Tuesday, 24 June 2014

பிறகு...?

பிறகு...?
========
நாணம்
வந்ததால்...
நாணல்
காட்டுக்குள்,
ஒளிந்து
கொண்டாள்!
விடலை பருவ
விரக தாகத்துடன்?

நாணம்
வந்ததால்...
நாணல்
காட்டுக்குள்,
ஒளிந்து
கொண்டாள்!
விடலை பருவ
விரக தாகத்துடன்?

இடித்ததால்...

இடி இடிக்கும்
சத்தம் கேட்டு,
என்னை இருக்கி
கட்டிக் கொண்டாள்...
அந்த மின்னல்!


இடித்ததால்...
=============
இடி இடிக்கும்
சத்தம் கேட்டு,
என்னை இருக்கி
கட்டிக் கொண்டாள்...
அந்த மின்னல்!

தொடர்ந்து
இடித்ததால்...
மழையும் நின்றது!
சொட்டு சொட்டாய்,
அவளின் கண்ணீர்
என் நெஞ்சை
நனைத்தது!
உடல் வெப்பம்?







தொடர்ந்து
இடித்ததால்...
மழையும் நின்றது!
சொட்டு சொட்டாய்,
அவளின் கண்ணீர்
என் நெஞ்சை
நனைத்தது!
உடல் வெப்பம்?

துள்ளுவதோ...

துள்ளுவதோ...
இளமை!
துளிர்ப்பதுவோ...
காதல்!
துணிந்ததுவோ...
நெஞ்சம்!


துள்ளுவதோ...
==============
துள்ளுவதோ...
இளமை!
துளிர்ப்பதுவோ...
காதல்!
துணிந்ததுவோ...
நெஞ்சம்!
துவளுவதோ...
தோல்வி!
துடிப்பதுவோ...
முதுமை!
துஞ்சுவதோ
மஞ்சம்!

துவளுவதோ...
தோல்வி!
துடிப்பதுவோ...
முதுமை!
துஞ்சுவதோ
மஞ்சம்!

வலிக்கிறது!

காவியம்
படைத்த...
கவிதை
இல்லை!



வலிக்கிறது!
===========
காவியம்
படைத்த...
கவிதை 
இல்லை!

காதலை
இழந்த...
தோல்வி
கவிதை!
வலிக்கிறது!










காதலை
இழந்த...
தோல்வி
கவிதை!
வலிக்கிறது!

Friday, 6 June 2014

காற்றிடைப்படாமல்!

காற்றிடைப்படாமல்
கட்டியணைத்தேன்
அவளை...?

மூங்கில்....
காற்றில் அசையும்
அந்த சின்ன சத்தம்!


எலும்புகள்...
நொருங்கிவிட்டதால்,
அவள் துவண்டு
போனாள்?

நான் இன்பமாய்...
சோர்ந்து போனேன்!
கண் விழித்தேன்
மீண்டும் இருண்ட
வாழ்வு?
கனவு!!!!!!!!

Wednesday, 4 June 2014

ஆராய்ச்சி!

அடி பெண்ணே!
வாழ்க்கை எனும்
படிப்பிற்கு,
உடல் தானம்
செய்தாய்!


ஆராய்ச்சி!
==========
அடி பெண்ணே!
வாழ்க்கை எனும்
படிப்பிற்கு,
உடல் தானம்
செய்தாய்!

அவன்...
உன் உடலை,
ஆராய்ச்சி
செய்கிறான்!

நான்...
உன் மனதை
காதல் செய்து,
வாழ்கிறேன்!
நடை பிணமாய்!

அவன்...
உன் உடலை,
ஆராய்ச்சி
செய்கிறான்!

நான்...
உன் மனதை
காதல் செய்து,
வாழ்கிறேன்!
நடை பிணமாய்!

Tuesday, 3 June 2014

தீயென்று...


தீயென்று
தெரிந்தும்,
சுட்டுக்கொண்டேன்!

தீயென்று...
-----------------
தீயென்று
தெரிந்தும்,
சுட்டுக்கொண்டேன்!

அணைத்த பின்...
இன்பம்
பொங்குகிறது!
காதல்?

