என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Saturday, 17 May 2014
மோகத்துடன்!
தீஞ்சுடர்
மேனியின்,
தெவிட்டாத
அழகு!
எனது தேகம்...
மோகத்துடன்
பற்றி எரியுதே,
உனது இனித்திடும்
சின்ன முத்தத்தில்!
கண்ணே!
தாகம்...
குறைந்தவுடன்,
காதலின் வேகம்
குறையுமோ?
காதல் தோல்வி!
காதல்
கடலில்...
நீந்த
தெரிந்தும்,
கருகிய
மீன்கள்!
அவளா...?
அவள்...
பாலைவனத்தின்
பகல் கனவு!
அவள்...
வறண்டுபோன
முழு நிலவு!
அவள்...
தித்திக்காத
தேன்!
அவள்...
புளித்துபோன
பால்!
அவள்...
எழுதாத
சித்திரம்!
அவள்...
இரவு நேர
சூரிய வணக்கம்!
அவளா...?
எனக்கு கிடைக்காத
பாழடைந்த
மண்டபத்தின்
பளிங்கு சிலை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)