Thursday, 19 December 2013

சொல்லாமலே!

என் மனம்
வருடிய போதெல்லாம்,
என் தலை நீவி
என்னை இதமாக்கி
தந்தவள்!

என் சோகத்தை கூட
சுகமாய் மாற்றி,
என்னை இளைப்பாற
செய்தவள்!

என் மகிழ்ச்சியை
தனதாகிக்கொண்டு,
அதனை எனக்கே
தானமாய் தந்தவள்!


நான் அடியெடுத்து
வைத்த போதெல்லாம்,
தோள் கொடுத்து
என்னை அடிபிறழாமல்
காத்தவள்!

என் கண்ணீர்த்துளிக்கு கூட
காவலாய் நின்ற
எனது பாசவலை யார்?
உங்களுக்கு சொல்லாமலே
என் மனதுக்குள்!

No comments:

Post a Comment