Saturday, 9 March 2013

மருத நிலம்!

என் முகத்தில்
முழிக்காதே!
உன்மேல் எனக்கு
மிகுந்த வெறுப்பு
என்றான் கணவன்!

அவசரமாய்
குமட்டினாள் மனைவி
அடுத்த குழந்தைக்கு!
முனகினாள்
மூன்று மாதமென்று!

ஊடலும்
ஊடல் நிமித்தமும்!
மருத நிலத்தின்
கருப்பொருள்தானே!

No comments:

Post a Comment