Monday, 11 March 2013

நினைவு இயந்திரம்!

ஊமை நெஞ்சுக்குள்
வற்றிவிட்ட
நினைவுகளை,
ஒரு நொடியில்
புதுப்பித்த கணினி
நீ!


நான் உன்னை
மீண்டும்
கண்ட போது,
என் பதைக்கும்
இதயம் கூட
அதிர்ச்சியில்
அதிர்ந்தது!

பிரிந்த உன்னை
மறக்க நினைத்து
நான் செய்த
முயற்சிகள்
படு தோல்வி!

உன்னை பார்த்த
பின்னே,
என் நினைவு
இயந்திரம்
மீண்டும் இயங்க
துவங்கிவிட்டது!

ஆம்!
நான் மீண்டும்
என் முகத்தை
கருமையாக்கி,
என் சோகத்தை
வெளிப்படுத்துவேன்!

No comments:

Post a Comment