Tuesday, 31 December 2013

சுகம் தந்த சோகம்!

சுற்றி திரிந்து
சுகம் கண்ட
வண்டாய் நான்!
மயங்கியதால்
மாம்பழத்து வண்டு!

இப்போது எனக்கு
மீண்டும் விடுதலை!
மீண்டும் மீண்டும்
அழகை ரசிக்க
புறப்படுகிறேன்!


உடனாய் கிடைத்த
அதிரடி தடை...
அது அவள்
அணிந்திருந்த உடை!
தடங்கலுக்கு
வருந்துகிறேன்!

சுகம் தந்த
சோகமாய்...
மீண்டும் என்னை
மாம்பழத்துக்குள்
புதைத்துக் கொள்வேன்!

விசும்பல்...

உணர்ச்சி
கொந்தளிப்பின்
உன்னத
கொண்டாட்டம்!


பகை என்னிடம்
இனிமையாய்...
விளையாடியபோது,
புன்னகை கூட
கேள்விகுறியாய்
நிற்கும்!

வேதனையின்
விளிம்பில்,
சின்னதாய்...
விசும்பல்!

எச்சரிக்கை!

மனதின்
மறுபக்கம்,
பளிச்சிடும்
சிவப்பு நிற
எச்சரிக்கை!

வீரப்போரில் கூட
புற முதுகு காட்டி
ஓடிவிடும் அவலம்!

பொறுமையின்
விளிம்பில் ஏற்படும்
வரம்பு மீறிய
எரிச்சல்கள்!


தனிமையின்
இனிமையில் கூட...
இறுமாப்பு தரும்
கசப்புகள்!

சிரித்துக்கொண்டே,
என் கவிதைக்கும்
கை காட்டி
சென்றுவிட்ட அவள்....
காதலின் தோல்வி!

Monday, 30 December 2013

வஞ்சகம்!

உன் நெஞ்சத்தில்
மதில் எழுப்பி,
என்னை
மதில் மேல்
பூனையாய்,
நிறுத்தி வைத்த நீ...
வஞ்சகக்காரி!


ஒருபக்கம் காதல்
மறு பக்கம் காமம்,
எந்த பக்கம்
குதித்தாலும்...
என்னை
இழந்துவிடுவேன்
நிச்சயமாய்!

Thursday, 26 December 2013

ஆணுக்கு... பெண்...

குளிருக்கு
இணையாய்
வெப்பத்தின்
சுகம்!


மனைவிக்குகூட
ஆண் துணை
தேடும்...
கணவனின்
அவலம்!

ஆணுக்கு பெண்
சரி நிகர்!
வாழ்க பாரதி!

Tuesday, 24 December 2013

பதவி நீக்கம்

பரிதவிப்பின்
உச்சத்தில்
உல்லாச
ஊஞ்சல்!

வானுக்கும்
மண்ணுக்கும்
நீட்டிய
அளவு கோல்கள்!


தேகத்தை
மன வேகத்தை
அதிகரித்துவிட்டு,
கடிவாளம்
போட்டு விட்ட
கடைசி நிமிட
துணிவு!

அவனுக்கு
அவள் தந்த
நீக்கம்!

Monday, 23 December 2013

நீரோடை!


இதமற்ற
என் வாழ்வில்
கலங்கிய
நீர்த்துளிகள்!

உற்றுநோக்கினேன்
குழப்பங்கள் ஆயிரம்
கண்கள் பூத்தன!


நிலை தவறிய
வாழ்வின்
தெளிந்த
நீரோடையாய்...
என் கண்களில்
எதிர் காலம்
என்றாவது
தெரியுமா?

Sunday, 22 December 2013

புரட்சி!

புன்னைகையின்
ஓரத்தில்
புதுக்கவிதை
பாடிவிட்டு...


அவள் இதழ்
பதித்த முத்தம்
என் சிந்தனையில்
புத்தம் புது புரட்சியாய்!

நான் இப்போது
கவிஞனாய்….
சோக வரிகளுக்கு
உயிர் கொடுக்கிறேன்!

கவிதை!

வரிகளின்
வழிச்சுவடுகளுக்காக,
என் கவிதையின்
சற்று நேர நிதானம்!


போகத் துடித்தும்
வழிதவறிய நினைவு!
வாழ நினைத்தும்
வகையற்ற
நிலைமை!

என் குமுறிய
நெஞ்சத்தின்
இனிய கீறல்கள்
என் பேனா
விடித்த கவிதை!

