மனிதனே!
உன்னையொட்டி
உறவாடும் உறவுகள்,
ஒரு போதும்
உன்னுடன் துணையாய்
வருவதில்லை!
ஆனால் நானோ...
நீ! அழைத்த போதெல்லாம்
உன்னுடன் ஒட்டி
உறவாடினேன்!
உன்னை கட்டியும்
காத்தேன்!
நான் கடைப்பெட்டியில்
இருந்தபோது,
எனது மதிப்பு
உன்னை சிந்திக்க
வைத்தது!
ஆனால்...
நான் உன் காலடிக்கு
வந்த பின்னே,
உனது மதிப்பு
என்னை சிந்திக்க
வைத்தது!
கால்களை
கவர்ச்சி படுத்தும்
கொலுசுக்கும்,
மெட்டிக்கும்,
உள்ள உயர்வு...
உன் கால்களை
பாதுகாக்கும்
செருப்புக்கு...
அதுதான்
எனக்கில்லையா?
வருந்துகிறேன்!
இருக்கும் இடத்தில்
இருந்தால்தான்
எதற்கும் மதிப்பு!
கடையில் இருந்தபோது
எனக்கு மதிப்பு!
உன் காலடிக்கு
வந்தபின்னே
எனக்கு அவமதிப்பு!
உன்னையொட்டி
உறவாடும் உறவுகள்,
ஒரு போதும்
உன்னுடன் துணையாய்
வருவதில்லை!
ஆனால் நானோ...
நீ! அழைத்த போதெல்லாம்
உன்னுடன் ஒட்டி
உறவாடினேன்!
உன்னை கட்டியும்
காத்தேன்!
நான் கடைப்பெட்டியில்
இருந்தபோது,
எனது மதிப்பு
உன்னை சிந்திக்க
வைத்தது!
ஆனால்...
நான் உன் காலடிக்கு
வந்த பின்னே,
உனது மதிப்பு
என்னை சிந்திக்க
வைத்தது!
கால்களை
கவர்ச்சி படுத்தும்
கொலுசுக்கும்,
மெட்டிக்கும்,
உள்ள உயர்வு...
உன் கால்களை
பாதுகாக்கும்
செருப்புக்கு...
அதுதான்
எனக்கில்லையா?
வருந்துகிறேன்!
இருக்கும் இடத்தில்
இருந்தால்தான்
எதற்கும் மதிப்பு!
கடையில் இருந்தபோது
எனக்கு மதிப்பு!
உன் காலடிக்கு
வந்தபின்னே
எனக்கு அவமதிப்பு!

No comments:
Post a Comment