Thursday, 21 March 2013

மாமன் மகளே! (கிராமிய நடை)

என் மாமன்
மகளே!
முத்திவிட்ட
தேன் கரும்பே!
தேஞ்ச மகன்
நானிருக்க
நலங்குலஞ்சி
நிப்பதுமேன்!

தேர் பவனி
வருகுதுன்னு
தெருவெல்லாம்
சொன்னாக!
ஊர் பவனி
நானும் வர
காத்திருக்கேன்
சில நாளா!

பாவி மக
போனியேடி
பரிதவிக்க
விட்டுவிட்டு! 
அரச்சி வச்ச
சந்தனமா
தெருவெல்லாம்
மணக்குறியே!
ஆட்டிவிட்ட
கொம்பு போல
என் மனசு
தவிக்குதடி!

ஆச மச்சான்
நானிருக்கேன்
ஓடி வந்து
ஒட்டிக்கடி!
உன் வாழ்வ
சுமந்துக்கடி!
அழுது அழுது
தேம்பாதடி!
அடி மனசு
நோகாதடி!

கை பிடிக்க
காத்திருக்கேன்
கலகலன்னு
ஓடி வாடி!

No comments:

Post a Comment