Saturday, 4 January 2014

உயிரோவியமாய்...

மோகப் புயலின்
இறுதி அத்தியாயம்!
இதம் தந்த வாழ்வின்
எண்ணற்ற...
இன்னல்கள்!

ஓடி உழைத்த
உடலும்...
இதயத்தால்
தடம் புரண்டு,
நடை பிணமாய்!

நான்கு சுவருக்குள்
பூட்ட முடியாத
நச்சு சிரிப்புகள்!


சோகத்துக்குள்ளும்
தாகம் தீர்ந்ததென்று,
கேளி செய்தவளின்
வேகத்துக்கு...
இடைக்காலத் தடை!

என் எண்ணக்
குமுறலால்...
நெஞ்சத்தில் கீறல்!
ஆனாலும் அவள்
என் மனதில்
என்றென்றும்
உயிரோவியமாய்!

No comments:

Post a Comment