Monday, 18 March 2013

கால புத்தகம்!

மனிதா!
கவலையற்று
சுழன்று வரும்
இப்பூவுலகில்,
நீ மட்டும் ஏன்...
உன்மனதை
காதலால்
கறைபடிய
விட வேண்டும்!

உன் பணியில்
புதுமைசெய்!

புதுமையை
புரட்சியாய்
மாற்று!

பிறந்த
மண்ணுக்கு
மாலை சூட்ட
புறப்படு!

உனது நல்ல
செயல்களை
இவ்வுலகிற்கு
காணிக்கை
செய்!

அதன்பின்
இவ்வுலகம்
உன்னை
துணையாக்கி
கொள்ளும்!

காலப்புத்தகத்தில்
நீயும் இடம்பெறுவாய்
நிச்சயமாய்!

No comments:

Post a Comment