அணைத்த பின்...
இன்பம்
பொங்குகிறது!
காதல்?

உல்லாசம்!

குளிர்!
அவள்...
தோகை விரித்தாள்!
நான்...
வாரி அணைத்தேன்!


உல்லாசம்!
==========
குளிர்!
அவள்...
தோகை  விரித்தாள்!
நான்... 
வாரி அணைத்தேன்!

மழை!
தேகம் நனைந்தோம்,
உல்லாசம்!

வெய்யில்!
மீண்டும் காய்ந்தோம்,
வெப்பம்!

மழை!
தேகம் நனைந்தோம்,
உல்லாசம்!

வெய்யில்!
மீண்டும் காய்ந்தோம்,
வெப்பம்! 

நான் எங்கே?


நான் எங்கே
இருக்கிறேன்?
நிலை தடுமாறிய
பின்னும்...
உன் இதய
மெத்தையில்
மட்டுமே
உறங்குகிறேன்!


நான் எங்கே?
-------------------
நான் எங்கே
இருக்கிறேன்?
நிலை தடுமாறிய
பின்னும்...
உன் இதய
மெத்தையில்
மட்டுமே
உறங்குகிறேன்!

தவிப்புக்கு
பின்னும்
தடம் மாறாமல்
இருக்கிறேன்!
உன் காதல்?

தவிப்புக்கு
பின்னும்
தடம் மாறாமல்
இருக்கிறேன்!
உன் காதல்?

அணைத்தாள்...

அன்புடன்...
கை பிடித்தாள்!
நான் விடுவிக்க
முயன்றேன்!
அவள் கால்களின்
இடையில்
என்னை
சிறை பிடித்தாள்?
அன்பு முத்தமும்
தந்தாள்...
 

அணைத்தாள்...
-----------------------
அன்புடன்...
கை பிடித்தாள்!
நான் விடுவிக்க
முயன்றேன்!
அவள் கால்களின்
இடையில்
என்னை 
சிறை பிடித்தாள்?
அன்பு முத்தமும்
தந்தாள்...
அவள் மார்போடு
என்னை இறுக்கி
அணைத்து...
என் இதழ்கள்
விரித்து கொடுத்த
அந்த!!!!!!!!!!!!!!!!!!
ஒரு வாய் சோறு?
தாய்மை!

அவள் மார்போடு
என்னை இறுக்கி
அணைத்து...
என் இதழ்கள்
விரித்து கொடுத்த
அந்த!!!!!!!!!!!!!!!!!!
ஒரு வாய் சோறு?
தாய்மை!

உடல் நோக....

நிலவில்லா
இருளில்
மூன்று நாட்கள்!
மோகப் புயலின்
கடுங்குளிர்
அபாய நிலையில்!
 

உடல் நோக....
---------------------
நிலவில்லா
இருளில்
மூன்று நாட்கள்!
மோகப் புயலின்
கடுங்குளிர்
அபாய நிலையில்!
அவள் அருகில்
வந்தாள்...
கண்ணசைத்து
எனை அழைத்தாள்,
இலவச முத்தத்தை
இனிப்பாய் தந்தாள்!
நான் அவளின்
உடல் நோக
கட்டித் தழுவி,
கண் விழித்தேன்?
பொழுது விடிந்தது
கனவும் கலைந்தது!

அவள் அருகில்
வந்தாள்...
கண்ணசைத்து
எனை அழைத்தாள்,
இலவச முத்தத்தை
இனிப்பாய் தந்தாள்!
 

நான் அவளின்
உடல் நோக
கட்டித் தழுவி,
கண் விழித்தேன்?
பொழுது விடிந்தது
கனவும் கலைந்தது!

எதிரிகள் இல்லை!

கவி முகிலன்
நிறுத்தத்தில்,
என் பயணம்
தொடங்குகிறது,
எத்தனை எத்தனை
அன்பு உள்ளங்கள்,
எண்ணற்ற உவகை
தந்திட்ட ,அன்பான...
சிரிப்புகள் ஆயிரம்,
வெறுப்பையோ,
எதிர்ப்பையோ
என்னால்...
காண முடியவில்லை!
 

