Sunday, 31 March 2013

புது முயற்சி!

ஓ...
உன் கரிய விழியில்
காதல் பார்வையா?
இருபதாம்
நூற்றாண்டிலும்,
இனிய பார்வையா?

முடியாது போ!
நான்...
ஒரு பட்ட மரம்
இனியும் என்னை
ஏமாற்ற முடியாது!

உடனே செல்!
ஒரு புது மனிதனை,
நல்லவனை
ஏமாற்று!

மீண்டும் காதலின்
அத்தியாயங்கள்
உரு பெறட்டும்!

தோல்வியில்
துவண்ட நான்
என்றென்றும்
வாழ்த்துகிறேன்!

ஆலோசனை!

பிறருக்கு
சொல்லும்
போது
சுவைக்கும்!

பிறர்...
நமக்கு
சொன்னால்
துவர்க்கும்!

கடைப்பிடிக்க
தொடங்கினால்
கசக்கும்!

கடைப்பிடித்து
வெற்றி
கண்டால்
இனிக்கும்!

Saturday, 30 March 2013

மனிதனே! மனிதனாய் ...

மனத்துடன்
போராட
துணிவில்லா
மனிதன்,
கிணற்றுக்குள்ளே
நீந்தி தவிக்கும்
சிறு தவளை!

துன்பங்களை
மின்னல் போல்
மின்னி மறைய
செய்தால்,
மானுட சக்தியின்
மகத்துவம்
அங்குதான்
தெரியும்!

மனிதனே!
மனிதனாய்...
நீ இருந்தால்,
இந்த உலகம்
உனக்கு அஞ்சும்!

Friday, 29 March 2013

அன்பும் முக்கனியும்!

அன்பு
அது இறுதியாய்
இனிக்கும்!

இன்பத்தில்
துவங்கும் அன்பு
மாங்கனி போல்!
உள்ளே
விதையெனும்
இடையூறை
சுமந்திருக்கும்!

இன்னலில்
தோன்றும் அன்பு
வாழையை போல்!
இனிப்பாய் சுவைக்க
சிறு தோல் மட்டுமே
தடையாயிருக்கும்!

தடங்கலுக்கு பின்
தோன்றும் அன்பு
பலாவைப் போல்!
போராடிப் பெற்ற
சுளையின் இனிமை
இன்பமாயிருக்கும்!
அது இறுதி வரை
நம்மை காத்திருக்கும்!

கட்டுப்பாடு...

காதலுக்காக
விதிக்கப்படும்
கட்டுப்பாடுகள்.
காதலை
கட்டுப்படுத்துவது
இல்லை!

காதலுக்கு
நாம் விதிக்கும்
கட்டுப்பாடுகள்,
நம்மை
கட்டுப்படுத்தும்!

காதலும்,
கட்டுப்பாடும்,
கட்டுமரத்தின்
துடுப்பும் கையும்
போல!

காதல்...

கரையேறியவனுக்கு
புனிதமானது!

தடுமாறியவனுக்கு
தாறுமாறானது!

இளைப்பாறி
கொண்டிருப்பவனுக்கு
இனிமையானது!

தோல்வி
அடைந்தவனுக்கு
தொழு நோய்
போன்றது!

ஆனால்
உண்மை காதலர்க்கு
காதல்...
காதல்தான்!

உனக்குள்ளே!

உணர்வுகள்
உருபெருவதை
நான்
விரும்புகிறேன்!

உன்னில்
புதைந்திருக்கும்
இனிமையின்
இன்னல்கள்தான்
என்ன?

உன்னிடம்
கிடைக்கும்
சின்னஞ்சிறு
உரசல்களில்,
என் மனம்
அலைபாய்கிறது!

விரைவில்
உனக்குள்ளே...
புதிதாய்
ஒரு மாற்றம்
தோன்றும்!

அதன் பின்னே
நீ எனக்கு!
நான்  உனக்கு!

Thursday, 28 March 2013

கவிதைக்கு தடை!

இனி நான்...
காதலுக்கு
கவி எழுத
போவதில்லை!

ஏனென்றால்
என் கவிதை,
காதலிக்கு
பிடிக்கவில்லை!

வியப்பா?
காதல்
தோல்விக்கு
பின்...
மீண்டும்
எழுதுவேன்!

சிரிப்பில் வஞ்சனை!

அழகில்?
தற்பெருமை!

உடலில்?
வனப்பு!

