Saturday, 4 January 2014

புழுவாய்...

என் இதயம்...
இனி புழுவாய்
மாறி அழிந்தாலும்
அழியுமே அன்றி,
இனியும் அவளின்
உறவுக்கு...
உரிமையில்லை!

அவள் வகுத்து
தந்த வழியில்,
என் கால்கள்
அடியெடுத்து
வைக்க...
மறுக்கின்றன!


உறங்கிய
பின்னும்
ஓர விழியில்
அவளின் உருவம்
பதித்த தடம்,
எப்படி ஓய்ந்திருக்கும்?

காலத்தின் மாற்றம்
என்னை அவள்
கணக்கில் மின்னி
மறைந்த காதலனாய்
நினைத்து...
ஒதுங்கிவிட்டாள்!

பசுமையாய்
இருக்கும்போதே,
அவளுக்கு...
பாலைவன
கனவுகள்!

தோற்றமும்,
ஏற்றமும்,
என்றென்றும்
மாறலாம்!
அவள்....?





No comments:

Post a Comment