Wednesday, 4 December 2013

உலவப் போகிறாய்?

இலைகள் பரவி
முகம் புதைத்த
பனித்துளியாய்,
இரவு முழுவதும்
என் மேல்...
தாகம் கொண்டு,
வெறுப்புடன்
பகலில்
விலகுகிறாயே?


நான் என்ன
உன் கபட
நாடகத்தில்
வஞ்சிக்க
பட்டவனா?

அடியே!
இலையுதிர்
காலத்தில்
இலைகளும்
உதிரும்,
அன்று நீ!
பனித்துளியாய்...
அல்ல! அல்ல!!
என் நெஞ்ச
கொதிப்பில்,
நீராவியாய்தான்
உலவப்போகிறாய்!

No comments:

Post a Comment