புதைக்குழி!
புயல் விடும் நேரம்
என நான்
நினைத்த போது
திடீரென்று
வெடித்த பூகம்பம்!
தடுமாறிய வழியில்
தடம்மாற அவசரத் தடை!
வேள்வித் தீயின்
கொடுங்குணம்
அவளின் பழிப்படலம்!
என்னை
நல்வழிபடுத்த,
அவள் அழைத்து
சென்ற இடம்
புதைக் குழி!
என் உயிர்
அடங்கும்போதாவது
உண்மைக் காதல்
தளிர் விடுமா?
No comments:
Post a Comment