கனவில்?
கலங்கம்!

மனத்தில்?
நஞ்சு!

சிரிப்பில்?
வஞ்சனை!

அமைதியில்?
சூது!

அறிவில்?
தத்தளிப்பு!

மொத்தத்தில்?
ஏமாற்றம்!

இவைகள்?
என் காதலியிடம்!

உடல்களை மட்டும்...

அடியே!
உன் இதயத்தில்
நுழைய
காத்திருந்த
நேரம்...

அவசரமாய்
குறுக்கு
வழியில்
நுழைந்தாய்
என் வாழ்வில்!

இப்போது...
நீ! என் மனைவி!
இன்னமும்
உன்னிடம்
நான் காதல்
கொள்ளவில்லை!

கவலையில்லை
நம் உடல்களை
மட்டும்
அனைவரும்
வாழ்த்தட்டும்!

Wednesday, 27 March 2013

மரண போராட்டம்!

கனவுகள்
கைகோர்த்து
அழைத்து
சென்றது!

அனால்...
நினைவுகள்
ஆரவாரம்
செய்தது!

கனவுகளும்
கரைசேர
போவதில்லை,
நினைவுகளும்
நிலைக்க
போவதில்லை!

ஓய்வு...
எனைப்பார்த்து
சிரிக்கிறது!
நான்
அதனிடம்
செல்கிறேன்!

அதற்குள்...
அமைதி
என்னை
அவசரமாய்
தழுவி
கொண்டது!

நான்
அமைதியாய்
இருக்கிறேன்!

மரணம்...
என்னை
தழுவ
மறுக்கிறது!
வருந்துகிறேன்!

Tuesday, 26 March 2013

ஆசையின் அடிமைகள்!

மனிதனே!
உன் வாழ்வில்
ஒரு போதும்
மன நிறைவு
வந்ததில்லை!

ஏனாயின்...
நீ! ஆசைக்கு
அடிமை!

சாவில்
மட்டுமே
உனக்கு
கிடைக்கும்
மன நிறைவு!

புத்தர் உன்னை
நிச்சயம்
வாழ்த்துவார்!

கல்லறைக்கு
சென்று,
அவரோடு
கைக் கோர்த்து
கொள்!

Monday, 25 March 2013

கட்டளை!

போ!
அந்த புதுமை
பெண்ணுக்கு
உடனே
மாலையிடு!

அவள்
புன்னகையில்,
சிந்தனை
தெரிகிறது!

பரிதவிப்புகள்!

அடியே!
உன் சிரிப்பில்
பயம் தெரிந்தது,
பாவப்பட்டேன்!

ஏளனம்
தெரிந்தது,
கோபப்பட்டேன்!

ஏக்கம்
தெரிந்தது,
பரிதவித்தேன்!

பற்றுதல்
தெரிந்தது
நேசித்தேன்!

சலனம்
தெரிந்தது,
அனைத்து
கொண்டேன்!

இதோ...
உன் சிரிப்பில்
செருக்கு
தெரிகிறது,
விலகுகிறேன்!

நாளை
உன் சிரிப்பில்
ஏமாற்றம்
தெரியும்!

Sunday, 24 March 2013

இனிமை!

பதுமைக்கு
இளமை
இனிமை!

இளமைக்கு
தனிமை
இனிமை!

தனிமைக்கு
புலமை
இனிமை!

புலமைக்கு
உவமை
இனிமை!

உவமைக்கு
உண்மை
இனிமை!

உண்மைக்கு
தூய்மை
இனிமை!

தூய்மைக்கு
துவளாமை
இனிமை!

துவளாமைக்கு
பொறுமை
இனிமை!

பொறுமைக்கு
நடுநிலைமை
இனிமை!

நடுநிலைக்கு
நன்மை
இனிமை!

நன்மைக்கு
இனிமை
இனிமை!

இனிமைக்கு
இனிமைதான்
இனிமை!

Saturday, 23 March 2013

முரண்பாடுகள்...

விழித்திரையின்
முன்....
மங்கலாய்
தோன்றும்
பிரதி பிம்பங்கள்!

தனி மனித
வாழ்க்கையில்
கரடு முரடாய்
தோன்றும்
சிந்தனை
செருக்குகள்!

உடன் படுவது
மனித நேயம்!
முரண்படுவது
மனித எழுச்சி!

முரண்பாடுகள்
இயற்கையின்
படைப்பில்
தோன்றினால்
அது அழகு!