Saturday, 21 December 2013

கீறல்கள்!

பட்ட மரத்தில்
நிலை தவறிய
அரும் புகள்!!
அவசரமாய்
தோன்றிய
அற்ப பதர்கள்!

முளைக்கத்
தெரிந்தும்
தழைக்க முடியாத
தவிப்புகள்!

வழுக்கு மரத்தின்
வாழ்க்கை
பிரச்னை
ஏற நினைத்தாலும்
இயலவில்லை!


சந்தியில் எற்பட்ட
தடுமாற்றங்கள்
கழுகுகளின்
பிணவாடை
ஆவேசம்!

அச்சமில்லை
என நிமிர்ந்தபோது
அவசரமாய்
தலையில் விழுந்த
அடி!


சரிவான நினைவுகள்
எல்லாம் வெண் திரையின்
மாய பிம்பங்கள்!

பார்க்கத் துடித்து
பழகி முடித்து
வாழ நினைத்தால்
அவளின்
வீணைச் சிரிப்பு
நான் நடுவீதியில்!

இதயத் தேடலின்
இருதி துடிப்புகள்
ஆர்ப்பாட்டம்
செய்யக் கூட
அவசரத் தடை!

அழுத்தத்தினால்
எழுந்திடும்
தவிப்பினால்
தரக்குறைவு!

தனிமையின்
வேட்கை
இனிமை கெட்டது
இனிமையின்
இனிமை
கசந்து போனது!

இனம் புரியா
இன்னல்களின்
வரைமுறையற்ற
கீறல்கள்!

Friday, 20 December 2013

புதைக்குழி!

புயல் விடும் நேரம்
என நான்
நினைத்த போது
திடீரென்று
வெடித்த பூகம்பம்!

தடுமாறிய வழியில்
தடம்மாற அவசரத் தடை!
வேள்வித் தீயின்
கொடுங்குணம்
அவளின் பழிப்படலம்!


என்னை
நல்வழிபடுத்த,
அவள் அழைத்து
சென்ற இடம்
புதைக் குழி!

என் உயிர்
அடங்கும்போதாவது
உண்மைக் காதல்
தளிர் விடுமா?

Thursday, 19 December 2013

சொல்லாமலே!

என் மனம்
வருடிய போதெல்லாம்,
என் தலை நீவி
என்னை இதமாக்கி
தந்தவள்!

என் சோகத்தை கூட
சுகமாய் மாற்றி,
என்னை இளைப்பாற
செய்தவள்!

என் மகிழ்ச்சியை
தனதாகிக்கொண்டு,
அதனை எனக்கே
தானமாய் தந்தவள்!


நான் அடியெடுத்து
வைத்த போதெல்லாம்,
தோள் கொடுத்து
என்னை அடிபிறழாமல்
காத்தவள்!

என் கண்ணீர்த்துளிக்கு கூட
காவலாய் நின்ற
எனது பாசவலை யார்?
உங்களுக்கு சொல்லாமலே
என் மனதுக்குள்!

Wednesday, 18 December 2013

கவி... காதல்!

கண்ணே!
உன் விழி மேல்
தெரிகின்ற
குருதிச் சுவடுகள்
எல்லாம்...
நான் உனை
நினைத்து
இனிமையாய்
வடித்த கவிதை
வரிகள்!


உன் இமைகள்
மூடுகிற
போதெல்லாம்...
நல்ல கனவுகள்
படைக்கும்!

உன் நினைவுகளை
காந்தமயமாக்கி,
காதல் மின்சாராம்
தரும் என் கவிவரிகள்!

ஓர் எச்சரிக்கை!
பெண்ணே...
மறந்தும் கண்ணீர்
சிந்தாதே!
உண்மை அன்பு
அழிந்து போகும்!
என் கவிதை வரிகள்
அழிந்து போகும்!

Saturday, 14 December 2013

ஓலங்கள்!

நிலையற்ற
உயிருக்கு
மனிதன்
செய்யும்
ஆர்ப்பாட்டம்!

உரமற்ற
நெஞ்சத்தில்
உன்னதத்தின்
வெறியாட்டம்!


ஆடுவார்
ஆடட்டும்,
பாடுவார்
பாடட்டும்,
உயிர் போக
தடையில்லை!

வானுக்கும்
பூமிக்கும்,
நிமிட நேர
உறவுகொள்ளும்
மனித உயிர்..?

Friday, 6 December 2013

என் மனைவியை மட்டும்...

