சாகும் வரை...
சூழ் நிலையில்
நான் செய்த
தவறுகள் கூட...
என் மனமென்னும்
நீதி மன்றத்தில்,
சரியென்று
தீர்ப்பு பெற்றவை!
உலகின் கண்களுக்கு
தவறாய் பட்டது,
எனக்கு சரி!
எனக்கு சரியாய்
பட்டது...
எனக்கு மட்டுமே சரி!
என் மனம்
நான் சாகும் வரை
சாகாது!
என் எண்ணங்கள்
நான் ஓயும் வரை
ஓயாது!
No comments:
Post a Comment