மனிதனுக்கு
ஏற்பட்டால்
அது மாற்றம்!

மனித மாற்றம்
மனித நேயத்தின்
மாபெரும் இலக்கு!
இந்த மாற்றங்கள்
முரண்பாடுகளின்
வழித்தோன்றல்கள்!

முரண்பாடு
முழு மனிதனை
நிச்சயம்
உருவாக்கும்!

Friday, 22 March 2013

இயந்திர காதல்!

வா எலிசா!

ஏன் அழைத்தாய்
பீட்டர்சன்?

என்னுடன்
பேசு!

என்ன பேச
வேண்டும்?

காதல் மொழி!

அப்படியென்றால்?

கேள்வி பட்டதில்லையா
காதல் பற்றி?

பட்டிருக்கிறேன்!

ஏன் நாமும்
காதல் செய்யக் கூடாது!

செய்யலாம்!

பீட்டர்சன்!
உணர்ச்சியற்ற காதல்
எப்படியிருக்கும்?

உணர்ந்த பின்
தெரியும்!

கட்டித்தழுவ
ஆசையா?

தயாராயிருக்கிறேன்!

முதலில் முத்தமா?

மிகவும் சரி!

ஆ!  அய்யோ!
இயந்திரங்களின்
நேர் முனையும்
எதிர் முனையும்
ஒன்றானதால்,
பீட்டர்சன்னும்
எலிசாவும்
செயலிழந்தார்கள்!

ஆம்!
இனி இயந்திர
மனிதர்கள்
இயங்க
மறந்தார்கள்!

தவிப்பு !

சிந்தனையில்
எழும்
சீர்கேடு!

கவிஞன்
மனதில்
கடைசிவரை
காத்திருக்கும்
காதலி!

காதலரை
அடிக்கடி
துரிதப்படுத்தும்
குத்தூசி!

ஏழ்மைக்கும்,
உயர்வுக்கும்
துணையாய்
இருந்துவரும்
பாதுகாவலன்!

மனிதனை
தொட்டும்,
விட்டும்
விளையாடும்
சூறைக்காற்று!

ஆனால்...
எனக்கு மட்டும்
என் உயிர் மூச்சு
இந்த பாழும்
தவிப்பு!

Thursday, 21 March 2013

மாமன் மகளே! (கிராமிய நடை)

என் மாமன்
மகளே!
முத்திவிட்ட
தேன் கரும்பே!
தேஞ்ச மகன்
நானிருக்க
நலங்குலஞ்சி
நிப்பதுமேன்!

தேர் பவனி
வருகுதுன்னு
தெருவெல்லாம்
சொன்னாக!
ஊர் பவனி
நானும் வர
காத்திருக்கேன்
சில நாளா!

பாவி மக
போனியேடி
பரிதவிக்க
விட்டுவிட்டு! 
அரச்சி வச்ச
சந்தனமா
தெருவெல்லாம்
மணக்குறியே!
ஆட்டிவிட்ட
கொம்பு போல
என் மனசு
தவிக்குதடி!

ஆச மச்சான்
நானிருக்கேன்
ஓடி வந்து
ஒட்டிக்கடி!
உன் வாழ்வ
சுமந்துக்கடி!
அழுது அழுது
தேம்பாதடி!
அடி மனசு
நோகாதடி!

கை பிடிக்க
காத்திருக்கேன்
கலகலன்னு
ஓடி வாடி!

காவல் பூக்கள்!

பூக்களே!
புறமுதுகு
காட்டி ஒடும்
அரசனுக்கு,
அழகு மாலையாக
மாறப் போகிறீர்களா?

கனல் ததும்பி
வீறு கொள்ளும்
கன்னியமான
கட்டழகனுக்கு,
இறுதிப்பயணத்தின்
புகழ் மாலையாய்
மாறப் போகிறீர்களா?

வேண்டாம்!
வேண்டாம்!
நடுநிலை கருதி
காவல் பூக்களாய்
சிறை பட்டு
காத்திருங்கள்!
விரைவில்
கருகி போகலாம்!

கோபம்!

மனிதனின்
சிறு புத்திக்கு
சூட்டப்பட்ட
மறு பெயர்!

சிறு வளையத்தில்
சிக்கி தவிக்கும்
மனிதனுக்கு,
அடிக்கடி
தோன்றும்
பகல் கனவு!

