Thursday, 5 December 2013

கேள்விகள்!

கால அடிச்சுவட்டில்
இறுதியில் இனிமை
கண்டவன் நான்!

கறை படிந்த
வாழ்வில்,
வெண்மையின்
திரட்சி கிடைக்குமா?
என்ற ஏக்கம்!


சோகப் புயலில்
சிக்கிய சிறுமணல்
நான்!

சொந்தம் கொண்டாட
ஆயிரம் பேர்!
சுகம் கொண்டாட
யாரோ...?

யார் பாடும்
தாலாட்டில்
எனக்கு தூக்கம்?
விடையில்லை!


No comments:

Post a Comment