அன்று
அவளுடன்
நான் உறவு
செய்தபோது...
எனக்குள்ளே
ஒருத்தியாய்...
என் நினைவுகளின்
நிழலாய்!

வழிந்த
கண்ணீரைகூட
துச்சமாய்
வீசிய அவள்?

நான் சோகம்
கொண்ட
போதெல்லாம்
சுகம் தந்த
அவள்?


என் இடர்பாட்டுக்குள்
தானாகவே
சிக்கி தவித்த அவள்?

இன்று
என் மனதுக்குள்
அடைபட்ட
புற்றீசலாய்,
கொத்தி குதறும்
கழுகாய்...

என்னை வாட்டி
வதைக்கும் இவள்...
என் மனைவியை
மட்டும்
சிந்திக்கிறாள்!

Thursday, 5 December 2013

உல்லாச வாழ்வு!

செருக்கில்
சிதறிய
சின்ன இதயத்தின்
வழி தவறிய
சுவடுகள்!

அவள்...
சிரிப்பில் ஊறிய
எண்ணங்களின்
ஏமாற்றம்!

தடுமாற்றம் தந்த
உரு மாறிய
வஞ்சனைகளின்
சல்லாபங்கள்!


சுடுகாட்டில் கூட
எரிந்த என்
மண்டை ஓட்டை
உருட்டி விளையாடும்
குள்ள நரிகள்!

மனம் மாறியதால்,
வெறுப்பையே
சுவைக்கிறேன்!
நடை பிணமாய்
வாழ்கிறேன்!

ஊருணியில்
ஊற்று நீரை
அள்ளிப் பருக
துடிக்கும் நான்
தாகத்துடன்!

வானம்...
திறந்த வெளி
சிக்கலில்லை
என்று புறப்பட்டேன்!
வெகு தூரம்
ஏமாற்றம்!

தடுமாறியதால்...
எரியும் கனலில்
என் உல்லாச வாழ்வு!

கேள்விகள்!

கால அடிச்சுவட்டில்
இறுதியில் இனிமை
கண்டவன் நான்!

கறை படிந்த
வாழ்வில்,
வெண்மையின்
திரட்சி கிடைக்குமா?
என்ற ஏக்கம்!


சோகப் புயலில்
சிக்கிய சிறுமணல்
நான்!

சொந்தம் கொண்டாட
ஆயிரம் பேர்!
சுகம் கொண்டாட
யாரோ...?

யார் பாடும்
தாலாட்டில்
எனக்கு தூக்கம்?
விடையில்லை!


இனிமையாய் ஏற்கிறேன்!

என் தூரத்து
பயணத்தில்,
வழியெங்கும்
தடங்கல்கள்!

என் இலக்கை
நினைக்கிறேன்,
துணிந்து
பயணிக்கிறேன்!

அவளை அடைய
துடிக்கிறேன்!
என் காதல்
நெஞ்சத்தை
கலக்கிய அவள்...


ஒடோடி வந்து
அன்பு பரிசாய்
ஒரு துளி நஞ்சும்,
இறுதி முத்தமும்
தந்தாள்!

இதையும்
இனிமையாய்
ஏற்கிறேன்!
இனி நான்
என் இறுதி
பயணம் நோக்கி!

தவிர்க்கிறேன்!

ஆர்ப்பாட்டம்
செய்து,
ஆரவாரம்
செய்த
என் உடலில்
இனியும்
உரமில்லை!

மனத்தளவில்
துணிவு கொள்ள,
சோகத்தையே
சுகமாய் சுமந்த
என் இதயம்
மறுக்கிறது!


சிறகொடிந்த
பின்னே...
இறுமாப்பு
எதற்கு?

இள நரைக்கு
பின்னே...
மோகப்புயல்
எதற்கு?
தவிர்க்கிறேன்!

உணர்ந்து வாழ்!

தேகம்
குலைக்கும்
சந்தேகம்
விடுத்து,

மோகம்
தவிர்க்கும்
நற்செயலில்
ஈடுபட்டு,


வேகம் தரும்
விளைவுகளை
குறைத்து,

நலம் தரும்
இனிமைகளை
சுவைத்து,

ஊக்கம் கொண்டு
உணர்ந்து வாழ்
இனிமையாய்!

Wednesday, 4 December 2013

உலவப் போகிறாய்?

