Thursday, 25 December 2014

கதவை திறக்க... (ஓவியம்: அசோக்)

சரிந்த மார்பின்...
சரித்திரம் சொல்லும்,
என் நெஞ்சத்துள்
உறைந்திருக்கும்
உள்ளுறை சோகத்தை!


ஊமைவிழிகள் அல்ல
உன் வரவு பார்த்து,
பார்வை மறைந்த
குருட்டு விழிகள்!

கதவை திறக்க... (ஓவியம்: அசோக்)
===============
சரிந்த மார்பின்...
சரித்திரம் சொல்லும், 
என் நெஞ்சத்துள் 
உறைந்திருக்கும் 
உள்ளுறை சோகத்தை! 

ஊமைவிழிகள் அல்ல 
உன் வரவு பார்த்து, 
பார்வை மறைந்த 
குருட்டு விழிகள்! 

வச்ச குறி.. தவறாத 
குடும்ப பெண் நான்! 
அதனால்... 
காமத்தை விழுங்கிய, 
கரை சேரா... 
முதிர் கன்னி!

என் வெப்பம் தணிக்க, 
இளைஞனாய்... 
மட்டும் வராதே? 

அடைத்து வைத்த, 
கதவை திறக்க...
அசத்தும் வீரனாய் 
வா என்னவனே!


வச்ச குறி.. தவறாத
குடும்ப பெண் நான்!
அதனால்...
காமத்தை விழுங்கிய,
கரை சேரா...
முதிர் கன்னி!

என் வெப்பம் தணிக்க,
இளைஞனாய்...
மட்டும் வராதே?
அடைத்து வைத்த,
கதவை திறக்க...
அசத்தும் வீரனாய்
வா என்னவனே!

No comments:

Post a Comment