Tuesday, 31 December 2013

சுகம் தந்த சோகம்!

சுற்றி திரிந்து
சுகம் கண்ட
வண்டாய் நான்!
மயங்கியதால்
மாம்பழத்து வண்டு!

இப்போது எனக்கு
மீண்டும் விடுதலை!
மீண்டும் மீண்டும்
அழகை ரசிக்க
புறப்படுகிறேன்!


உடனாய் கிடைத்த
அதிரடி தடை...
அது அவள்
அணிந்திருந்த உடை!
தடங்கலுக்கு
வருந்துகிறேன்!

சுகம் தந்த
சோகமாய்...
மீண்டும் என்னை
மாம்பழத்துக்குள்
புதைத்துக் கொள்வேன்!

No comments:

Post a Comment