Thursday, 7 March 2013

கல்வி!

மனிதனை
தன்னலமின்றி
கலங்கரை
விளக்கமாய்
மாற்றும்
உயர் பொருள்!

கற்றவனின்
புகழையும்,
கல்லாதவனின்
அவமதிப்பையும்,
பொருமையுடன்
ஏற்றுக்கொள்ளும்
அன்புத் தாய்!

மக்களின்
மூடத்தனத்திற்கு
முதல் எதிரி!

கல்வி கற்கவும்
பணம் வேண்டும்,
பணம் ஈட்டவும்
கல்விவேண்டும்,
சில மதியற்றவர்க்கு
கல்வி ஒரு வணிகம்!

முழுமையாய் கல்வி...
ஒரு கறை படியாத
கன்னிப் பெண்!
மனிதனே!
கல்வி மேல்
காதல் கொள்!

No comments:

Post a Comment