பெண்கள்
நேரம் வரும்
போதெல்லாம்
கை கோர்த்து
விளையாடும்
கைக்குழந்தை!

ஆண்களின்
மனதில்
எப்போதாவது
வரும் தூவானம்!

சென்றடையும்
பொருளையும்,
புறப்பட்ட
இடத்தையும்
சமமாய்
புண்ணாக்கும்
அளவுகோல்!

கோபத்தை
உதிர்த்தவன்
மனதில் நலம்
பெறுவான்!

கோபத்தை
போற்றுபவன்
கோபம் எனும்
தீயில் சிக்கி
தவிப்பான்!

கோபம்
என்றாவது
தோன்றும்
தாகம்!
அதனையே
மோகமாய்
கொள்வது
தவறு!

Wednesday, 20 March 2013

தொலை நோக்கு!

கண்ணுக்கு
தெரிந்தவற்றை
சிந்திக்காத
மனிதன்,
அருகில்
இருக்கும்
ஒன்றை
ஏளனப்படுத்தி,
அவமதிப்பான்!

உலகில் இல்லாத
கேவலமான
ஒன்றை,
உருவப்படுத்தி,
அழகுபடுத்தி,
அலங்கரித்து,
வணங்கி,
கெளரவிப்பான்!

மனிதன்
வடிவம் தந்த
பொய்யான
உருவம்,
காப்பாற்றுமா?
மனிதனை!

இது...
இந்த கவிஞனின்
தொலை நோக்கு!

Tuesday, 19 March 2013

அவளுக்காக...

நான்...
உதடுகளின்
பரிமாற்றத்திற்கு
இன்னமும்
காத்திருக்கிறேன்
அவளுக்காக!

அவள்...
எனது உடல்
புத்துணர்ச்சிக்காக
இன்னமும்
காத்திருக்கிறாள்!

நான்...
கலசத்திற்கு
மெருகேற்ற
துடிக்கிறேன்!

அவள்...
எனது இதய
மாளிகையின்
புனிதத்தை
கலங்கப்படுத்த
விரும்புகிறாள்!

நானும்
அவளும்
காதலிக்கிறோம்!
இருவருக்கும்
அவசரம்!
என்னுடைய
உடல்
அவளுக்கும்,
அவளுடைய
உள்ளம்
எனக்கும் தேவை!

நெருங்கினால்
நசுங்க போவது
காதல்!
காதலின்
தூய்மைக்காக
இன்னமும்
என் இதயம்,
தூரத்தில்
காத்திருக்கிறது
அவளுக்காக!

Monday, 18 March 2013

பகடைக்காய்!!

முகில்
பயமுறுத்தியது,
வீட்டிற்குள்
ஓடினேன்!

நிலவு
பளிச்சிட்டது,
உடனே
வெளியே
வந்தேன்!

நிலவுக்கும்
முகிலுக்கும்
தகராறு!
நான்...
பகடைக்காய்!

கால புத்தகம்!

மனிதா!
கவலையற்று
சுழன்று வரும்
இப்பூவுலகில்,
நீ மட்டும் ஏன்...
உன்மனதை
காதலால்
கறைபடிய
விட வேண்டும்!

உன் பணியில்
புதுமைசெய்!

புதுமையை
புரட்சியாய்
மாற்று!

பிறந்த
மண்ணுக்கு
மாலை சூட்ட
புறப்படு!

உனது நல்ல
செயல்களை
இவ்வுலகிற்கு
காணிக்கை
செய்!

அதன்பின்
இவ்வுலகம்
உன்னை
துணையாக்கி
கொள்ளும்!

காலப்புத்தகத்தில்
நீயும் இடம்பெறுவாய்
நிச்சயமாய்!

Sunday, 17 March 2013

வருத்தம்!

பிரிவுகள்
புள்ளி
வைக்கும்போது,
உறவுகள்
கோலம்
போடுகிறது!

மனிதன்
நசுங்கும்போது
உலகம்
சிரிக்கிறது!

குற்றுச்செடி
தவிக்கும்போது
ஆலமரம்
ஆரவாரம்
செய்கிறது!

இறந்த  பின்னே
உடல்கள்
கழுகுக்கு
இறையாகிறது!

மாற்றங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு பகுதிக்கு
மகிழ்ச்சிதான்
தருகிறது!

ஆனால்
உனை பிரிந்து
நானும்,
எனை பிரிந்து
நீயும்,
வருத்தமாய்
இருக்கிறோம்!

