Friday, 6 December 2013

என் மனைவியை மட்டும்...

அன்று
அவளுடன்
நான் உறவு
செய்தபோது...
எனக்குள்ளே
ஒருத்தியாய்...
என் நினைவுகளின்
நிழலாய்!

வழிந்த
கண்ணீரைகூட
துச்சமாய்
வீசிய அவள்?

நான் சோகம்
கொண்ட
போதெல்லாம்
சுகம் தந்த
அவள்?


என் இடர்பாட்டுக்குள்
தானாகவே
சிக்கி தவித்த அவள்?

இன்று
என் மனதுக்குள்
அடைபட்ட
புற்றீசலாய்,
கொத்தி குதறும்
கழுகாய்...

என்னை வாட்டி
வதைக்கும் இவள்...
என் மனைவியை
மட்டும்
சிந்திக்கிறாள்!

No comments:

Post a Comment