இலைகள் பரவி
முகம் புதைத்த
பனித்துளியாய்,
இரவு முழுவதும்
என் மேல்...
தாகம் கொண்டு,
வெறுப்புடன்
பகலில்
விலகுகிறாயே?


நான் என்ன
உன் கபட
நாடகத்தில்
வஞ்சிக்க
பட்டவனா?

அடியே!
இலையுதிர்
காலத்தில்
இலைகளும்
உதிரும்,
அன்று நீ!
பனித்துளியாய்...
அல்ல! அல்ல!!
என் நெஞ்ச
கொதிப்பில்,
நீராவியாய்தான்
உலவப்போகிறாய்!

Wednesday, 27 November 2013

தவளைக்கு மட்டும்!

பாம்புக்கு
தலையையும்,
மீனுக்கு வாலையும்,
காட்டும்
விலாங்கு மீன்கள்
பெருமை கொள்ள
தேவையில்லை!


இரட்டை வாழ்க்கை
என்பது நிரந்தரமல்ல!
மீனிடமும்
பாம்பிடமும்
தப்பிக்கும்
விலாங்கை அழிக்க,
காத்திருக்கும்
மற்றுமொறு விலங்கு!

மனிதனே!
இரட்டை வாழ்க்கை
உனக்கு
தேவையில்லை
விட்டுவிடு!
அது தவளைக்கு
மட்டும் போதும்!

Tuesday, 26 November 2013

மரணம்!

செடிகளின்
மரணம்
வருங்கால
சந்ததிகளுக்கு
உரமாய்!

உயிர்விடும்
தாவரங்கள்
மனிதனுக்கு
உணவாய்!

சிப்பியின்
மரணம்
முத்துக்களின்
தோன்றல்களாய்!

முகிலின்
மரணம்
மழையின்
வருகையாய்!


இரவின்
மரணம்
பளிச்சிடும்
பகலாய்!

விலங்குகளின்
மரணம்கூட
சக விலங்குகளுக்கு
உணவாய்!

மனிதா!
உன் மரணம்
யாருக்கு
உதவியாய்?
கேள்விக்கு பதில்...
சுழியாய்!

Saturday, 23 November 2013

நான்...ஏன்?

அவள்...
என் உரு தெரியா
உருவத்தில்,
உறவாடியபோது
இன்பம் என்னை
வீழ்த்தியது!

உற்றுப் பார்த்த
அவளின்
கண்களுக்குள்ளே,
எனது உருவம்
சிரித்தபோது
எல்லையில்லா
உவகை கொண்டேன்!

உலகை மறந்து
அவளை நான்
தஞ்சமடைந்த போது
என்னை மறந்தேன்!

தேன் சுவை சொட்டும்
அவளின் இதழ் பருகி
கடித்தெடுத்த
இரத்தத்தை
என் நாவால்
வருடியபோது
ஏக்கம் மறந்தேன்!


அவளின்
பிஞ்சுக்கரங்கள்
என் நெஞ்சத்து
மயிர் நீவி
உழற்றியபோது
உடல் சிலிர்த்தேன்!

கை கால்கள்
கோர்த்து
உடலும் உயிரும்
ஒன்றாய் தழுவி
என்னை உரசியபோது
காலம் மறந்தேன்!

அவளின்
எல்லையில்லா
இனிய சொற்கள்
என்னை
கொள்ளை கொண்டபோது,
நாளுக்கு நாளாய்
பரிதவித்தேன்!

அவள்...
என் உள்ளத்தை
உரசிய
அவச்சொற்களை மட்டும், 
நான்...ஏன்?

Tuesday, 19 November 2013

இனியாவது...

வெட்டிய நகம்
வளரத் துடிக்கும்!
விலகிய நீர்
சேரத் துடிக்கும்!
விண்ணை விட்டு
மழையாய் வந்த
மேகம்...
மீண்டும் ஆவியாய்
மேகமாய்!

பட்டமரம்
தழைப்பதும்,
பாலை நிலத்தில்
பூ பூப்பதும்
இயலாத ஒன்று!


காய்ந்த சேறு
சூடு கண்டால்,
செங்கல்லாய் மாறும்!

ஒட்டியும்,உழன்றும்,
ஒன்றற கலந்தும்,
சிலராய், தனியாய்
கணக்காய்...
ஒதுங்கிவிடும்
உறவுகளை,
என் இதயத்தில்
சுரம் மீட்ட நினைத்த
எனக்கு வெட்கம்!

இனியாவது
இணையுமா?
பிரிந்த உறவு?