எதிரிகள் இல்லை!
---------------------------
கவி முகிலன்
நிறுத்தத்தில்,
என் பயணம்
தொடங்குகிறது,
எத்தனை எத்தனை
அன்பு உள்ளங்கள்,
எண்ணற்ற உவகை
தந்திட்ட ,அன்பான...
சிரிப்புகள் ஆயிரம், 
வெறுப்பையோ,
எதிர்ப்பையோ
என்னால்...
காண முடியவில்லை!
எனக்கு எதிர்ப்பே
இல்லையோ?
எதிரிகளின் 
தொல்லையும்
இல்லையோ?
அங்கும் இங்கும்
தேடுகிறேன்!
இயற்கையை
ரசிக்கிறேன்,
மகிழ்ச்சியை
விலையாய்
பெறுகிறேன்!
எனது இண்ப பயணம்?
ஓ எனது நிறுத்தமும்
வந்துவிட்டது!
விடை பெறுகிறேன்!

எனக்கு எதிர்ப்பே
இல்லையோ?
எதிரிகளின்
தொல்லையும்
இல்லையோ?
அங்கும் இங்கும்
தேடுகிறேன்!
இயற்கையை
ரசிக்கிறேன்,
மகிழ்ச்சியை
விலையாய்
பெறுகிறேன்!
எனது இன்ப பயணம்?
ஓ எனது நிறுத்தமும்
வந்துவிட்டது!
விடை பெறுகிறேன்!

வெண் தாடி வேந்தன்!

வெண் தாடி
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை
பாதுகாக்கிறான்!


கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!

வெண் தாடி
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை 
பாதுகாக்கிறான்!

கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!

இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!
கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?

இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!

கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?

இருக்கிறேன்...இல்லை!

அழகு பெண்ணின்
அசைவுகள்...
எல்லாம் என்னை
ஆட்டி வைத்தன!


அவள் பேசும்
காதல் மொழிகள்
என்னை வாட்டி
வதைத்தன!

இருக்கிறேன்...இல்லை!
-----------------------------------
அழகு பெண்ணின்
அசைவுகள்...
எல்லாம் என்னை
ஆட்டி வைத்தன!

அவள் பேசும்
காதல் மொழிகள்
என்னை வாட்டி
வதைத்தன!

அவள் எனக்கு
தந்த இன்பமெல்லாம்,
என்னை போட்டியில்
புதைத்தன!

அவள் என்னை விட்டு
மறைந்தது மட்டும்,
சோகம் கூட்டி...
தாகம் தந்தன!

நான் இருக்கிறேன்!
ஆனால் இல்லை?

அவள் எனக்கு
தந்த இன்பமெல்லாம்,
என்னை போட்டியில்
புதைத்தன!

அவள் என்னை விட்டு
மறைந்தது மட்டும்,
சோகம் கூட்டி...
தாகம் தந்தன!

நான் இருக்கிறேன்!
ஆனால் இல்லை?

கருவை சுமந்த கருவறை!

காதலின் மோதலில்
சுமந்த பாரம்!
மோதலின் சோகம்
தந்த பாரம்!
 

குடும்பம் அவளுக்கு
தந்த பாரம்!
பந்தத்தில் அவனை
சுமந்த பாரம்!
சொந்தங்களின் சுமை
தந்த பாரம்!
 

கருவை சுமந்த கருவறை!
--------------------------------------
காதலின் மோதலில்
சுமந்த பாரம்!
மோதலின் சோகம்
தந்த பாரம்!
குடும்பம் அவளுக்கு
தந்த பாரம்!
பந்தத்தில் அவனை
சுமந்த பாரம்!
சொந்தங்களின் சுமை
தந்த பாரம்!
இதயத்தின் வலி 
தந்த பாரம்!
இவைகள் இல்லை
அவள் கருவில்
சுமந்த பாரத்தில்?
அழகு குழந்தையை
பாலூட்டிய இன்பம்,
நடை பயில வைத்து
பெற்ற உவகை,
தமிழூட்டி பெற்ற
தாய் மொழி சிறப்பு!
கருவில் உலகை
சுமந்த அன்னையாய்...
வாழ்க எந்நாளும், 
வையகத்தில்!

