Thursday, 21 March 2013

கோபம்!

மனிதனின்
சிறு புத்திக்கு
சூட்டப்பட்ட
மறு பெயர்!

சிறு வளையத்தில்
சிக்கி தவிக்கும்
மனிதனுக்கு,
அடிக்கடி
தோன்றும்
பகல் கனவு!

பெண்கள்
நேரம் வரும்
போதெல்லாம்
கை கோர்த்து
விளையாடும்
கைக்குழந்தை!

ஆண்களின்
மனதில்
எப்போதாவது
வரும் தூவானம்!

சென்றடையும்
பொருளையும்,
புறப்பட்ட
இடத்தையும்
சமமாய்
புண்ணாக்கும்
அளவுகோல்!

கோபத்தை
உதிர்த்தவன்
மனதில் நலம்
பெறுவான்!

கோபத்தை
போற்றுபவன்
கோபம் எனும்
தீயில் சிக்கி
தவிப்பான்!

கோபம்
என்றாவது
தோன்றும்
தாகம்!
அதனையே
மோகமாய்
கொள்வது
தவறு!

No comments:

Post a Comment