Wednesday, 18 December 2013

கவி... காதல்!

கண்ணே!
உன் விழி மேல்
தெரிகின்ற
குருதிச் சுவடுகள்
எல்லாம்...
நான் உனை
நினைத்து
இனிமையாய்
வடித்த கவிதை
வரிகள்!


உன் இமைகள்
மூடுகிற
போதெல்லாம்...
நல்ல கனவுகள்
படைக்கும்!

உன் நினைவுகளை
காந்தமயமாக்கி,
காதல் மின்சாராம்
தரும் என் கவிவரிகள்!

ஓர் எச்சரிக்கை!
பெண்ணே...
மறந்தும் கண்ணீர்
சிந்தாதே!
உண்மை அன்பு
அழிந்து போகும்!
என் கவிதை வரிகள்
அழிந்து போகும்!

No comments:

Post a Comment