சர்க்கரை!
தேனும் சர்க்கரையும்
கலந்த உன் தெவிட்டாத
பேச்சில் திசைமாறி,
நானும் உன் மேல்
காதல் கொண்டேன்!
காதல் வலையில்
சிக்கிய இந்த சிறு மீனை,
உன் கயல் விழியால்...
திரும்பி பார்க்காமல்,
திசை மாறி போன
மாயம்தான் என்ன?
அழகு தேடி...
அலைகின்றாயா?
என் காதலை விட
வேறேது அழகு
இவ்வுலகில்?
No comments:
Post a Comment