Saturday, 4 January 2014

சிந்தாத...

கூடி களித்து
ஒன்றாய் வாழ்ந்த,
சகோதரனின்
இதய ஓய்வுக்கு...
அவள் பூட்டிய
வாழ்க்கை
குதிரையை,
அவசர அவசரமாய்
சாட்டை கொண்டு,
அடித்து ஓட்டியதுதான்
காரணமோ?


அவள் நலமாய்...
ஆனால் நானோ
ஆயுளுக்கும்
சிந்தாத ஒரு துளி
கண்ணீரை?

சிதைந்த
என் இதயம்...
இனிமைக்காக
ஓய்வு தேடுகிறது!

No comments:

Post a Comment