Monday, 28 April 2014
காதலர்களே!
கலங்காதீர்கள்...
என் எழுதுகோலின் முனை,
உங்களின் இதயங்களை
அன்பாய் வருடும்!
என் எழுதுகோலின் முனை,
உங்களின் இதயங்களை
அன்பாய் வருடும்!
ஏங்காதீர்கள்...
என் அழகுமிகு
தமிழ் சொற்கள்,
உங்களுக்கு ஆறுதல்
சொல்லும்
திகைக்காதீர்கள்...
திசையற்ற காதலுக்கு,
எனது கடுஞ்சொற்கள்
வசைபாடும்!
கண்ணீர் சிந்தாதீர்கள்...
எனது கவி வரிகள்
கண்ணீர் துளிகளை
வெப்பத்தால் போக்கும்!
துன்பப்படாதீர்கள்...
எனது காதல் தோல்வியின்
சுட்ட வடுக்கள்,
உங்களை நட்பால்
மகிழ்விக்கும்!
என் அழகுமிகு
தமிழ் சொற்கள்,
உங்களுக்கு ஆறுதல்
சொல்லும்
திகைக்காதீர்கள்...
திசையற்ற காதலுக்கு,
எனது கடுஞ்சொற்கள்
வசைபாடும்!
கண்ணீர் சிந்தாதீர்கள்...
எனது கவி வரிகள்
கண்ணீர் துளிகளை
வெப்பத்தால் போக்கும்!
துன்பப்படாதீர்கள்...
எனது காதல் தோல்வியின்
சுட்ட வடுக்கள்,
உங்களை நட்பால்
மகிழ்விக்கும்!
நான்... நீ!
நான் மகிழ்ந்திருக்கும்போது,
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?
பச்சை விளக்கு!
முழு நிலவின்
உல்லாசம்,
மங்கிய நிலவொளி,
அவளின் கண்கள்...
கண்ணீரை விடுவிக்க
காத்திருந்த நேரம்!
உல்லாசம்,
மங்கிய நிலவொளி,
அவளின் கண்கள்...
கண்ணீரை விடுவிக்க
காத்திருந்த நேரம்!
Thursday, 3 April 2014
நட்பு...
நேற்று பெய்த மழையில்...
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!
கானல் வரிகளுக்குள்
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!
உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!
இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!
இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!
வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!
உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!
இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!
இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!
வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!
Subscribe to:
Posts (Atom)












