Friday, 1 March 2013

உடலும் உள்ளமும்!

பலமுறை
துவண்ட பின்னும்
துளிர்விடும் காதல்,
உண்மை இதயத்தில்
சூழ்ந்திருக்கும்
பசுமை மாறா காடு!

உடல்வழி காதல்
ஒருமுறைதான்
தோன்றும்,
அத்துடனே மறையும்!

உள்ளவழி காதல்
நாள்முழுதும்
நல்ல காதலரை,
ஆழ்ந்து தேடும்!

அது ஒருவரா?
ஓராயிரம் பேர்களா?
எத்தனை முறை
தத்தளித்தாலும்,
நிலையான
காதல் முத்து
கிடைக்காமல்
அடங்காது!

இதயத்தேடல்
சாகும்வரை ஓயாது!
ஒருவனுக்கு ஒருத்தி
உண்மை காதலுக்கு
பொருந்தாது!

உடல்வழி காதல்
உணர்ச்சியுடன்
முடிந்துவிடும்!
உள்ள வழி காதல்
ஆயிரமானாலும்
அன்பு கொண்ட
நெஞ்சத்தை
தேடியே தீரும்!
தோல்விக்கு பின்னும்
தளிர் விட்டே தீரும்!

Sharing of love doesn't cause any others individual love!
                                        -Alex S.Connonly.

No comments:

Post a Comment