Thursday, 23 January 2014

எப்போது மறைவாய்...

மின்னலாய்
ஒளிர்ந்திருந்தால்...
என் மேனி பட்டு
விலகியிருக்கும்!

வானவில்லாய்
என்னை
வட்டமிட்டிருந்தால்...
அது கனவாய்
கன நேரத்தில்
மறைந்திருக்கும்!


மழையாய்
பொழிந்திருந்தால்...
என் மேனி பரவி
சிறிது நேரம்
சில்லிட்டு
காய்ந்துவிடும்!

இடியாய் கூட
இறங்கியிருந்தால்...
என் உடல் தகர்த்து
இளைப்பாறி
சென்றிருக்கும்!

என் உடலுக்கு
உடலாய்,
என் உள்ளத்துக்கு
உள்ளமாய்,
என் உயிருக்கு
உயிராய்...
கலந்த அவள்
எப்போது மறைவாள்?


No comments:

Post a Comment