Monday, 2 June 2014

என் தந்தையின் நினைவு நாள்! (10.04.14)

எனது உயிரே!
உயிரின் மருந்தே!
உயர்வின் சிறப்பே!
ஓய்வறியா உழைப்பே!
அன்பின் உச்சமே!
அரவணைப்பின்
திறந்த கதவே!
பகுத்தறிவின் சுடரே!

தியாகத்தின்
நன்கொடையே!
என்னை உருவாக்கி
வழி நடத்திய
வள்ளலே!
எனக்குள் அன்பை
திணித்து...
இவ்வுலகமெல்லாம்
அன்பை விதைத்த,
அன்பே! என் தந்தையே!
நீவிர் மறைந்த நாள்...
நான் உறைந்த நாள்!
இப்போதும்...
உமது குணத்தில்,
எனது உருவத்தில்
நடை பயில்கிறேன்,
நீங்கா நினைவுகளோடு!

No comments:

Post a Comment