Saturday, 23 March 2013

முரண்பாடுகள்...

விழித்திரையின்
முன்....
மங்கலாய்
தோன்றும்
பிரதி பிம்பங்கள்!

தனி மனித
வாழ்க்கையில்
கரடு முரடாய்
தோன்றும்
சிந்தனை
செருக்குகள்!

உடன் படுவது
மனித நேயம்!
முரண்படுவது
மனித எழுச்சி!

முரண்பாடுகள்
இயற்கையின்
படைப்பில்
தோன்றினால்
அது அழகு!

மனிதனுக்கு
ஏற்பட்டால்
அது மாற்றம்!

மனித மாற்றம்
மனித நேயத்தின்
மாபெரும் இலக்கு!
இந்த மாற்றங்கள்
முரண்பாடுகளின்
வழித்தோன்றல்கள்!

முரண்பாடு
முழு மனிதனை
நிச்சயம்
உருவாக்கும்!

No comments:

Post a Comment