இதயத்தின் வலி
தந்த பாரம்!
இவைகள் இல்லை
அவள் கருவில்
சுமந்த பாரத்தில்?
 

அழகு குழந்தையை
பாலூட்டிய இன்பம்,
நடை பயில வைத்து
பெற்ற உவகை,
தமிழூட்டி பெற்ற
தாய் மொழி சிறப்பு!
 

கருவில் உலகை
சுமந்த அன்னையாய்...
வாழ்க எந்நாளும்,
வையகத்தில்!

அன்பே.....?

அன்பே!
நான் வாழும்
போதுதான்...
ஒன்றாக
வாழவில்லை!


அன்பே.....?
-----------------
அன்பே!
நான் வாழும்
போதுதான்...
ஒன்றாக 
வாழவில்லை!

நான் இறக்கும்
போதாவது...?
அவசர முடிவு
எடுத்து விடாதே!

நீயாவது...
கணவன்,
பிள்ளைகளுக்காக
வாழ்!

நான் மட்டும்
காதலுடன்!

நான் இறக்கும்
போதாவது...?
அவசர முடிவு
எடுத்து விடாதே!

நீயாவது...
கணவன்,
பிள்ளைகளுக்காக
வாழ்!

நான் மட்டும்
காதலுடன்!

சுவை!

பூவாய் இருந்தாள்
காதல் கொண்டேன்!

காயாய் இருந்தாள்
காத்திருந்தேன்!
 

சுவை!
---------
பூவாய் இருந்தாள்
காதல் கொண்டேன்!
காயாய் இருந்தாள்
காத்திருந்தேன்!
கனியானாள்....
பூரித்திருந்தேன்!
யாருக்கு 
சுவை தந்தாள்?
ஏமாந்து இருக்கிறேன்!

கனியானாள்....
பூரித்திருந்தேன்!
 

யாருக்கு
சுவை தந்தாள்?
 

ஏமாந்து இருக்கிறேன்!

தாய்ப் பால்!

தோல்வியில்
துவண்ட எனது
கவிதைகளை...
அவளது மடியில்
வைத்து,
தாலாட்டினாள்!


காதல் பசியில்
துடித்த எனக்கு,
தமிழென்னும்
தாய்ப் பால்
ஊட்டினாள்!

தாய்ப் பால்!
===========
தோல்வியில்
துவண்ட எனது
கவிதைகளை...
அவளது மடியில்
வைத்து, 
தாலாட்டினாள்!

காதல் பசியில்
துடித்த எனக்கு,
தமிழென்னும்
தாய்ப் பால்
ஊட்டினாள்!

மோகத்தில்
துடித்த எனக்கு,
தாகம் போக்க
கனவுகளை
அள்ளி தந்தாள்!

சோகத்தில்
தவித்த எனக்கு,
சுகம் தர...
எப்போது 
வருவாள்?
காத்திருக்கிறேன்!

மோகத்தில்
துடித்த எனக்கு,
தாகம் போக்க
கனவுகளை
அள்ளி தந்தாள்!

சோகத்தில்
தவித்த எனக்கு,
சுகம் தர...
எப்போது
வருவாள்?
காத்திருக்கிறேன்!

வீரத்தை ஒளித்து...

போர் செய்யும்
முறையை...
உரையாய்
தந்துவிட்டு
ஒளிந்து...
கொல்லவில்லை,
தலைவன்
பிரபாகரன்!


வீரத்தை ஒளித்து...
----------------------------
போர் செய்யும்
முறையை...
உரையாய்
தந்துவிட்டு
போகவில்லை,
தலைவன்
பிரபாகரன்!

தனது உயிரை
போர் வாளின்
உறைக்குள்...
ஒளித்து வைத்து,
போரின் வீரத்தை
தமிழனுக்கு
தந்து விட்டு
போயிருக்கிறான்!

தமிழனாய்?????
ஒன்று படுவோம்,
வெற்றி பரிசாய்
ஈழத்தை!!!!!!!!!
பெறுவோம்!

தனது ....
போர் குணத்தை
போர் வாளின்
உறைக்குள்...
ஒளித்து வைத்து,
போரின் வீரத்தை
தமிழனுக்கு
தந்து விட்டு
காத்திருக்கிறான்!