நாமிருவர்க்கு
மகிழ்ச்சி
எப்போது?

காதலும் காமமும்!

அன்புக்கு
உணர்ச்சிகள்
மகுடம்
சூட்டும் போது
காதலாகிறது!

காதல்
உணர்ச்சிகளை
கொளரவிக்கும்
போது
காமமாகிறது!

உணர்ச்சியின்
உச்சத்தில்
காதல்!
காதலின்
உச்சத்தில்
காமம்!

என் கல்லறைக்கு பொன்மொழிகள்!

இன்னமும்
அன்பை ஆழமாய்
தேடிக்கொண்டு
இருக்கிறேன்!

நீங்களும்
உண்மை அன்பை
தேடுங்கள்!
என்னருகில்
உங்களுக்கும்
இடமுண்டு!

இறக்கும் வரை
எனக்கு கிட்டாத
அன்பு...
உங்களுக்காவது
கிடைக்கட்டும்!
வாழ்த்துக்கள்!

Saturday, 16 March 2013

அவசர மோகத்தின் கருகல்!

மலர்ந்த பூக்கள்
உதிர துடிக்கின்றன!

அருகினிலே
ஓடிவரும்
ஆற்று வெள்ளம்!

பூக்களின்
வாசம் பெற
காத்து நிற்கும்
தனிமனிதன்!

கள்ளமாய்
மலர்களை
அடித்து செல்ல
துடிக்கும்
அசுரக்காற்று!

பூக்களுக்கு
காத்திருக்கும்
ஆற்று வெள்ளம்,
தனி மனிதன்,
அசுரக்காற்று!
யாருக்கு பூக்கள்?

அவசரமாய்
கதிரவனின்
காம பார்வை,
பூக்கள்
கருகிவிட்டன
மோகத்தால்!




Friday, 15 March 2013

கதாநாயகி!

பொன்னூஞ்சல்
கட்டி,
நிலாச்சோறு
ஊட்டி,
நடையும்
பழக்கி,
நடைமுறையும்
சொல்லி தந்து,
நல்லவனாய்
செப்பனிட்டாள்
என் அன்னை!

ஆனால்...
புத்தி மாறி,
தரம் கெட்டு,
நெஞ்சில்
உரம் கெட்டு,
பேதையாய்
என்னை மாற்றி,
என் அன்னை
விதைத்த
விதையை,
பதராக்கிய நீ...
யார்?

ஓ! இவ்வுலகின்
புரட்சி பெண்,
கலியுகத்தின்
கதாநாயகி,
என் மனதை
திருடிவிட்ட
என் காதலிதானே!

கவலையில்லை!
இனியாவது
உனது புதுவுலகிற்கு
அழைத்து போ!
புத்தம் புது
நடைமுறைகளை
கற்றுக் கொடு!
என்னை
புது மனிதனாய்
மாற்று!

Thursday, 14 March 2013

நேர் மாறாய்!

மனிதனே!
அன்புடன்
சில வரிகள்!

அன்பு செய்வது
அடிப்படை
உரிமை!

அடிமைப்படுவது
அன்பின்
அவசரம்!

அழகு பெறுவது
இணையும்
அன்பு!

அவதிப்படுவது
ஆழமற்ற
அன்பு!

அன்பு
மனிதனை
உலுக்கும்!

மனிதன்
அன்பை
மதிப்பான்!

அன்புக்கும்
மனிதனுக்கும்
நேர் மாறல்!

மனிதனும்,
அன்பும்,
அன்பு செய்தால்
மட்டுமே
உண்மை அன்பு!

Wednesday, 13 March 2013

நட்பு!

நட்பு
என்பது
அன்பின்
சிகரம்!

அதன்
உச்சியை
முகர்வது
மிகவும்
கடினம்!

மனிதனின்
உயர்ந்த
உள்ளம்
நட்பை
உறுதியாய்
கொண்டால்,
அதுதான்
மாபெரும்
இலக்கு!

உண்மை
நட்புக்கு
ஒரே ஒரு
எதிரி....
அதுதான்
பொய்!

Tuesday, 12 March 2013

செருப்பின் பிதற்றல்!

மனிதனே!
உன்னையொட்டி
உறவாடும் உறவுகள்,
ஒரு போதும்
உன்னுடன் துணையாய்
வருவதில்லை!

ஆனால் நானோ...
நீ! அழைத்த போதெல்லாம்
உன்னுடன் ஒட்டி
உறவாடினேன்!
உன்னை கட்டியும்
காத்தேன்!