Monday, 18 November 2013

அவமானங்கள்!

சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்...
வாழ்க்கை எனும்
வைபோகத்தில் உரசி,
விலை வைத்து
வீண் பதற்றமாய்,
இலகுவாய்...
உயிரின் பிணைப்பை,
காற்றிலிடைப்பட்ட
தூசியாய் அலைக்கழித்து,
எனது பற்றற்ற
மனதுக்குள்,
அன்பெனும் அலையை
எங்ஙனம் பாய்ச்சுவேன்!


நான் என்றென்றும்
உயிராய் வாழ,
இனியுமா?
பத்திரம் தீட்டுவேன்!

வாழ்க்கை என்பது
என்றாவது ஒரு நாள்...
வரையரைக்கு
வந்தே தீரும்!
ஆயினும்...
எல்லை மீறி
வந்து போகும்
தாகங்கள்...?
அறுவறுப்பான
அவமானங்கள்!

Wednesday, 13 November 2013

எழுப்புவாயா?

நீண்ட
இடைவெளிக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான்...
கண் விழித்திருக்கிறேன்!

எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில் நான்...
குதூகலம் பெற்றேன்!

ஒன்றிரண்டு
பெண்களை
கோபக்கனலில்
இழந்தும் விட்டேன்!


அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்
மலை போல்
குவிந்தாலும்,
அதனை துகளாக்கி
காற்றில்...
பறக்கவிட்டேன்!

திமிர் கொண்ட
இரத்தம் இன்னமும்
என்னோடு!
உன் ஏக்கப் பார்வையில்
கண்ணீரை கண்டேன்!

இதோ...
ஓய்ந்துவிட்டேன்!
இனி எனக்குள்
துடிப்பை நீதான்...
நிலாச்சோறாய்
ஊட்ட வேண்டும்!

சிங்கம்...
வண்ணக்கனவுகளுடன்
உலா வர போகிறது,
தட்டி எழுப்புவாயா
மீண்டும் காதலை!

Sunday, 10 November 2013

கதிரவனாய்...

உதிரம் கொதிக்கிறது,
உயிர் சிரிக்கிறது,
உறவு ஓலமிடுகிறது,
பிரிவு தவிக்கிறது!

காவல் உறங்குகிறது,
உணர்வு சல்லாபிக்கிறது,
பசுமை ஒளிர்கிறது,
கருமை அழைக்கிறது!


அவள் ஏங்குகிறாள்,
அவன் இறங்குகிறான்,
அன்பு பாய்கிறது,
அரவணைப்பு தேய்கிறது!

மூடிய முகிலுக்குள்
முகம் நுழைத்த
கதிரவனாய்...
நான்!

இயற்கை சிரிக்கிறது!

மகரந்தம் உண்ண,
மலரையே...
சாட்சி வைத்தேன்!

தெளி தேன்
பக்கத்தில்,
தேனியின்
புலம்பல்
கண்டேன்!


ஓடுகிற
ஓட்டத்தில்,
காற்றடித்து
ஓய்ந்த நேரம்!

ஊண் உறங்கியது,
உயிர் தவிக்கிறது,
இயற்கை சிரிக்கிறது!

Friday, 8 November 2013

மூடு பனி...

சிறு மணல்
வீடு கட்டி,
அலை வந்து
அடித்து போகும்
நிலையில்
ஏங்கி நிற்கும்
மகிழ்ச்சி!


முத்தெடுக்க
கடலில் மூழ்கி,
சிப்பி கிடைத்தாலும்
முத்து இருக்குமா?
என்ற தவிப்பு!


காகிதத்தில்
செய்த கப்பல்
என்று தெரிந்தும்,
கரை சேருமா?
என்ற எதிர்பார்ப்பு!


வண்ணமிகு
வானவில்
வானத்தில்
நிரந்தரமாய்
நிலைக்குமா?
என்ற பரிதவிப்பு!

இவையாவும்
கோடையில்
தோன்றும்
மூடுபனிகள்!



Thursday, 7 November 2013

கருப்பு வெள்ளை!

மனித நேயத்தின்
உன்னத மாற்றங்கள்!
கனவுகள் கூட
கருப்பு வெள்ளை!


எண்ணச்சிதறலில்
வண்ணச் சிறகுகள்!
வரவுகள் இல்லா
வாழ்க்கை செலவுகள்!
பறக்க முயன்றும்
படுதோல்விகள்!


