பச்சை பாவாடை,
சட்டைக்குள்...
பூத்திட்ட பருவம்!
எண்ணக் குவியலில்...
எக்கு தப்பாய் நீ!
மணிகள் அணிந்த ...
கழுத்துக்கும் தான்,
உன் மாலையின்...
பாரம் தாங்க ஏக்கம்!
நான் சேலை உடுத்தி
சிங்கார ரவிக்கை...
சில்லென்று போட்டு,
மாலை வெய்யிலில்
மஞ்சளாய்
போவதெப்போ?
கூனி குருகி
அமர்கிறேன்,
கூட வர
மாட்டாயோ?
கூட்டி சென்று
என்னையும்
கூடு கட்டி
வைப்பாயோ?