Friday, 15 March 2013

கதாநாயகி!

பொன்னூஞ்சல்
கட்டி,
நிலாச்சோறு
ஊட்டி,
நடையும்
பழக்கி,
நடைமுறையும்
சொல்லி தந்து,
நல்லவனாய்
செப்பனிட்டாள்
என் அன்னை!

ஆனால்...
புத்தி மாறி,
தரம் கெட்டு,
நெஞ்சில்
உரம் கெட்டு,
பேதையாய்
என்னை மாற்றி,
என் அன்னை
விதைத்த
விதையை,
பதராக்கிய நீ...
யார்?

ஓ! இவ்வுலகின்
புரட்சி பெண்,
கலியுகத்தின்
கதாநாயகி,
என் மனதை
திருடிவிட்ட
என் காதலிதானே!

கவலையில்லை!
இனியாவது
உனது புதுவுலகிற்கு
அழைத்து போ!
புத்தம் புது
நடைமுறைகளை
கற்றுக் கொடு!
என்னை
புது மனிதனாய்
மாற்று!

No comments:

Post a Comment