பாயும் புலியாய்...
படை நடத்த
வருவான்
விரைவாய்!

தமிழனாய்?????
ஒன்று படுவோம்,
வெற்றி பரிசாய்
ஈழத்தை!!!!!!!!!
பெறுவோம்!

இல்லை...

என் இதயம்
கதவை
மூடிவிட்டது!
இனி காதல்
இல்லை?


இல்லை...
---------------
என் இதயம்
கதவை 
மூடிவிட்டது!
இனி காதல்
இல்லை?

கவிதைகளும்
கனவுகளும் 
மட்டுமே...
என் இதயத்தில்
சுத்திகரிக்கப்படும்!

கவிதைகளும்
கனவுகளும்
மட்டுமே...
என் இதயத்தில்
சுத்திகரிக்கப்படும்!

தனிமை!

அள்ள, அள்ள
குறையாத காதல்!

நீ கிள்ள, கிள்ள
துடித்திடும் இன்பம்!
 

தனிமை!
-------------
அள்ள, அள்ள
குறையாத காதல்!
நீ கிள்ள, கிள்ள
துடித்திடும் இன்பம்!
நீ துள்ள, துள்ள
வெடித்திடும் மோகம்!
நீ தள்ள, தள்ள
தவித்திடும் சோகம்?

நீ துள்ள, துள்ள
வெடித்திடும் மோகம்!
 

நீ தள்ள, தள்ள
தவித்திடும் சோகம்?

அமைதி!

ஓசையில்லா
காதல்....
ஊமை காதல்!
 

அமைதி!
-------------
ஓசையில்லா
காதல்....
ஊமை காதல்!
இல்லை இல்லை,
அவள் பிரிவுன்
அமைதி?

இல்லை இல்லை,
அவள் பிரிவின்
அமைதி?

கரு???


வகை
தெரியாமல்,
வார்த்தைகளாய்
சிக்கிக்கொண்ட நீ...
 

கரு???
----------
வகை 
தெரியாமல்,
வார்த்தைகளாய்
சிக்கிக்கொண்ட நீ...
இப்போது
கருவுற்றிருக்கிறாய்
அழகிய கவிதையாய்!

இப்போது
கருவுற்றிருக்கிறாய்
அழகிய கவிதையாய்!

எழடா போருக்கு!

கண்ணீரும்
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!


தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!

எழடா போருக்கு!
================
கண்ணீரும்
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!

தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!

நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற 
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!

பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!

இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?
தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!
நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!

பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!

இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?

தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!

வெள்ளை உலகம்!

அவளின்...
கனவுகளை விட்டு
வெளியே வந்தேன்!
 

வெள்ளை உலகம்!
=================
அவளின்...
கனவுகளை விட்டு
வெளியே வந்தேன்!
இயற்கையின்...
அழகு கசந்தது!

இனிமை என்ற
தமிழ் சொல்...
அகராதியை விட்டு 
அகன்றது!

நிறங்கள் இல்லா
வெள்ளை உலகில்
தவிக்கிறேன்!

இயற்கையின்...
அழகு கசந்தது!

இனிமை என்ற
தமிழ் சொல்...
அகராதியை விட்டு
அகன்றது!

நிறங்கள் இல்லா
வெள்ளை உலகில்
தவிக்கிறேன்!

வலைக்குள்!

அவள் விரித்த
வலையில்...
சிக்கிக்கொண்ட
சிறு மீன் நான்!


வலைக்குள்!
...........................
அவள் விரித்த
வலையில்...
சிக்கிக்கொண்ட
சிறு மீன் நான்!

இன்னமும்
துடிக்க துடிக்க
உயிருடன்
இருக்கிறேன்...
விரைவில்
சாவதற்கு!

இன்னமும்
துடிக்க துடிக்க
உயிருடன்
இருக்கிறேன்...
விரைவில்
சாவதற்கு!

சொல் நிலவே!

என் முகத்தில்
கரியை பூசிய
அவள்!
 


உன் முகத்தில்
கரியை பூசிய
அவன் யார்?

தேன்......

