Tuesday, 5 March 2013

புதிய க(வி)தை!

பழைய நினைவை
எழுதச்சொல்லி
என் எழுதுகோலை
கேட்டுக்கொண்டேன்!

நான் புதிய கதை
மட்டுமே
எழுதுவேன்
என்றது!
ஏனென்றேன்?  நான்!

நேற்றுவரை
உனை நினைத்த
உன் காதலி,
காதலை மறக்கலியா?
நான் மட்டும்
ஏன் பழங்கதை
எழுதவேண்டுமென்று,
சிரித்துக்கொண்டே
மை சிந்தியது
புதிய கதைக்கு!

No comments:

Post a Comment