நான் கடைப்பெட்டியில்
இருந்தபோது,
எனது மதிப்பு
உன்னை சிந்திக்க
வைத்தது!

ஆனால்...
நான் உன் காலடிக்கு
வந்த பின்னே,
உனது மதிப்பு
என்னை சிந்திக்க
வைத்தது!

கால்களை
கவர்ச்சி படுத்தும்
கொலுசுக்கும்,
மெட்டிக்கும்,
உள்ள உயர்வு...
உன் கால்களை
பாதுகாக்கும்
செருப்புக்கு...
அதுதான்
எனக்கில்லையா?
வருந்துகிறேன்!

இருக்கும் இடத்தில்
இருந்தால்தான்
எதற்கும் மதிப்பு!
கடையில் இருந்தபோது
எனக்கு மதிப்பு!
உன் காலடிக்கு
வந்தபின்னே
எனக்கு அவமதிப்பு!


Monday, 11 March 2013

நினைவு இயந்திரம்!

ஊமை நெஞ்சுக்குள்
வற்றிவிட்ட
நினைவுகளை,
ஒரு நொடியில்
புதுப்பித்த கணினி
நீ!


நான் உன்னை
மீண்டும்
கண்ட போது,
என் பதைக்கும்
இதயம் கூட
அதிர்ச்சியில்
அதிர்ந்தது!

பிரிந்த உன்னை
மறக்க நினைத்து
நான் செய்த
முயற்சிகள்
படு தோல்வி!

உன்னை பார்த்த
பின்னே,
என் நினைவு
இயந்திரம்
மீண்டும் இயங்க
துவங்கிவிட்டது!

ஆம்!
நான் மீண்டும்
என் முகத்தை
கருமையாக்கி,
என் சோகத்தை
வெளிப்படுத்துவேன்!

Sunday, 10 March 2013

இறப்பு!

துன்பப்படுகிறவனை
அமைதிக்கு
கொண்டு செல்லும்
அன்பு தாலாட்டு!

நல்லவனுக்கு
அவசரமாய்
விடை கொடுக்கும்
நயவஞ்சகன்!

நோயாளியின்
நோய் கொடுமையை
நொடிப்பொழுதில்
சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்!

தளர்ந்து போன
முதியவர்க்கு
உடனே கிடைக்கும்
கையூட்டு!

வாழத் துடிப்பவனை
வளைத்து போட்டு
வசைபாடி,
போக துடிப்பவனை
இருக்க வைத்து
விளையாடி,
இன்பம் காணும்
இனிய பொருள்!

தானாய்
செய்துகொள்ளும்
தற்கொலையை
தனக்குள்ளே
அடக்கி கொள்ளும்
கொடிய பொருள்!

மனிதனின் வாழ்வை
அடிக்கடி பயமுறுத்தி
அவன் முன்னேற்றத்திற்கு
தடையாய் அமைந்த
பெருஞ்சுவர்!

இறந்த பின்னால்
தீயவனையும்
நல்லவனாயாக்கும்
உயர்ந்த ஆசிரியன்!

இறப்பே வா!
மக்களை அமைதியில்
தாலாட்டு!

துக்கம்!

இரக்கம் கொண்ட
மனிதனை,
இளைப்பாறும்
இனிய பொருள்!

பசி வந்தால்
குழந்தைக்கு
துக்கம்!
பரிட்சை வந்தால்
மாணவனுக்கு
துக்கம்!

சீறிப்பாய்பவனையும்
சினம் தனிய
வைக்கும்
துக்கம்,
அழுத பின்னும்
ஆறாமல் தான்
போகும்!

இழப்புக்கு பின்னால்
காதலர் பெறும்
துக்கம்,
இறந்த பின்னும்
அடங்காத ஒன்று!

மொத்தத்தில்
இதயத்தை
எட்டிப்பார்க்காத
துக்கம்,
கண்களில் மட்டும்
பொய் கண்ணீர்
வடிக்கும்!

புண்கணீர்
பூசல் தரும்!
வள்ளுவனை
நினைவில்
கொள்வோம்!

Saturday, 9 March 2013

மருத நிலம்!

என் முகத்தில்
முழிக்காதே!
உன்மேல் எனக்கு
மிகுந்த வெறுப்பு
என்றான் கணவன்!