தேன் உண்ண
வந்த வண்டு
திகைத்து நின்றது!
 

அவள் இதழ்.....
தந்த தேனை,
நான்
சுவைத்துவிட்டதால்?

தேன்......
========
தேன் உண்ண
வந்த வண்டு
திகைத்து நின்றது!
அவள் இதழ்..... 
தந்த தேனை,
நான் 
சுவைத்துவிட்டதால்?

சோர்வு!

நேற்று இரவு
முழுவதும்...
கனவில்
அவளின்
சல்லாபம்!


இன்று காலை
முதலே...
மனதுக்குள்
சோர்வு!
சோர்வு!
========
நேற்று இரவு
முழுவதும்...
கனவில்
அவளின்
சல்லாபம்!

இன்று காலை
முதலே...
மனதுக்குள்
சோர்வு!

பதில்!


காலமும்,
பதில்
சொல்லவில்லை
அவளின்...
பிரிவிற்கு!

வானம்...

வானம்
வெகு தூரம்!

நிலவு மட்டும்
என்னுடன்
குளிர்ச்சியாய்!

தீ!!!!!!!!!!!!!!!!!

நெற்றிக்கண்
இல்லை
அவளுக்கு?

அவள் பார்த்தாலே
பற்றி எரிகிறது
என் தேகம்!
மோகத் தீ!

Monday, 2 June 2014

தூரத்து பச்சை!

தூரத்து பச்சை!
==============
அவள்...
தூரத்து பச்சை!

எனக்கு அவளை
நெருங்கத்தான்
இச்சை!

அவள்...
கேட்கமாட்டாள்,
என் பேச்சை!

என் தந்தையின் நினைவு நாள்! (10.04.14)

எனது உயிரே!
உயிரின் மருந்தே!
உயர்வின் சிறப்பே!
ஓய்வறியா உழைப்பே!
அன்பின் உச்சமே!
அரவணைப்பின்
திறந்த கதவே!
பகுத்தறிவின் சுடரே!

தியாகத்தின்
நன்கொடையே!
என்னை உருவாக்கி
வழி நடத்திய
வள்ளலே!
எனக்குள் அன்பை
திணித்து...
இவ்வுலகமெல்லாம்
அன்பை விதைத்த,
அன்பே! என் தந்தையே!
நீவிர் மறைந்த நாள்...
நான் உறைந்த நாள்!
இப்போதும்...
உமது குணத்தில்,
எனது உருவத்தில்
நடை பயில்கிறேன்,
நீங்கா நினைவுகளோடு!

கோமாளி!

அவள்...
கண் மூடினாள்!
தூக்கி எறியப்பட்டேன்,
கண்ணீர் துளிகளாய்!

நான்...
கண் மூடினேன்!
அவளின்
கனவுகளோடு,
உல்லாசம்
பெற்றேன்!
என்றும்
அவளின்...
நினைவுகளோடு,
ஏமாளி காதலன்...
கோமாளியாய்!

யார் தருவார்? பட்டம்!

இதயத்தில்
வலித்ததை
வரியாய்
தருகிறேன்!

நான் தவித்ததை
தாகம் போக்க
தருகிறேன்!
நான் நினைத்ததை
கவிதையாய்
உயிர் கொடுக்கிறேன்!
எனது தோல்விக்கு
மருந்து தேடுகிறேன்!
எனது வெற்றியை
பகிர்ந்து கொள்கிறேன்!
மகிழ்ச்சியில்
சொந்தம்...
தேடுகிறேன்!
சோகத்தில் கூட
சுகம் தேடுகிறேன்!
இதற்கெல்லாமா
கவிஞர் பட்டம்
கிடைக்கும்?

அவள்..வாழ்க!

காவியம் படைக்க
அவளின் உள்ளம்
கேட்டேன்....
உதறினாள்!

காப்பியம் படைக்க
துணை ஒன்று
கேட்டேன்!
குமுறினாள்!
காதலை படைக்க
கண்களை கேட்டேன்!
கதறினாள்!
ஓவியம் படைக்க
உருவம் கேட்டேன்!
ஓடினாள்!
கவிதை படைக்க
கரு ஒன்று...
கேட்டேன்!
கருவுற்றிருந்தாள்
அடுத்தவனுக்கு!
அவள் வாழ்க!