தளிர்விடும் காலம்
இயற்கையின்
கோணல்...
உலகம் தெரியாமல்
வாழ்ந்த நான்,
முதல் முதலாய்
இவ்வுலகத்தை
உற்று நோக்குகிறேன்!


என் கண்களுக்கு
இனியாவது
புத்தொளி
தெரியட்டும்!

Wednesday, 6 November 2013

தூரத்து பச்சை!

கண் சிமிட்டி
மின் மினுக்கும்
நட்சத்திரங்களின்
அழகை...
நிலவிடம்
வினவினேன்!
அது எள்ளி
நகைத்தது!

ஆடும் மயிலின்
அழகை...
வான் கோழியிடம்
மெச்சினேன்!
அது அலுத்து
கொண்டது!


பசுமையின்
இனிமையை...
மலையிடம்
கூறினேன்!
மலை சிரித்து
கொண்டது!


மலருக்கும்
வண்டுக்கும் உள்ள
உறவை...
தேனியிடம்
புகழ்ந்தேன்!
தேனி அலட்சியம்
செய்தது!

அருகருகே
பச்சையும்
கசக்கும்!

Friday, 1 November 2013

இருண்டபின் ஒளி!

அவன்
சுவைத்து
முடித்து,
வீசி எறிந்த
மா... விதை
மீண்டும்
தளிராய்!


செத்து மடிந்த
மானின் தோல்,
அழகிய... தோல்
பொருள்களாய்!


சிதைந்து
புதைந்த காடுகள்,
நிலக்கரிகளாய்!


சிப்பியின்
வயிற்றில் சிக்கிய
சிறு மணல்கூட
முத்துக்களாய்!













காதல்...
இருண்ட பின்னும்
ஒளிரும்!

Thursday, 31 October 2013

புதுவரவு!

குப்பை
மேட்டுக்குள்
குறி தவறிய
குண்டுமணி!

சிந்தனை
கோபுரத்தின்
வழிதவறிய
கலசம்!

மெருகு
சேர்த்த
பின்னும்
கசங்கிய
கருக்கள்!

அழுகிய
பின்னும்
அழகு தரும்
அவசரப் பூக்கள்!










சோகத்திலும்
செவிக்கு கிடைத்த
இனிய பாட்டு!

நாகரிகம்
வளர்ந்த
பின்னும்
அழியாத
மண் வாசனை!

எண்ணற்ற
சறுக்கல்களில்
உயர்ந்த வாழ்வு!

வாழ்க்கை
என்னும்
புத்தகத்தில்
இடம் பெறாத
அவளின்
புது வரவு!

Tuesday, 29 October 2013

தீண்டல்கள்...

சுகம் கண்ட
பேச்சில்
காதல் பூக்கள்!

முகம் கண்ட
அழகு
தூவானம்!

அகம் கண்ட
நெஞ்சத்தில்
அடிச்சுவடு!

யோகம் கண்ட
காலத்தின்
பரிசுகள்!


போகம் கண்ட
மனதுக்குள்
தேன் கூடு!

சோகம் கண்ட
வாழ்க்கையில்
சிலிர்ப்பு!

வேகம் கண்ட
மோகத்தில்
தவிப்பு!

மோகம் கண்ட
முழுமூச்சில்
சிறிய தடை!

தாகம் கண்ட
பின்னும்
தனிவழி!

இராகம் கண்ட
பின்னே
புதுப்பாட்டு!

அவளின்
சின்ன சின்ன
தீண்டைகள்!

Monday, 28 October 2013

தடுமாற்றம்...

மனக் கணக்கு
மாறும்போது,
மனிதக் கணக்கும்
மாறுகிறது!

உயர்வுகள்
மேலோங்கும்
போது...
தாழ்வுகள் கூட
சிறப்பாய் மாறும்!


சாக்கடை
நீராவியாக
சென்றாலும்,
தூய்மையான
மழையாய் தானே
பொழிகிறது!
சில நேரங்களில்...
சில தடுமாற்றம்!

Saturday, 26 October 2013

அழுத்தமாய்...

அவளின்
பாதச் சுவடுகளைகூட
காத்திருந்து காவல்
செய்த காலம்!

மழையில்
கரைந்திடுமோ...
என்ற அச்சத்தால்
பரிதவித்தேன்!


அவள்
என் மேல்
கோபம் கொண்டு,
அழுத்தமாய்...
பதித்த காதலின்
கால்சுவடுகள்!
கடைசிவரை
அழியாது!