Thursday, 5 December 2013

தவிர்க்கிறேன்!

ஆர்ப்பாட்டம்
செய்து,
ஆரவாரம்
செய்த
என் உடலில்
இனியும்
உரமில்லை!

மனத்தளவில்
துணிவு கொள்ள,
சோகத்தையே
சுகமாய் சுமந்த
என் இதயம்
மறுக்கிறது!


சிறகொடிந்த
பின்னே...
இறுமாப்பு
எதற்கு?

இள நரைக்கு
பின்னே...
மோகப்புயல்
எதற்கு?
தவிர்க்கிறேன்!

No comments:

Post a Comment