காதல் கவிதை!

என் இதயம்
ஒவ்வொரு
கவிஞனுக்காகவும்,
ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறது!

நாள் முழுவதும்
என் சுவாசம்,
கவிஞர்களுக்காக
மட்டும்!

தருவாளா?

சிட்டுக்குருவியின்
செல்ல முத்தம்...
சீற்றமாய்...
அவளின் பார்வை
மட்டும்?

அவள்...
அந்தி நேரத்தில்
அவசரமாய்
தோன்றிய....
நட்சத்திரம்!
எனக்கு
தெரியாமலே
எனக்குள் காதல்...
மறைந்தும்
மறையாமலும்?
அவள் மீண்டும்
காட்சி தருவாளா?

முத்தாய்....

சிப்பிக்குள்
சிக்கிய...
சிறு மணலாய்
தவிக்கிறேன்!

நீயோ என்னை
அழிக்க வந்தாலும்,
முத்தாய் மாறி
அழகு பெற்றாயே?
இப்போதும்...
முத்துக்கருகில்
மணல் காதலன்!

தமிழ் கவிதை!

காதலியின் முகம்,
கண் கவர் கழுத்து,
மிடுக்கான
கொங்கைகள்,
சங்கு நுனியின்
இடுப்பு...
தட்டி கொடுக்க
தூண்டும் பின்னசைவு,
பார்க்க முடிந்த
பின் கால் அழகு,
சுவை தரும்
அழகுமிகு பாதங்கள்,
தமிழ் கவிதையின்
ஒட்டுமொத்த வடிவம்!

நான் எழுதுவது...?

நான் எழுதுவது
கவிதை அல்ல!
நான் எழுதுவது
கதையும அல்ல!
நான் எழுதுவது
காப்பியமும் அல்ல!
நான் எழுதுவது
காவியமும் அல்ல!
நான் எழுதுவது
வரலாறும் அல்ல!
நான் எழுதுவது
வாழ்க்கையும் அல்ல!
நான் எழுதுவது
கற்பனையும் அல்ல!

நான் எழுதுவது...
எனது வேதனை!
நான் எழுதுவது
எனது தாகம்!
நான் எழுதுவது
எனது மோகம்!
நான் எழுதுவது
எனது சோகம்!
நான் எழுதுவது
எனது தோல்வி!
நான் எழுதுவதுதான்...
எனது வெற்றி!

புதிய காதல்!

துவண்ட என்னை
அவளின்... தோழி
பற்றிக்கொண்டாள்!
வாடிய முகத்தை
மடி சாய்த்து...
தலைமுடியில்
விரல் நுழைத்து,
வருடியும் தந்தாள்!
சோகத்துக்கு
மருந்தாய்...
அரவணைப்பும்
தந்தாள்!
என் காதல்
தோல்விக்கு...
ஆறுதலும்
கூறினாள்!
என்... தாகம்
போக்க...
சின்ன முத்தமும்
தந்தாள்!
என் மோக
வேட்கைக்கு
தன்னையும்
தந்தாள்!
புண்ணுக்கு
மருந்தாய்...
புதிய காதல்
பிறந்தது!

புதுமைப் பெண்கள்!

விழியசைத்து,
மதிமயக்கி,
காதல் ரசத்தை
இனிதாய் ஊட்டி...
காலத்தையும்
நேரத்தையும்
வீண் பொழுதாய்
போக்கி...

அவளின் மோக
முயற்சியில்...
அவனின்
காம தாகத்தை
முறுக்கேற்றி
தவிக்கவிட்டு,
கை அசைத்து
காட்டுவாள்...
அடுத்தவனின்
தோள்மீது
சாய்ந்துகொண்டு!
அவனின்
சுகமான தோல்வி
அழியாக் காதலாய்...
மாறும் இவ்வுலகில்!

உயிர்...

உயிர் விட
போகிறேன் என்பது,
எனக்கு கவலையில்லை!
உயிர் விட்ட பின்னும்
அவளை எப்படி...
மறக்காமல்
இருப்பது?