Wednesday, 13 November 2013

எழுப்புவாயா?

நீண்ட
இடைவெளிக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான்...
கண் விழித்திருக்கிறேன்!

எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில் நான்...
குதூகலம் பெற்றேன்!

ஒன்றிரண்டு
பெண்களை
கோபக்கனலில்
இழந்தும் விட்டேன்!


அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்
மலை போல்
குவிந்தாலும்,
அதனை துகளாக்கி
காற்றில்...
பறக்கவிட்டேன்!

திமிர் கொண்ட
இரத்தம் இன்னமும்
என்னோடு!
உன் ஏக்கப் பார்வையில்
கண்ணீரை கண்டேன்!

இதோ...
ஓய்ந்துவிட்டேன்!
இனி எனக்குள்
துடிப்பை நீதான்...
நிலாச்சோறாய்
ஊட்ட வேண்டும்!

சிங்கம்...
வண்ணக்கனவுகளுடன்
உலா வர போகிறது,
தட்டி எழுப்புவாயா
மீண்டும் காதலை!

No comments:

Post a Comment