந்தனையை
என்னில் மூடிவிடு!

No comments:

Post a Comment