Friday, 8 March 2013

தவறுகள்!

தவறியவனின் வாழ்வு
தறிகெட்டு போகிறது!
தவறியவளின் வாழ்வு
தரம் கெட்டு போகிறது!

மனிதன் தவறும்போது
உருவாகும் தவறு,
அவன் மீளும்போதும்
அடங்குவதில்லை!

தவறுகளை தரம் பார்க்க
தவறும்போது,
வழங்கும் நீதிகள் கூட
தவறாகிவிடும்!

தவறை தவறியும்
மன்னிக்க தெரியாதவன்,
வாழ்க்கை பாதையில்
தவறிதான் போவான்!

தவறுகளை தவறான
திசைக்கு திருப்பினால்,
அது பெரிய தவறு!

தவறுகளை நடுநிலையில்
ஆலோசித்தால்  அது...
குறைக்கப்பட்ட சிறு தவறு!

தவறுகள் செய்யாதவன்
இவ்வுலகில் இல்லை
எனும்போது -பின்னர்
தவறுகள் எப்படி
தவறுகளாய் மாறும்!

தவறு செய்ய தூண்டுபவன்
வாழ்வில் நெறி தவறிய
பித்தன்!
தவறுக்காக வருந்துகிறவன்
மனிதர் குலத்தின்
ஞானி!

தவறுகளை மதிப்பவன்
துரோகி!
தவறுகளை மிதிப்பவன்
ஏமாளி!
தவறுகளை தவறாய்
எண்ணாதவன் மட்டுமே
யோகி!

தவறுகள் மனிதனின்
அழகை, குணத்தை,
வெளிப்படுத்தும்
ஆபரணங்கள்!

No comments:

Post a Comment