Saturday, 4 January 2014

முகர்ந்த பூவாய்...

சோக வரிக்கு
சொர்க்கம் தந்த
அவளின்...
தாக வரிக்கு,
நரகத்தையா
தந்தேன்!

உயர்ந்த
பிறப்பினில்...
உன்னத வாழ்வாய்
எண்ணியதை,
முகர்ந்த பூவாய்
வீசி எறிந்தாள்!


மனதை மதிப்பாள்
என நினைத்து,
இனிமையில்
திளைத்த கண்களில்
மண்ணைத் தூவி,
மதிப்பை குறைத்தாள்!

மாறுபட்ட கருத்தால்,
அவசர சீற்றத்தால்,
எனது அன்பு உள்ளத்தை
அழித்தாள்!

No comments:

Post a Comment