அவசரமாய்
குமட்டினாள் மனைவி
அடுத்த குழந்தைக்கு!
முனகினாள்
மூன்று மாதமென்று!

ஊடலும்
ஊடல் நிமித்தமும்!
மருத நிலத்தின்
கருப்பொருள்தானே!

புதுமைப் பெண்!

இருகிய
பாறையில்
இளந்தளிராய்
தோன்றியவளே!

வற்றிய
பாலைவனத்தில்
வசந்த மலராய்
மணம் வீசியவளே!

ஆழமில்லா
கிணற்றுக்குள்ளே
புது சுனையாய்
வந்தவளே!

மலட்டு
மண்ணின் மேலே
மாஞ்சோலையாய்
கனிந்தவளே!

நீ புதுமைப் பெண்!
ஏன் தெரியுமா?
என் வரண்டுவிட்ட
இதயத்திலும்
புதியக்காதல்
பரவ செய்தாய்!

Friday, 8 March 2013

தவறுகள்!

தவறியவனின் வாழ்வு
தறிகெட்டு போகிறது!
தவறியவளின் வாழ்வு
தரம் கெட்டு போகிறது!

மனிதன் தவறும்போது
உருவாகும் தவறு,
அவன் மீளும்போதும்
அடங்குவதில்லை!

தவறுகளை தரம் பார்க்க
தவறும்போது,
வழங்கும் நீதிகள் கூட
தவறாகிவிடும்!

தவறை தவறியும்
மன்னிக்க தெரியாதவன்,
வாழ்க்கை பாதையில்
தவறிதான் போவான்!

தவறுகளை தவறான
திசைக்கு திருப்பினால்,
அது பெரிய தவறு!

தவறுகளை நடுநிலையில்
ஆலோசித்தால்  அது...
குறைக்கப்பட்ட சிறு தவறு!

தவறுகள் செய்யாதவன்
இவ்வுலகில் இல்லை
எனும்போது -பின்னர்
தவறுகள் எப்படி
தவறுகளாய் மாறும்!

தவறு செய்ய தூண்டுபவன்
வாழ்வில் நெறி தவறிய
பித்தன்!
தவறுக்காக வருந்துகிறவன்
மனிதர் குலத்தின்
ஞானி!

தவறுகளை மதிப்பவன்
துரோகி!
தவறுகளை மிதிப்பவன்
ஏமாளி!
தவறுகளை தவறாய்
எண்ணாதவன் மட்டுமே
யோகி!

தவறுகள் மனிதனின்
அழகை, குணத்தை,
வெளிப்படுத்தும்
ஆபரணங்கள்!

Thursday, 7 March 2013

கருங்கல்!

அடியே
உன்னை நான்
உரசாத போது
ஒன்றுமறியாத
பச்சை மண்!

உன்னைக் காதல்
கொண்டபின்,
என் மனம்
ஒரு சுட்ட செங்கல்!

உன் காதலை
இழந்தபின்,
என் மனம்
என்றும் உடையாத
கருங்கல்!

கல்வி!

மனிதனை
தன்னலமின்றி
கலங்கரை
விளக்கமாய்
மாற்றும்
உயர் பொருள்!

கற்றவனின்
புகழையும்,
கல்லாதவனின்
அவமதிப்பையும்,
பொருமையுடன்
ஏற்றுக்கொள்ளும்
அன்புத் தாய்!

மக்களின்
மூடத்தனத்திற்கு
முதல் எதிரி!

கல்வி கற்கவும்
பணம் வேண்டும்,
பணம் ஈட்டவும்
கல்விவேண்டும்,
சில மதியற்றவர்க்கு
கல்வி ஒரு வணிகம்!

முழுமையாய் கல்வி...
ஒரு கறை படியாத
கன்னிப் பெண்!
மனிதனே!
கல்வி மேல்
காதல் கொள்!

உனதாக்கிக் கொள்!

பெண்னே!
நான் பேசிவரும்
காதல் மொழியில்
இனிமை இல்லையா?

நான்
புனைந்துவரும்
புதுக்கவிதையில்
புரட்சி இல்லையா?

என்
உணர்ச்சியின்
உந்துதலில்
உயர்வு இல்லையா?

நான்
பழகிவரும்
பழக்கத்தில்
பற்று இல்லையா?

இவைகளை
உனதாக்கிக் கொள்!
ஆம்! காதலிக்க
கற்றுக்கொள்!
இவை யாவும்
இனிக்கும் உனக்கும்!