Saturday, 4 January 2014

கவிதைக்கு பின்...

என் கவிதைக்கு
பின்னால்...
காதல் அழுதது!

வாழ்வின் வசந்தம்
வகை தெரியாமல்
போனது!


மோகம் கூட...
முகவரியில்லா
சுவடுகளாய்
மறைந்தது!

காலம்
கைகோர்த்த பின்னே,
என்னையே நான்
யாரென்று கேட்டேன்!
அதன் பின்னே...
என்னை நானே
ரசித்தேன்!

No comments:

Post a Comment